ரரின் கொன்ஸ்ரன்ரைன்

ரரின் கொன்ஸ்ரன்ரைன்

ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன், தவறணை உரிமையாளர் ரரின் கொன்ஸ்ரன்ரைன் பெண்களது சிறுமிகளது படங்களை சமூவலைத்தளத்தில் பதிவிடுவதையும் துஸ்பிரயோகம் செய்வதையும் நிறுத்த வேண்டும்!!!

சமூக வலைத்தளங்களில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பதிவுகளை இட்டுவந்த ஜெய் – கொன்ஸ் இரட்டையர்கள் பயன்படுத்திய வட்ஸ்அப் குறூப் மார்ச் 25 தேசம்நெற் – தேசம்திரையில் சாட்சியங்களோடு வெளியான பதிவைத் தொடர்ந்து, அதன் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு மூடப்பட்டது. ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளரான ஜெய் என்ற பெயரில் எழுதி வந்த ஆர் ஜெயதேவன் மற்றும் தவறணை மில்லியனெயர் ரரின் கொன்ஸ்ரன்ரைன் ஆகிய இரட்டையரே இந்த வட்ஸ்அப் குறூப்பில் சமூக விழுமியங்களுக்குப் புறம்பாக பெண்களின் படங்களை, பதினெட்டுவயதுக்கும் குறைந்த இளம் பெண்களின் படங்களை சிறுவர்களின் படங்களைப் பதிவேற்றி பாலியல் உறுப்புகள், மன்மதக்குஞ்சுகள் என்றெல்லாம் சம்பாசித்து வந்துள்ளனர்.

இவ்வாறாக ஆண்கள் மட்டுமே உள்ள சமூக வலைத்தளத்தில் பெண்களை, இளம்பெண்களை, சிறுவர் சிறுமிகளைப் பதிவேற்றிய இந்த இரட்டையர்கள் அறுபது வயதைத் தாண்டியவர்கள். ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் திருமண வயதில் உள்ள இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று பிள்ளைகளின் தந்தை. இரண்டாயிரமாம் ஆண்டு நடுப்பகுதிகளில் இவருக்கும் நோர்வேயில் இருக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக அறியப்பட்ட ‘ஊத்தை’ சேதுவுக்கும் நடந்த சமூக வலைத்தள மோதலில் ஆர் ஜெயதேவனின் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தது. இப்போது ஆர் ஜெயதேவனும் கொன்ஸ்ரன்ரைனும் சேர்ந்து பெண்கள், இளம்பெண்கள், சிறுவர் சிறுமிகளின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரெஸ்ரெஸ்திரோஜன் பம்பண்ணுவதாக சல்லாபிக்கின்றனர். ரரின் கொன்ஸ்ரன்ரைனுக்கும் திருமண வயதில் ஒரு பெண் பிள்ளையுட்பட இரு பிள்ளைகள் உள்ளனர்.

பகலில் ஈழபதீஸ்வரர் மற்றும் ஆலயங்களின் பூஜைகளை, மட்டக்களப்பில் தங்கள் ஆலயம் வீடுகட்டிக்கொடுப்பதைப் பதிவிடும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர், இருள ஆரம்பித்ததும் ரரின் கொன்ஸ்ரன்ரைன் பெண்களின், சிறுமிகளின் படங்களைப் பதிவேற்றி தங்கள் வக்கிரத்தைக்கொட்டும் வகையில் சில வசனங்களைப் பதிவேற்றுவார். அதனைத் தொடர்ந்து அதற்கு பொழிப்புரை எழுத வரும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் அந்தப் பெண்களின், சிறுமிகளின் படங்களின் கீழ் பாலியல் உறுப்புகள், மன்மதக் குஞ்சுகள் என்று சிலாகிப்பார். இதன் உச்சமாக மார்ச் 23இல் இளம்பெண்களின் படத்தைப் பதிவேற்றி பாலியல்தூண்டலை ஏற்படுத்தும் ரெஸ்ரெஸ்திரோன் பம் பண்ணுவது பற்றி சல்லாபித்துள்ளார். இதனைத் தொடர்ந்தே தேசம்நெற் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக குறித்த வட்ஸ்அப் குறூப் கலைக்கப்பட்டது.

இந்த சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட சிறுமிகள் வேறுயாருமல்ல ரரின் கொன்ஸ்ரன்ரைனது வைத்தியரும் ரரின் கொன்ஸ்ரன்ரைனின் மகனுக்கு கற்பித்த ஆசிரியரதும் பெண் பிள்ளைகளும் மகனும். அதைவிடவும் அவர்கள் ஈழபதீஸ்வரரையும் நம்புபவர்கள். மேலும் இவர்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டவர்களில் ஈழபதீஸ்வரர் மீது நம்பிக்கை கொண்டவர்களும் இருந்தனர். கடந்த சில மாதங்களாகவே பெண்களைத் துஸ்பிரயோகம் செய்யும் வகையிலும் இப்பெண்கள் இரண்டாவது, மூன்றாவது, ஐந்தாவது நபராக திருமணமாவதாக ஏளனம் செய்யும் வகையில் குரங்குகளோடு இணைத்தும் பல பதிவுகளை இந்த ஜெய் – கொன்ஸ் இரட்டையர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்துள்ளனர்.

