ரஷ்ய ஜனாதிபதி புடின்

ரஷ்ய ஜனாதிபதி புடின்

தொடரும் சர்வதேச படுகொலைகள் – தேசம் திரை காணொளி!

இவ்வாரம் சர்வதேச அரசியல் சூழலில் மிக முக்கியமான வாரம். சர்வதேச அரசியலில் யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அதன் சாதக பாதகங்களும் அமையும். பல் துருவ அரசியல் வலுப்பெற்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் இராணுவ அரசியல் ஆளுமையின் பலம் முன்னைய நிலையிலிருந்து சற்று பலவீனப்பட்டுப் போயுள்ளதன் பின்னணியில் இவற்றைக் காணலாம்.

 

மேற்குலகின் முழு ஒத்துழைப்புடன் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு 53 நாடுகளும் மூன்று நிறுவனங்களும் இணைந்து தொடுத்துள்ளன. பெப்ரவரி 19இல் ஆரம்பமான இவ்வழக்கில் 76 ஆண்டுகள் பாலஸ்தீனிய மண் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீனிய மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் சட்டத்தன்மை பற்றியும் சர்வதேச நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு, இஸ்ரேவேலின் ஊழல் குற்றவாளியும் இனப்படுகொலை பிரதமருமான பென்ஜமின் நெதன்யாகு கட்டுப்படப்போவதில்லை.

இதன் தொடர்ச்சியான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

“பாலஸ்தீன் – இஸ்ரேல் மோதலுக்கு அமெரிக்காவே காரணம்.” – புடில் சாடல்!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் என இரண்டு பக்கமும் அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான், இந்த போருக்கு மூல காரணம் என்று ரஷ்யா விமர்சித்துள்ளது.

 

இஸ்ரேல் – பாலத்தீன போர் தற்போது சர்வதேச போராக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மிகப்பெரிய போராக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பிரச்சனையில், தற்போது மற்ற நாடுகள் தலையிட்டு வருகின்றன. அமெரிக்கா ஏற்கனேவே போர் கப்பல்களை, ஆயுத தளவாடங்களை அங்கே அனுப்பி உள்ளது.

இதில் தற்போது மறைமுகமாக சவுதி – ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடும் தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் சவுதி – இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்க இருந்தது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை.

 

இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை, இஸ்ரேல் தாக்கி வருகிறது.

இந் நிலையில் இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவிக்கையில்,

அமெரிக்காவின் மத்திய கிழக்கு பகுதிக்கான கொள்கைகளின் தோல்விகளுக்கு இது ஒரு தெளிவான உதாரணம்.

அமெரிக்கா சமாதான தீர்வை ஏகபோகமாக கொண்டு வர முயன்றது. தாங்கள் வைத்ததுதான் சட்டம், நாங்கள் மட்டுமே அமைதியை கொண்டு வருவோம் என்று நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமைதிக்கு பதிலாக தற்போது போர்தான் உருவாகி உள்ளது.

இரண்டு பக்கமும் அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான் இந்த போருக்கு காரணம். பாலஸ்தீன மக்களின் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் பார்க்கவில்லை. அவர்களை கணக்கிலேயே கொள்ளாமல் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள்தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம்.

 

ஐநா இந்த விவகாரத்தில் தனிப்பட்ட பாலஸ்தீனம் என்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதை இஸ்ரேலும் அமெரிக்காவும் மதிக்கவில்லை.

தனி பாலஸ்தீனம் மட்டுமே இந்த மோதலுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். பாலஸ்தீன மக்களின் தனிப்பட்ட கவலைகள், பிரச்சனைகள் பற்றி அமெரிக்கா யோசிக்கவில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் விமர்சித்துள்ளார்.

யார் இந்த யெவ்ஜெனி பிரிகோஸின்..? – வாக்னர் ஆயுதக் குழுவின் பின்னணி என்ன..?

உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட தனியார் இராணுவ கூலிப்படையினர் எனக் கூறப்படும் வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்யாவில் தடை உள்ளது. எனினும், ரஷ்யா – உக்ரைன் போர் உச்சத்தில் இருந்தபோது, பக்முட் நகரைக் கைப்பற்றுவதில் வாக்னர் குழுவினர் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், தற்போது வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அரசு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், ரஷ்யாவுக்கு எதிராக அக்குழுவினர் திரும்பியுள்ளதாகத் தெரிகிறது.

வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அதிபர் எச்சரிக்கை - Daily Ceylon

இந்த நிலையில் ’ரஷ்ய ராணுவத் தலைமையை அழிப்போம் என்றும், எங்கள் வழியில் யார் குறுக்கே வந்தாலும் துவம்சம் செய்வோம்’ என்றும் வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே ரஷ்ய ராணுவத்தைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதிக்குள் தங்கள் படைகள் நுழைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்டிருந்த ஆடியோ ஒன்றில், “நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை எதிர்த்து முன்னேறுகிறோம். வழியில் எது தடையாக இருந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம்” என்று எச்சரித்திருந்தார்.

