ரமேஸ் பத்திரன

ரமேஸ் பத்திரன

“விடுதலைப்புலிகளால் சிங்களவர்களை விட தமிழர்களே அதிக துயரங்களை எதிர்கொண்டார்கள்.” – அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன

இலங்கையில் காணப்படும் விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக புலம்பெயர் தமிழர்களை நோக்கி தனது நேசக்கரங்களை நீட்டுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

சண்டே ஒப்சேவரிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

எங்களிடம் பாரபட்சம் என்பது இல்லை.  அரசாங்கம் குறித்து எவருக்காவது தவறான கருத்து காணப்பட்டால் அந்த விடயங்களிற்கு தீர்வை காண்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தை மேசைகளிற்கு வரத்தயார்.

கட்சி என்ற அடிப்படையிலும் அரசாங்கம் என்ற அடிப்படையிலும் இன மத பாகுபாடின்றி அனைத்து இனத்தவர்களையும் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு எங்களிற்கு உள்ளது. நாங்கள் இது குறித்து திறந்த மனதுடன் இருக்கின்றோம். 2009 இல் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்ததன் மூலம் நாங்கள் சிங்கள மக்களின் உரிமைகளை மாத்திரம் பாதுகாக்கவில்லை நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளையும் பாதுகாத்துள்ளோம்.

விடுதலைப்புலிகள் மோதலில் ஈடுபட்டவேளை சில வேளைகளில் தமிழர்கள் சிங்களவர்களை விட அதிக துயரங்களை எதிர்கொண்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் தொடர்ந்தும் எம்.சி.சி உடன்படிக்கையை முன்னெடுக்க விரும்பவில்லை எங்களிற்கு அதுதேவையில்லை ” – அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன 

“நாங்கள் தொடர்ந்தும் எம்.சி.சி உடன்படிக்கையை முன்னெடுக்க விரும்பவில்லை எங்களிற்கு அது தேவையில்லை” என அமைச்சரவை பேச்சாளர்களில் ஒருவரான ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

சிலோன் டுடேயிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எம்.சி.சி உடன்படிக்கை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நால்வர் கொண்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தவுடன் நாங்கள் அதனை நிராகரித்துவிட்டோம் என ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழு தனது பரிந்துரையில் எம்;சி.சி உடன்படிக்கை இலங்கைக்கு பொருத்தமானதில்லை என தெரிவித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் எம்.சி.சி உடன்படிக்கையில் காணப்படுகின்ற அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை கூட மேற்கொள்ளவில்லை, அதில் மாற்றங்களை கோரவில்லை என தெரிவித்துள்ள ரமேஸ் பத்திரண நாங்கள் நேரடியாக அதனை நிராகரித்துவிட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தொடர்ந்தும் எம்.சி.சி உடன்படிக்கையை முன்னெடுக்க விரும்பவில்லை எங்களிற்கு அதுதேவையில்லை என அதிகாரிகளிற்கு தெரிவித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.