இந்தக் கீழ்த்தரமான பதிவுகளைப் பதிவிட்ட இந்த இரட்டையர்கள் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் மாதம் 8ம் திகதி ஒரு பெண்ணின் படத்தை மஹிந்த ராஜபக்ச ஒரு பெண்ணுடன் ஒட்டுறவாக இருக்கும் படத்தோடு ஒப்பிட்டு இப்பெண்ணும் சிங்கள இரத்தம் கலந்த ஒருவரை பிடித்துள்ளார் என்ற தோரணையில் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் எழுதியுள்ளார். ஆர் ஜெயதேவன் – ரரின் கொஸ்ஸ்ரன்ரைன் இரட்டையர்கள் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த சில வாரங்களிலேயே நான் முந்தி நீ முந்தி என்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்து விருந்து சாப்பிட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகிந்த ராஜபக்சவுடன் விருதுண்ண முன்பிருந்தே புலனாய்வுத்துறையோடும் நெருக்கமாக இருந்த இவர்கள் தற்போது தஞ்சம் கோரிய பெண்ணொருவரது படத்தை வெளியிட்டு அவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையில் இருந்ததாக காட்டிக்கொடுக்கிறார்களாம்.

இவர்களது சமூக வலைத்தளப் பதிவுகளால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில், “இந்த அயோக்கியர்களை கோயில்களுக்குள் விடவே கூடாது. ஆனால் எப்பிடி ஈஸபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளராக இருக்கின்றான்?” என்று கேள்வி எழுப்பினார். “இந்தக் கோயில்களை யார் நடத்தலாம் என்றில்லாமல் மொள்ளமாரிகளும் முடிச்சவிக்கிகளும் கோயில் நடத்தினால், இவன்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு நற்சான்றிதழ் கொடுமால் சமூக சேவையா செய்வான்கள் என்றும் அவர் கொதித்தெழுந்ததார். ஓம் சரவணபவ வட்பேடில் காமக்குத்து அடித்த குற்றச்சாட்டுக்கு வெள்ளையடிக்க தாயகத்தில் வீடு கட்டிக்கொடுகிறார். இங்க ஈழபதீஸ்வவர் ஆலய உரிமையாளர் ஜெயதேவன் மட்டும் என்ன செய்கிறார் ? தன்னுடைய சீர்கெட்ட பழக்கவழக்கங்களை மறைக்க கோயில், வீடு கட்டுகிறேன் என்று வைற் வோஸ் அடிக்கின்றார்” என்கிறார்.

இவர்களால் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு பாதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண்ணின் கணவர், தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் “இந்த பார் மில்லியனெயர் ரரின் கொன்ஸ்ரன்ரைனும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவனும் இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ அல்ல. இவர்கள் மனிதப் பிறப்புகளே இல்லை” என்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “இவ்வாறான அயோக்கியர்களாலேயே பெண்கள் முன்னுக்கு வரப் பின்நிற்கின்றனர். இந்தப் படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் இவ்வளவு க்குப் பரப்பப்பட்டால் எந்தப் பெண் தான் சமூக நோக்கத்தோடு முன்வந்து செயற்பட முன்வருவாள்” எனக் கேள்வி எழுப்பினார்.

இணைப்பை அழுத்தி, கொன்ஸ்ரன்ரைன் பெண்ணொருவரை விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று காட்டிக்குடுக்கிறாராம் என்ற அவர் சமூக வலைத்தளத்தில் அப்பெண்ணின் படத்தோடு பரவவிட்ட அவதூறைப் பார்க்கலாம்.

Constantine_T_LTTE_Harasment_01

இது பற்றி தேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்த வெம்பிளியில் வாழும் ஈழபதீஸ்வரர் ஆலய அடியார் சிவா மயில்வாகனம், தான் ஈழபதீஸ்வரர் ஆலயம் புலி ஆதரவாளர்களால் நடத்தப்படும் போது இருந்தே சென்று வருவதாகவும் பல கொலைகளுக்கும் காரணமான கிருஷ்ணன் இருக்கும் போதும் ஆலயத்துக்கு சென்று வந்ததாகவும் தெரிவிக்கும் அவர் கள்ளனாகப் பார்த்து திருந்தாவிட்டால் சராசரி மனுசர் நாங்கள் என்ன செய்ய முடியும் எனத் தெரிவித்தார். நாளைக்கு நாங்கள் ஏதாவது கேட்டால் என்னுடைய மனைவி பிள்ளைகளின் படங்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பபடும் எனவும் அவர் தெரிவித்தார். அவர் இறுதியாகக் குறிப்பிடுகையில் “அவனொருதன் இருந்து எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான்” எனத் தெரிவித்தார்.

“இவர்களுக்கும் குடும்பம் இருக்கும் தானே? ஏன் இவர்கள் இப்படி நடந்துகொள்கின்றனர்?” என்று கேள்வி எழுப்பிய பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தி, “இவர்கள் வயோதிபப் பெண்களையும் விட்டுவைக்கவில்லை. அவர் இளமையாக இருக்கும் போது விபச்சாரம் செய்தார்” என்று வேறு எழுதுகின்றனர். இவர்களுடைய வீட்டில் உள்ள மனைவி, பெண் பிள்ளைகள், ஏனைய உறவுப் பெண்கள் இவர்களால் என்னபாடு படுவார்கள்” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் “ஈழபதீஸ்வரர் ஆலயக் குருக்கள், பக்தர்கள் மற்றும் ஆர் ஜெயதேவனின், ரரின் கொன்ஸ்ரன்ரைனின் குடும்ப உறுப்பினர்கள், உறவுகள், இவர்கள், பொதுவெளியில் பெண்களுக்கு ஆபத்தானவர்களாக மாறியிருப்பதையும் குடிபோதையில் சாமம் சாமமாக படங்களைப் பதிவேற்றி வக்கிரங்களைக் கொட்டுவதையும் தடுக்க முன்வர வேண்டும். முடிந்தால் இவர்களுக்கு பெண்ணிய வாதியும் மனித உரிமைவாதியுமான நளினி ரட்ணராஜா குறிப்பிடுவது போல் உளவியல் ஆலோசணைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அப்பெண் மேலும் தெரிவிக்கையில், “இது ஒரு சில பெண்களது பிரச்சினைமட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தினதும் பிரச்சினை. இவ்வாறானவர்களை சமூகமும் அவரது நட்புகளும் உறவுகளும் களையெடுக்க வேண்டும். அப்போது தான், பாரதி கண்ட புதுமைப் பெண்ணால் சமூகவலைத்தளத்திற்கு வர முடியும். இல்லாவிட்டால் அவளையும் பொதுத்தளத்தில் இந்தக் காமுகர்கள் ஒரு பாலியல் தொழிலாளியாக்கி விடுவார்கள்” என்று தெரிவித்தார்.