மற்றொரு ஆடியோ ஒன்றில், “புடினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் மாஸ்கோ உட்பட பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப் போராட்டத்திற்குத் தூண்டுவதாக வாக்னர் தலைவர் பிரிகோஸினை கைதுசெய்ய உத்தரவிட்டுள்ள ரஷ்ய அரசு, சட்ட விரோத நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், “மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேசத்துரோகிகள் ஆவர். ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்தின் முதுகில் குத்திவிட்டனர். ரஷ்யாவில் உள்நாட்டுப் போரை அனுமதிக்க முடியாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்தச் சூழலில் தனி நபர்களின் தனிப்பட்ட விருப்ப வெறுப்புகள் தேசத் துரோகமாகும்.

ஆயுதக் கிளர்ச்சியை தூண்டிய தலைவர் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்திடம் சரண் அடைய கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே உக்ரைன் போர் காரணமாக நெருக்கடியில் உள்ள ரஷ்யாவுக்கு இந்த உள்நாட்டுப் பிரச்னை புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உக்ரைன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர முயன்றது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யாவுக்கு உதவும் வகையில் பணியமர்த்தப்பட்ட தனியார் ராணுவ ஒப்பந்ததாரர்களே வாக்னர் ஆயுதக் குழுவினர். சிரியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் செயல்பாட்டில் உள்ள இந்தக் குழு, போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருவதாகத் தொடர் குற்றச்சாட்டுக்கும் ஆளானது.

2014இல் ரஷ்யா, கிரிமியாவை இணைத்தபோது வாக்னர் குழு முதலில் செயல்பட்டதாக நம்பப்படுகிறது. ரஷ்ய சிறைகளில் உள்ள குற்றவாளிகளைத் தங்களது குழுவில் வாக்னர் இணைத்துக் கொள்வதாகவும், 2022 நவம்பருக்கு முன்பு, ரஷ்ய சிறைகளில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 23,000க்கும் அதிகமாகக் குறைந்திருப்பதாகவும் தரவு ஒன்று கூறுவதாக பிரிட்டன் அதிகாரிகள் கடந்த 6 மாதத்திற்கு முன்பே குறிப்பிட்டுள்ளனர்.

தவிர, இந்தக் காலகட்டத்தில்தான் வாக்னர் குழு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் பல குற்றவாளிகள் வாக்னருடன் இணைந்ததாக நம்பப்படுகிறது. குழுவில் இணைந்து பணியாற்றும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதோடு, ஆறு மாதங்கள் பணியாற்றிய பின்னர் அவர்களது தண்டனையும் குறைக்கப்படும் என்று அவர்களிடம் கூறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளரான ஜான் கிர்பி, ”இந்தக் குழு இப்போது அதிகாரத்தில் உள்ள ரஷ்ய ராணுவத்திற்குப் போட்டியாக இருக்கும்” என கடந்த 6 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வாக்னர் குழுத் தலைவராக இருப்பவர்தான் யெவ்ஜெனி பிரிகோஸின். இவர் குழுவிலான ராணுவ அமைப்பு, உக்ரைனில் பல பகுதிகளைச் சேதப்படுத்தியதிலும் கைப்பற்றியதிலும் தூணாகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், உக்ரைனில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, யெவ்ஜெனி பிரிகோஸின் உலக நாடுகளின் கவனத்தை பெற்றார். இவர்தான் தற்போது ரஷ்ய அரசுக்கு எதிராக மாஸ்கோ கூலிப்படையை இணைத்துக்கொண்டு உள்நாட்டுப் போரைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்று ரஷ்ய அரசை அச்சுறுத்தி வரும் பிரிகோஸின், கடந்த 1961ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தவர். 1981ஆம் ஆண்டு, கொள்ளை மற்றும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த பிரிகோஸினுக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அதிலிருந்து விடுதலையான அவர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உணவகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்தச் சூழலில்தான் அப்போது நகரின் துணை மேயராக இருந்த புடினின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதன்மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி உள்ளனர். மேலும் புடினின் நட்பு வட்டத்தால் சமையல் வணிகத்தில் அவர், ரஷ்ய அரசாங்க ஒப்பந்தங்களை அதிகமாகப் பெற்றுள்ளார். இதனால், ’புடினின் சமையல்காரர்’ என்றும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறார்.