இவ்விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவர்களுடன் தொடர்புடைய பலரும் தேசம் ஊடகவியலாளர் தன்னுயிர் தொடர்பிலும் கவனமெடுக்குமாறு ஆலோசணை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இலங்கைக்குச் சென்றுவருவதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கின்றனர். இது தொடர்பில் காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

கீழே இவ்வாறு ஆண்கள் ஏன் நடந்துகொள்கிறார்கள் என்பது பற்றி மனித உரிமைவாதி நளினி ரட்ணராஜாவுடனான நேர்காணலைக் காணலாம்.

லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு!!!

லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு! தாயகத்தில் வீடுகட்டி பாலியல் குற்றத்தை மறைக்க கோயில் ஆசாமிகள் எத்தனிப்பு!!!

வட்பேர்ட், லண்டனில் வாழும் அறுபது வயதான சபாரட்ணம் அருள்சிகாமணி என்பவர் பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஏழரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஹாட்போர்ட்செயர் பொலிஸ் பிரிவு மார்ச் 21, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கின்றது. அண்மைக்காலத்தில் நிகழாத பாலியல் துஸ்பிரயோகங்களை விசாரணை செய்யும் பிரிவினரே இவ்வழக்கை விசாரித்து குற்றவாளிக்குத் தண்டணை பெற்றுக்கொடுத்துள்ளனர். தற்போது பருவ வயதில் உள்ள இப்பெண் 2011ம் ஆண்டு தனக்கு நிகழ்ந்த அநியாயங்களை அண்மையில் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்தே இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு மகளீர் தினமான மார்ச் மாதம் 8ம் திகதி ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

இச்சம்பவம் பற்றி வட்பேர்டில் வதியும் சபாரட்ணம் அருள்சிகாமணியின் நண்பரொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் தனக்கு அருள்சிகாமணியை ஒரு குடும்பபொறுப்பானவராகவே தெரியும் என்றும் ஊரிலிருந்த தன்னுடைய உறவுகளுக்கு உதவிவந்ததாகவும் அவர்களை வெளிநாட்டுக்கும் அழைத்து அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் அந்நண்பர் தெரிவித்தார். அந்நண்பர் மேலும் தெரிவிக்கையில் அருள்சிகாமணி இவ்வாறான ஒரு செயலைச் செய்தமை தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். வட்டூர் தமிழர் ஒன்றியம் யூகே இன் செயலாளராக இருந்த அருள்சிகாமணி 2018இல் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக, அருள்சிகாமணியின் நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

அருள்சிகாமணி வட்டுக்கோட்டை வட்டூரைப் பூர்வீகமாகக் கொண்ட போதும் அவர் பெரும்பாலும் வாழ்ந்தது வட்டக்கச்சி, கிளிநொச்சியில் என்கிறார் அருள்சிகாமணியின் ஊரவர். அவர் மேலும் குறிப்பிடுகையில் திருமணமாகி ஒரு பெண் குழந்தையின் தந்மையுமான அருள்சிகாமணி க்கு வேறொரு பெண்ணோடு உறவு இருந்ததாகவும் தெரிவித்தார். அருள்சிகாமணியின் மகள் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்கின்றார். தந்தையரின் இத்தகாத செயல்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்கிறார் அந்நண்பர்.

இதேபோன்று பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரேமகுமார் ஆனந்தராஜாவின் பிள்ளைகளும் மிகுந்த அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது. பிரித்தானிய ஆலயங்களுடன் நெருங்கிப் பணியாற்றிய பிரேமகுமார் ஆனந்தராஜாவின் தண்டனையைக் குறைக்க பிரித்தானிய சைவக் கோயில்கள், பக்தர்கள், அறிவுஜீவிகள் 40க்கும் மேற்பட்டவர்கள் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி தண்டனையைக் குறைக்கக் கோரிய போதும் அவருக்கு பின் தண்டனை அதிகரிக்கப்பட்டமையை தேசம்நெற் வெளிக்கொணர்ந்தது குறிப்பிடத்தக்கது. பிரேம்குமாரைத் தொடர்ந்து அவரோடு ஓரே வகுப்பில் கல்வி கற்ற சுப்பிரமணியம் சதானந்தனும் பெண்குழந்தையின் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக சிறைத்தண்டனை பெற்றார்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த மூன்று பாலியல் துஸ்பிரயோகக் குற்றவாளிகளும் லண்டனின் ஹரோ – வெம்பிளிப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே. சபாரட்ணம் அருள்சிகாமணி வட்பேர்ட்டில் தற்போது வாழ்ந்தாலும் இவரும் ஹரோவில் நீண்டகாலம் வாழ்ததாக அவருடைய நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். நேரடியான உடல்ரீதியாக பாலியல் துஸ்பிரயோகங்கள் நிகழும் அதே சமயம் சமூக வலைத்தளங்களிலும் பெண்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில ஆண்கள் சமூக வலைத்தளங்களை பெண்களுக்கு ஆபத்தானதாக மாற்றியிருப்பது தமிழ் சமூகத்தின் பிரச்சினை என்கிறார் தாயகம் மட்டக்களப்பைச் சேர்ந்த நளினி ரட்னராஜா. மகளீர் தினத்தையொட்டி அவர் தேசம்நெற்குக்கு வழங்கிய நேர்காணலில் நல்ல குடும்பச் சுழலில் இருந்து வராத ஆண்கள், பாலியல் வறட்சி கொண்டவர்கள் அதனால் வக்கிரமொழிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

லண்டன் ஹரோ வெம்பிளி பகுதியில் வாழ்கின்ற பார் உரிமையாளர் ரரின் கொன்ஸ்ரன்ரைன், புலிகளின் கோயிலாக இருந்ததை வெற்றிகொண்ட வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் போன்றோர் தங்களோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத பெண்களைப் பற்றிய அவதூறுகளை பரப்புவதுடன் பெண்களின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலங்களில் பாலியல் உறுப்புகள் பற்றியும் இவர்கள் சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலும் அங்கம்பெறும் சமூகவலைத்தளங்களிலேயே இதனைச் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்ததாகவும் சொல்லி சம்பந்தப்பட்ட பெண்களுக்கு புலத்திலும் தாயகத்திலும் நெருக்கடிகளை உண்டுபண்ணும் வகையில் பதிவுகளை கடந்த சிலமாதங்களாகவே பகிர்த்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு காண்கிறீர்கள்.

சபாரட்ணம் அருள்சிகாமணியின் பாலியல் துஸ்பிரயோகத்தை விசாரணை செய்த புலனாய்வுக்குப் பொறுப்பான சார்ஜன்ட் மார்க் வில்மோர் இவ்வழக்குப் பற்றிக் குறிப்பிடுகையில்: “எனது குழு அண்மைக்காலத்தில் நடக்காத பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கின்றோம். சம்பவம் நடந்த போது பல்வேறு காரணங்களுக்காக அன்று அவர்கள் தங்களுக்கு நடந்ததை பொலிஸாருக்கு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம், குற்றம் எப்போது நடந்திருந்தாலும் என்ன மாதிரியான சூழ்நிலையில் நடந்திருந்தாலும் இவ்வாறான குற்றச்சாட்டுகளைத் தீர விசாரிப்போம். பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாவது என்பது ஒரு போதும் உங்களுடைய தவறு அல்ல. நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் இந்த விசாரணைக் காலகட்டத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தாலோ அவ்வாறாக பாதிக்கப்பட்டது பற்றி அறிந்திருந்தாலோ பொலிஸ்க்கு உடனடியாகத் தொடர்புகொள்ளவும். “ எனக் கேட்டுக்கொண்டார்.

இதே லண்டன் ஹரோ – வற்போர்ட் பகுதியில் மற்றுமொரு போலிச்சாமியாரின் பாலியல் துஸ்பிரயோக வழக்கு விரைவில் நீதிமன்றத்துக்கு வரவுள்ளது. லைக்கா சாமியார் என்று லண்டனில் பிரபல்யமான லைக்கா துணைத் தலைவர் பிரேமநாதன் சிவசாமியின் ஆதரவு பெற்ற ஓம் சரவணபவ என்ற கேரளாவைச் சேர்ந்த புலிக்கள் முரளிகிருஷ்ணன் என்ற ஆசாமி லண்டனில் தமிழர்களின் பணத்தை உண்டியல் இல்லாமலே அள்ளி எடுத்தார். அவரை வீட்டுக்கு கூப்பிட்டு பாத பூஜை செய்தால் அந்த வீட்டு நட்புகள், உறவுகள் எல்லாம் வந்து பணத்தை விசுக்க ஒரு விசிற்றுக்கு ஓரிரு மணித்தியாலத்தில் இலங்கை ரூபாயில் ஒரு கோடி வசூலாகும். பாத பூஜை என்ற பெயரில் இந்த ஆசாமியின் காலைக் கழுவிக்குடிக்கும் பழக்கத்தை தற்போது தாயகத்திலும் பழக்கியுள்ளனர். இந்தப் போலி ஆசாமியை நைநாதீவுக்கு அழைத்து வந்து காலைக் கழுவிக்கு குடிக்க வைத்த கஜன் தற்போது மீண்டும் தாயகம் வந்தள்ளார்.

இளம்பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு லைக்கா பிரேமின் பெயிலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள புலிக்கள் முரளிகிருஸ்ணன் கோஸ்டி தாயகத்தில் வீடுகட்டிக் கொடுக்கிறோம் என்ற பாணியில் புது லைன் ஓடுகின்றனர். லண்டன் வற்போர்டில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு நடக்க இருக்கின்ற சமயம் ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி லண்டன் வறட்போர்டில் இருந்து ஊருக்குச் சென்றுள்ள இந்த பாலியல் குற்றம்சுமத்தப்பட்ட ஆசாமி புலிக்கள் முரளிகிருஷ்ணனை வீட்டின் முகப்புச் சுவரில் பதித்து அந்த ஆசாமியைக் கடவுளாக்கும் கைங்கரியத்தை கஜன் என்பவரும் அவரது நண்பரும் மேற்கொள்கின்றார்கள். இந்தப் போலிக்கடவுளர்கள் பணம் கொடுத்தாலென்ன, வீடுகள் கட்டிக்கொடுத்தாலென்ன அதனை மறுக்காமல் தாயக மக்கள் வாங்க வேண்டும். ஏனெனில் அது அவர்களுடைய சொந்தப் பணம் கிடையாது. பிரித்தானியத் தமிழர்களிடம் இருந்து ஏமாற்றிக் கொள்ளையிட்ட பணம். அது தாயக மக்களுக்குச் சேரவேண்டிய பணம். ஆனால் அந்த வீடுகளில் உள்ள பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஆசாமியின் உருவப் படத்தை மாட்டாதீர்கள். அதனை உடைத்துவிட்டு உங்கள் மதிப்புக்குரியவர்களின் உருவப்படத்தை பதித்துவிடுங்கள்.