ரஷ்ய ராணுவத்தால் செய்ய முடியாத சில சட்டவிரோதச் செயல்களை விளாடிமிர் புடின், வாக்னர் ஆயுதக் குழுவின் மூலம் மேற்கொண்டதாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் குற்றம்சாட்டின. இது ரஷ்யாவுக்கு பிரச்னையை ஏற்படுத்தியது. மேலும், உக்ரைனில் டொனெட்ஸ்க் பகுதியில் உப்புச் சுரங்க நகரமான சோலேடரை ரஷ்யா கைப்பற்றியது. ’இந்த நகரை நாங்களே கைப்பற்றினோம். வாக்னர் குழுவின் வெற்றியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பறிக்க நினைக்கின்றன’ என வாக்னர் யெவ்ஜெனி பிரிகோஸின் குற்றம்சாட்டினார்.

மேலும், ‘பக்முட் நகரைக் கைப்பற்றுவதற்கு வாக்னருக்கு போதுமான வெடிமருந்துகளை வழங்க ரஷ்ய ராணுவம் தவறிவிட்டது, ஒருகட்டத்தில் தங்களையே ரஷ்ய ராணுவம் தாக்கத் தொடங்கியது’ எனத் தெரிவித்த வாக்னர் குழு, ’உக்ரைனில் ஏற்பட்ட தோல்விகளுக்கு ரஷ்யாவின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள்தான் காரணம்’ எனவும் குற்றம்சாட்டியது. ரஷ்ய அரசுக்கும் வாக்னர் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட இதுதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

வாக்னரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அக்குழுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதின் செயல்பட ஆரம்பித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. வாக்னரின் குழுவினர் ரஷ்ய ராணுவத்தால் தடுத்தும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் வெகுண்ட அவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சிக்குத் தயாராகி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரம் காட்டியதாகவும், அது தற்போது வெடிக்கத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே உக்ரைனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர், ரஷ்யாவின் தென்பகுதியில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றிவிட்டதாகவும், அங்கிருந்து அவர்கள் தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ரஷ்ய மக்கள், “இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஆங்காங்கே குண்டு சத்தம் மட்டும் கேட்கிறது. மக்கள் ஆங்காங்கே ஓடுகின்றனர். எங்களுக்கு மிகவும் பதற்றமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் தொடங்கியிருக்கும் உள்நாட்டுப் போர் குறித்து உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், ”அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம். ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உக்ரைனில் எத்தனை நாட்கள் தனது படைகளை வைத்துள்ளதோ, அவ்வளவு பெரிய பிரச்னை ரஷ்யாவிற்கு ஏற்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, ரஷ்ய ஜனாதிபதி புடின் சிறப்பு விமானத்தில் தலைநகர் மாஸ்கோவைவிட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. புதின் சிறப்பு விமானம் மூலம் வடமேற்குத் திசையில் புறப்பட்டுச் சென்றதாக அவர்கள் பதிவிட்டுள்ளனர். ஆனால், அந்தச் சிறப்பு விமானத்தில் புதி

வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது – ரஷ்ய ஜனாதிபதி புடின்

ரஷ்யா – உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருக்கிறார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்து புடின் கூறும்போது,

“சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா இருக்கிறது. உக்ரைனுடனான எங்கள் மோதலில் சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது ஆனால் போரை நிறுத்த உக்ரைனும், ஐரோப்பாவும் தயாராக இல்லை. ரஷ்யாவின் முக்கிய வர்த்தக நாடாக சீனா உள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னதாக ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் மரியுபோல் பகுதிக்கு புடின் திடீரென பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தில் மரியபோலில் மறுசீரமைப்பு செய்வது குறித்து ஆலோசனையை அவர் நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

 

புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  உத்தரவு – ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய ஜனாதிபதி புடின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன.

இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், போர்க் குற்றத்தைப் புரிந்ததாக கூறி ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

புடினின் கைது  உத்தரவுக்கு உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், புடினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது தான் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பைடன் கூறுகையில், ” உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதற்காக போர்க்குற்றம் செய்ததாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது நியாயமானது. இந்த நடவடிக்கை மிகவும் வலுவான கருத்தை உருவாக்குகிறது” என்று குறிப்பிட்டார்.

“உக்ரைன் – ரஷ்ய போரை என்னால் ஒருநாளில் முடிவுக்கு கொண்டு வர முடியும்.”- ட்ரம்ப்

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2022 பெப்ரவரி மாத இறுதியில் ரஷிய ஜனாதிபதி புடின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷிய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை  மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது.

பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை ரஷ்யா 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உக்ரைன் நாட்டிற்கு புதிதாக 2.5 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ஆயுத உதவியாக 31 போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இந்த போர் முடிவுக்கு வராமல் தொடர்வது இரு நாடுகளை மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் தாக்கங்கள் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரஷியா – உக்ரைன் போர் குறித்து வீடியோ மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். போரை தற்போதைய அமெரிக்க அரசு ஒழுங்காக கையாளவில்லை எனக் கூறிய டொனால்டு டிரம்ப்,

“நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதுபோன்ற போர் ஏற்பட்டிருக்காது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் புதின் போரை தொடங்கியிருக்க மாட்டார். லட்சம் ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற போரை நடத்த விட்டிருக்கமாட்டேன். போர் சூழல் ஏற்பட்டது தெரிந்திருந்தால், நான் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். இப்போது அமெரிக்கா டாங்கிகளை கொடுக்கிறது. அடுத்து என்ன அணு ஆயுதங்களை தரப்போகிறதா? இந்த முட்டாள்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ரஷ்ய ஜனாதிபதி புடின் நான் என்ன சொன்னாலும் கேட்பார். போரை நிறுத்த எனக்கு 1 நாளுக்கு மேல் ஆகாது. 3ம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும் தான் உண்டு. இந்த போரை நிறுத்தி காட்ட என்னால் மட்டுமே முடியும்” என்றார்.

“உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷ்யா துண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி.”- ரஷ்ய ஜனாதிபதி புடின்

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்திகதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், இருநாட்டுப் படைகளும் சளைக்காமல் போரிட்டு வருகின்றன.

அதே சமயம் இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, ரஷ்ய ஜனாதிபதி புடின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கடினமானது ஆனால் தேவையான முடிவு என்று குறிப்பிட்டார். மேலும் அமைதியை ஏற்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் பொய் சொல்லி வருவதாக குற்றம் சாட்டிய புதின், உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷ்யா துண்டாக்க முயற்சிகள் நடப்பதாக தெரிவித்தார்.

உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டொலர்கள் இராணுவ ஆயுத உதவி – அமெரிக்காவே போரை தூண்டுகிறது என குற்றஞ்சுமத்தும் ரஷ்யா !

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய போர் 10 மாதங்களைக் கடந்துள்ளது.

போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டொலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 19.3 பில்லியன் டொலர் மதிப்பிலான அதிகமான இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் “உக்ரைன் மீதான போர் தொடரந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு அமெரிக்கா போரில் தலையிட்டுள்ளமையும் – அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதுமே” காரணம் என ரஷ்யா சாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கையெழுத்தானது உக்ரைன் – ரஷ்யா இடையேயான ‘கண்ணாடி’ ஒப்பந்தம் !

ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

படையெடுப்பு, உணவு விலைகளை உயர்த்தியது, எனவே உக்ரைனின் துறைமுகங்களைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் முக்கியமானது. ஒடேசாவில் சுமார் 20 மில்லியன் டன் தானியங்கள் இருப்புகளில் சிக்கியுள்ளன.

இந்த நிலையில், உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதியை கடல் வழியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கண்ணாடி’ ஒப்பந்தம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தற்போது உக்ரைனில் போரினால் சிக்கியுள்ள மில்லியன் கணக்கான டன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்.

ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும், உக்ரைன், ரஷ்யாவுடன் நேரடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.

இரு தரப்பினரும் இஸ்தான்புல்லில் நடந்த கையெழுத்து நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆனால் ஒரே மேசையில் அமரவில்லை.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு முதலில் ரஷ்யாவின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அதைத் தொடர்ந்து உக்ரைனிய உட்கட்டமைப்பு அமைச்சர் ஓலெக்சாண்டர் குப்ராகோவ் உக்ரைனின் ஒத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தம் அடைய இரண்டு மாதங்கள் எடுத்தது. இது 120 நாட்களுக்கு நீடிக்கும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால் புதுப்பிக்க முடியும்.

இதற்காக, இஸ்தான்புல்லில் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு மையம் நிறுவப்பட உள்ளது, ஐ.நா., துருக்கிய, ரஷ்ய மற்றும் உக்ரைனிய அதிகாரிகளால் இது இயக்கப்படும்.

“மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷ்யாவை பலவீனப்படுத்தாது.” – ரஷ்ய ஜனாதிபதி புடின்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மறுபுறம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நேற்று முன்தினம் துருக்கியில் இரு நாடுகளின் உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியானது.
தற்போதைய நிலை தொடர்பில்  ரஷ்ய ஜனாதிபதி புடி ன் கூறும்போது, “உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் சில நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக பின்னர் விரிவாக பேசுகிறேன். அது சாதகமானதாக இருக்கும். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷ்யாவை பலவீனப்படுத்தாது. அதற்கு மாறாக வலுவானதாகவே மாற்றும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
உக்ரைனுடனான சமரச பேச்சு தினமும் தொடர்ந்து வருவதாகவும் புடின் தெரிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த அடிப்படையிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அவர் கூறவில்லை.
அதேபோல் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறும்போது, “உக்ரைன் இராணுவம் முக்கியமான திருப்புமுனை மற்றும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.