சபாரட்ணம் அருள்சிகாமணிக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டதுடன் ஆயுள் காலத்துக்கும் அவர் பாலியல் குற்றவாளி என்ற பட்டியலிலும் இவரது பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. புலிக்கள் முரளிகிருஷ்ணனின் வழக்கு விரைவில் பிரித்தானிய நீதிமன்றத்துக்கு வர உள்ளது.
வழித் தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைப்பது போல் புலம்பெயர்நாடுகளில் கோயில்கள் என்ற பெயரில் பெரும் உண்டியல் வியாபாரம் நடைபெறுகின்றது. கோயில்களை வைத்து வீடுகட்டுகிறோம் என்று சொல்லி படத்துக்கும் யூரியூப்புக்கும் எவ்விதிகுறைவுமில்லை. உண்டியல் பணத்தில் சாத்திரத்துக்கு வீடும் மிகுதியில் காம விடுதிகளும் அந்தப்புரங்களும் கட்டப்படுகிறது. இவர்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலேயே பெண்களை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை. இனி தாயகத்தில் கேட்கவா வேண்டும். கோயில் ஆசாமிகள் பற்றி மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும்.

ஒரே நாளில் ஒரே காணிக்கு மூன்று உறுதிகள் முடித்த யாழ் சட்டத்தரணி! உறுதி முடிக்கும் சட்டத்தரணிகள் ஜனாதிபதியிடம் மண்டியிட்டனர்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன், செலஸ்ரியன் ஆகியோர் அடங்கிய குழு இரு வாரங்களுக்கு முன்பாக 13 பெப்ரவரி 2024 அன்று ஜனாதிபதியைச் சந்தித்தனர். ஆனால் அவர்கள் சந்தித்துப் பேசிய விடயம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அண்மைக்காலமாக உறுதி மோசடிகள் தொடர்பான வழக்குகள் தொடர்பில் யாழ் சட்டத்தரணிகளை பொலிஸார் கைது செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனை தடுக்குமாறு கேட்பதற்காகவே மேற்குறிப்பிட்ட யாழ் சட்டத்தரணிகள் ஜனாதிபதியைச் சந்தித்து அவரிடம் மண்டியிட்டுள்ளனர். அதாவது கள்ள உறுதி முடித்த வழக்குகள் தொடர்பில் பொலிஸார் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது என்று ஜனாதிபதியிடம் அவர்கள் கோரியுள்ளனர். பொலிஸார் கள்ள உறுதி முடித்த வழக்குகளில் தங்கள் மீது கடுமையாக நடந்துகொண்டால், பொலிஸார் கொண்டுவரும் குற்றவியல் வழக்குகள் (கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், கொலை போன்ற குற்றவியல் வழக்குகள்) நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும்போது தாம் கடுமையாக பொலிசாரினை குறுக்கு விசாரணை செய்வோம் என அச்சட்டத்தரணிகள் ஜனாதிபதி ரணிலை மறைமுகமாக மிரட்டியதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது.

இது பற்றி மேலும் தேசம்நெற்க்கு தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு சட்டத்திரணிகள் ஏற்கனவே பொலிசாரினால் உறுதி மோசடி வழக்கிற்காக கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு, தற்சமயம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று சட்டத்தரணிகளை இவ்வாறான விசாரணைகளுக்காக பொலிசார் கைது செய்யத் தயாராகிய நிலையில், அவர்களுக்கான முன் பிணை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது. அவர்களினது கோரிக்கையினை செவிமடுத்த ஜனாதிபதி ரணில், “கள்ள உறுதி முடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பொலிசாருக்கு அறிவுறுத்துவது சட்டத்திற்கு முரணானது” என்றும் “அவ்வாறான அறிவுறுத்தல்களை தன்னால் வழங்க முடியாது” எனவும் பக்குவமாக தன்னைச் சந்திக்க வந்த யாழ் சட்டத்தரணிகள்: குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன், செலஸ்ரியன் ஆகியோருக்குத் தெரிவித்ததாக அறியவருகின்றது.

ஆனால் அதற்கு மாற்றாக ஜனாதிபதி ரணில் சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணத்தைச் சந்திப்பதற்கு ஒழுங்குபடுத்தித் தருவதாகவும் அவரின் ஆலோசனையை பெறுமாறும், உறுதி முடிக்கும் அந்த சட்டத்தரணிகளிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அமைவாக பெப்ரவரி 13 மாலையே சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணத்தைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டு வழக்கு உள்ள யாரும் அச்சந்திப்பில் கலந்துகொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் சட்டமா அதிபர் அறிவுறுத்தி இருந்தார். அதனால் செலஸ்ரியனைத் தவிர ஏனைய நான்கு சட்டத்தரணிகளும்: குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன் ஆகியோர் சட்டமா அதிபரை சந்தித்துள்ளனர்.

சட்டமா அதிபரைச் சந்திக்கச் சென்ற நான்கு சட்டத்தரணிகளுக்கும் அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அச்சந்திப்பிற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரும் அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வருகின்றது. இவர்களினது கோரிக்கையினை கேட்டு அறிந்து கொண்ட சட்டமா அதிபர், பொலிஸ் உயர் அதிகாரியிடம் இது தொடர்பான விளக்கத்தைக் கோரிய போது, பொலிஸ் அதிகாரியினால் பின்வரும் விடயங்கள் கூறப்பட்டதாக தெரிய வருகின்றது: “சட்டத்தரணி கௌதமன் ஒரே நாளில் ஒரே காணிக்கு 03 உறுதிகள் எழுதியுள்ளார், இதற்கு நாங்கள் எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது?” என்று அப்பொலிஸ் உயர் அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். அதே போன்று பல சட்டத்தரணிகளால் பதிவு செய்யப்பட்ட மோசடி உறுதிகள் தொடர்பான விபரங்களையும் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். இதனைக் கேட்டுக் கொண்ட சட்டமா அதிபர் “பொலிசாரின் நடவடிக்கைகளை தன்னால் தடுக்க முடியாது” என்ற கருத்தைக் கூறியதுடன் அவ்வாறு சட்டத்தரணிகளை கைது செய்வதாயின் அதற்கு முன் தன்னையும் கலந்தாலோசிகும் வண்ணம் பொலிஸ் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதாக அறியவருகின்றது.

அரசியல் சட்டம்பிகள் வளைத்துப்போட்ட காணிகள்:

“கள்ள உறுதி முடிப்பதில் எங்கட சட்டம்பிகளை ஒருத்தரும் மிஞ்சேலாது” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சட்டத்தரணி கௌதமனின் ஊரவரான ஒருவர். அவர் மேலும் குறிப்பிடுகையில் “இன்றைக்கு இந்த இளம்தலைமுறை சட்டத்தரணிகளுக்கு இந்தக் கள்ள உறுதி எழுதுவதை சொல்லிக் கொடுத்ததே இவர்களின் அப்பன்களான சட்டத்தரணிகள் தான். இன்றைக்கு அரசியல் செய்கிறவையும் இவர்களின் பரம்பரையும் கள்ள உறுதியில் சொத்துச் சம்பாதித்தவர்கள் தான்” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“வடக்கு கிழக்கில் காணிகளைக் கணணிப்படுத்துவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முரண்டுபிடித்து தடுத்ததற்கு முக்கிய காரணம், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் எவ்வளவு சொத்துக்கள், காணிகள் இருக்கின்றது என்ற உண்மை ஒரு ‘பட்டனை’ அழுத்தியதும் தெரியவந்துவிடும். அதனாலேயே அவர்கள் இதனைத் தடுத்தனர்” என்கிறார் சமத்துவக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மு சந்திரகுமார். அன்று காணிகளைக் கணணிப்படுத்தியிருந்தால் தற்போது நிலமற்ற பல்லாயிரக்கணக்கானோருக்கு காணி கிடைத்திருக்கும். காணியும் முகவரியும் உள்ளவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான நிலமற்ற தமிழ் குடும்பங்கள் மிகுந்த பயன்பெற்றிருக்கும்” என மு சந்திரகுமார் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.

தமிழரசுக் கட்சியின் சட்டத்தரணியான இரா சம்பந்தன் குடும்பத்துக்கும் கணக்கற்ற சொத்துக்கள் இருந்தது. திருகோணமலை லிங்கநகர் குடியிருப்பும் இரா சம்பந்தனின் சொத்துக்களுக்குள் அடக்கம். 1987இல் அக்காணிகளில் பலாத்காரமாகக் குடியிருந்த சிங்களவர்களை துரத்திவிட்டு அங்கு தமிழர்களைக் குடியேற்றியவர்களில் மு சந்திரகுமாரும் ஒருவர். 2009 இறுதி யுத்தத்திற்குப்பின் அக்காணியில் குடியேறியவர்களிடம் இரா சம்பந்தன் லட்சக் கணக்கில் பணம் கேட்டிருந்தார். இதுபற்றி லண்டன் வந்த இரா சம்பந்தரிடம் தேசம்நெற் வினவிய போது அவர் அக்காணிகள் தன்னுடையதல்ல என்றார். “அக்காணிகள் உங்களுடைய மனைவி மற்றும் வெளிநாடுகளில் உள்ள உங்களுடைய சகோதரர்களின் பெயர்களிலும் தானே உள்ளது” என்பதை தேசம்நெற் அன்று சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும், கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சட்டத்தரணி ஆனந்தசங்கரிக்கும் இன்றும் நிறைய சொத்துக்கள் உள்ளது. அதைவிடவும் அதிகமாக கிளிநொச்சி மண்ணே தெரியாத தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் அப்பன், பாட்டன் வளைத்துப்போட்ட சொத்துக்கள் ஏராளம் உள்ளது. இப்படி பெரும்பாலான சட்டத்தரணிகளுக்கு சொத்துக்களுக்கு எவ்வித குறையும் இருப்பதில்லை. அவர்களுடைய பரம்பரைக்கும் சொத்துக்களுக்கும் நிலத்துக்கும் குறைவில்லை.

ஞானா முனசிங்கவின் காணி – வெளிநாட்டவரின் திருவிளையாடல்கள்:

யாழ்ப்பாணத்துக்கு என்றொரு பண்பாடும் கலாச்சாரமும் இருக்கின்றது என்று அழுத்திச் சொல்பவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தின் தற்போதைய சமூக சீரழிவுகளை எண்ணி சற்றுத் தலைகுனிவது இயல்பாகிவிட்டது. இதற்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து செல்லும் பலரினதும் செயற்பாடுகளும், புலம்பெயர் நாடுகளிலிருந்து பாயும் பணமும் முக்கிய காரணமாக உள்ளது. புலம்பெயர்ந்தவர்களின் பணம் யாழ்ப்பாணத்தின் பண்பாடு, கலை, கலாச்சாரத்தை இரண்டாம் தரத்துக்கு பின்தள்ளிவிட்டது. ‘காசே தான் கடவுளடா…’ என்று சமூக விழுமியங்களை அப்படியே அது புரட்டிப் போட்டுள்ளது. புலம்பெயர் ஹொட்டேலியர்கள் தாயக மண்ணின் சமூகச் சீரழிவுகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளனர். புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் கள்ள உறுதி எழுதுவதில் வல்லவர்கள் தான். அது இயலாவிட்டால் வேலிப் பிரச்சினையையும் காணிப் பிரச்சினையையும் கூலிப்படைகளை வைத்துக் கையாள்கின்றனர்.

யாழ் நல்லூரடியில் காம விடுதி என்று எல்லோராலும் அறியப்பட்ட லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் குடுமி ஜெயா என்று அறியப்பட்ட ஜெயந்திரனும் ஒரு சட்டத்தரணியின் வாரிசுதான். பாரிஸ் லாகூர்னேயில் உள்ள சிவன் கோயிலின் முதலாளி இவர். இந்த ஹொட்டேலை விஸ்தரிப்பதற்கான காணியை சட்டத்துக்குப் புறம்பாக ஆனால் சட்டபூர்வமாகக் களவாடியே ஹொட்டலை விஸ்தரித்துள்ளார். இலங்கையின் நன்கு அறியப்பட்ட இடதுசாரி அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான மங்கள முனெசிங்கேயின் மனைவி ஞானா முனெசிங்கேக்குச் சேரவேண்டிய காணியையே குடுமி ஜெயா ஆட்டையைப் போட்டார். மங்கள முனெசிங்கே நவ சம சமாஜக் கட்சியில் பாராளுமன்றம் சென்றவர். 1993 இல் உருவாக்கப்பட்ட இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் உருவாக்கப்பட்ட ‘மங்கள முனெசிங்கே ஆணைக்குழுவுக்கு தலைமையேற்றவர். பின்னாட்களில் இந்தியா மற்றும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றியவர். இவருடைய மனைவி ஞானா யாழ்ப்பாணம் நல்லூரடியைச் சேர்ந்தவர்.

தனது ஹொட்டலை விஸ்தரிப்பதற்காக அயலில் உள்ள காணியில் கண் வைத்த குடுமி ஜெயா காணிச் சொந்தக்கரரரைத் தேடி வலைவிரித்தார். அப்போது அக்காணியின் உடமையாளரான ஞானாவுடைய சகோதரி மீனா ரட்ணம் இந்தியாவின் புத்தபக்தியில் உள்ள சாயி பாபாவின் ஆச்சிரமத்தில் இருப்பதை அறிந்து நேரடியாகவே அங்கு சென்றார். அவரோட ஒட்டுறவாகப் பழகி அவருடைய சகோதரிக்கு ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொண்டு வந்துள்ளார். அக்கடிதத்திலிருந்த கையெழுத்தைப் போடப் பழகி அக்காணிக்கான எழுத்துமூலமான உரிமத்தை, கனடாவில் உள்ள குடுமி ஜெயாவின் சகோதரி ரஞ்சினி ராகவனின் பெயரில் பெற்றுக்கொண்டுள்ளார். அதனை திருட்டுத்தனமாக அக்காணியை விற்பதற்கான ஒப்புதலாக மாற்றி அக்காணியை தனக்குத் தெரிந்த ஒருவருக்கு மாற்றி எழுதியுள்ளார். அதன் பின் காணியை தனது வட்டத்திற்குள் உள்ள மூன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மாற்றி எழுதி, இறுதியில் தன்னுடைய பெயருக்கு மாற்றி பெற்றுக்கொண்டார்.

ஒரு பெயர்பெற்ற சிங்கள அரசியல்வாதியின், ராஜதந்திரியின் மனைவிக்கு சேரவேண்டிய காணியை ஒரு சதமும் செலுத்தாமல் ஆட்டையைப் போட்ட குடுமி ஜெயா, ஞானா முனெசிங்கேக்கு நாமத்தைப் போட்டார்.

இதுபற்றி மங்கள முனசிங்கேயின் குடும்ப நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில், “இதில் இருந்த வேடிக்கை என்னவென்றால் குடுமி ஜெயாவின் சகோதரி ரஞ்சினி ராகவன் கனடாவிலிருந்து இலங்கைக்கோ இந்தியாவுக்கோ வரவில்லை. இருவருடைய கையெழுத்துக்களையும் குடுமி ஜெயாவே வைத்து இந்தக் காணி மோசடியைச் செய்தார்” என்கிறார்.

இவ்வாறான செயல்களை கண்டிப்பதற்கு மாறாக இதனை ஒரு கெட்டித்தனம், புத்திசாலித்தனம் என்று எண்ணும் மனோபாவம் இன்று தமிழ் மக்கள் மத்தியில் வளர ஆரம்பித்துள்ளது. என்ன செய்தாவது பணம் புரட்டினால் அது கெட்டிக்காரத்தனம் என்று பணம் உள்ளவர்களுக்குப் பின் ஒரு கூட்டம் குவிகிறது. ஹொட்டலியர்களுக்குப் பின்னும் வெளிநாட்டு பணமுதலைகளுக்குப் பின்னும் ஒரு கூட்டம் எப்போது இருக்கும். குடுமி ஜெயா போன்றவர்கள் இவ்வாறான மோசடிகளை தனித்துச் செய்ய முடிவதில்லை. இவ்வாறானவர்களுக்கு சட்டத்தரணிகளும் துணை போகின்றனர். ஒரே நாளில் ஒரே காணிக்கு மூன்று உறுதிகளை முடித்ததாக யாழ் சட்டத்தரணி கௌதமன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவருடைய தந்தை வீரகத்தியே அதன் பின்னணியில் இருந்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவருக்கும் குடுமி ஜெயாவின் குடும்பத்துக்கும் நெருங்கிய உறவு உண்டு.

‘சட்டத்தரணி தொழில் ஒரு சுரண்டல் தொழில்’ – சட்டத்தரணி ரங்கன் தேவராஜன்

இவர்கள் மத்தியில் சமூக அக்கறையுடைய சிலரும் இல்லாமல் இல்லை. பிரித்தானியாவில் நீண்டகாலம் சட்டத்தரணியாக இருந்த ரங்கன் தேவராஜன் தற்போது யாழில் சட்டத்தரணியாக கடமையாற்றுகின்றார். இவர் பாதிக்கப்பட்ட பலருக்கு அவர்களுடைய காணிகளை சட்டப்படி பெற்றுக்கொடுப்பதில் கட்டணம் வாங்காமல் பணியாற்றி வருகின்றார். இவர் பொதுவில் சட்டத்தரணிகள் பற்றிக் குறிப்பிடுகின்ற போது “சட்டத்தரணிகள் தொழில் என்பது மோசமான ஒரு தொழிலாக்கப்பட்டுவிட்டதுஇ மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் ஒரு தொழிலாக இது மாறி இருக்கின்றது” என்று இவர் லண்டனில் இருக்கின்ற போது தன்னுடைய நண்பர்கள் மத்தியில் குறிப்பிடுவார். இவர் தன்னுடைய சேவை மனப்பான்மையால் பிழைக்கத் தெரியாதவர்’ என்று பெயரெடுத்தவர். லண்டனிலும் கட்டணம் வாங்காமலேயே குரலற்றவர்களின் குரலாக வாதாடியவர்.

அன்று தமிழ் ஹவுசிங்கின் Thamil Community Housing Association பொறுப்பதிகாரியாக இருந்த, தற்போதைய ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் மாறன் என்பவரை வேலையால் கலைக்க எடுத்த அத்தனை முயற்சிகளையும் ரங்கன் தேவராஜன் தொழில் நீதிமன்ற விசாரணை தொடங்கிய சில நிமிடங்களிலேயே உடைத்து மாறனுக்கு நிதியைப் பெற்றுக்கொடுத்தார். கணிசமான தொகை இழப்பீட்டையும் பெற்றுக் கொடுத்தார். இந்த வழக்கை ரங்கன் தேவராஜன் நண்பருக்கான உதவியாகவே வாதாடி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப் பற்றி புறம்தூற்றி அவர் 20,000 பவுண்டுகள் தனக்குத் தரவேண்டும் என லண்டனில் தவறணையில் சட்ட நிறுவனம் நடத்தும் ரரின் கொன்ஸ்ரன்ரைன் என்பவர் சண்டே லீடர் பத்திரிகை மற்றும் சமூக வலைத்தளங்களில் எழுதியிருந்தார். இறுதியில் ரரின் கொன்ஸ்ரன்ரைன் நீதிமன்றில் மண்கவ்வியதுடன் அபராதமும் செலுத்தப் பணிக்கப்பட்டார். இது பற்றி சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் வருமாறு குறிப்பிடுகின்றார்:

 

“நான் இருபதினாயிரம் பவுண்டஸ் தரவேணுமெண்டு கொன்ஸ்ரன்ரைன் திரும்பத் திரும்பக் கதையளந்து திரியக் காரணம். கொன்ஸ்ரன்ரைன் வழக்குப்போட்டு வாங்கிக்கட்டியதால் தான். இந்த வழக்கைவிட கொன்ஸ்ரன்ரைனின் நெருங்கிய உறவினரான யோகரத்தினம் என்ற பெயருடைய இன்னொரு பிரகிருதிக்கு எதிராக நீதிமன்றில் நான் போட்ட வழக்கொன்றிலும்; அன்னார் மூக்கை நுழைத்து ஒரு இரண்டாயிரம் பவுண்டஸ் வரை இழந்ததும்இ என்னை வைத்துப் பணம் பண்ண வெளிக்கிட்டு பல்லுடைபட்டதும், கொன்ஸ்ரன்ரைனின் ஆத்திரத்திற்கான இதர காரணங்கள்” என்றார். (ரரின் கொன்ஸ்ரன்ரைன் பற்றி சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் முகநூலில் மேற்கொண்ட பதிவு அருகில்.)

(Cartoon: Morten Morland (The Times, 2010)

கொஞ்சம் சொத்துக்களை வளைத்துப் போட்டு பணமும், சட்டப்படி நாலு வசனத்தில் கடிதமும் எழுதத் தெரிந்ததும், மற்றவர்களின் உழைப்பையும் சொத்துக்களையும் பறிப்பதற்கு என்றே ஒரு சட்டம்பிக் கூட்டம் உள்ளது. சும்மா இருந்து பணம் பண்ணும் வித்தையை கோயில் ஆசாமிகள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், ஹொட்டேலியர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். இவர்கள் பற்றி மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் பற்றி மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் ஆசாமிகள் கோட்டும் சுட்டும் போட்டுத் தான் திரிகிறார்கள்.