யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன்

வர்த்தகர்களிடம் கையேந்தி விழாக்களை நடத்தும் அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு வர்த்தக நிலையங்கள்  உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்..? –

“வர்த்தகர்களிடம் கையேந்தி விழாக்களை நடத்தும் அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு வர்த்தக நிலையங்கள்  உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்..? என கேள்வி எழுப்பியுள்ளதுடன்  யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சரிவர ஆற்றுகிறார்களா என்பது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் கவனம் செலுத்த வேண்டும் அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா கோரிக்கை முன்வைத்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் பல உணவகங்களில் விலை பட்டியல் இன்னும் காட்சிப்படுத்தாத நிலை காணப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இயங்கும் பாவனையாளர் அலுவலகம் அதிகார சபையின் மாவட்ட அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சரிவர செய்கிறார்களா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.

நான் கடந்த வாரம் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பாவனையாளர் அதிகார சபைக்குச் சென்றிருந்தேன் மாவட்ட அதிகாரி எங்கே என கேட்டேன் களச் செயற்பாட்டுக்குச் சென்று இருப்பதாக அங்கு கடமையில் இருந்த பெண் உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.

களச் செயபாடு எனக் கூறிக்கொண்டு அதிகாரியும் உத்தியோகத்தர்கள் உண்மையில் கடமைக்கு தான் செல்கிறார்களா என அரசாங்க அதிபர் ஆராய வேண்டும்.

ஏனெனில், யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள அனேகமான வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்களில் விலை பட்டியல் காட்சிப்படுத்தப்படுவதில்லை.

ஆனால், அலுவலகத்தில் கேட்டால் களச் செயற் பாட்டுக்குச் சென்றிருக்கிறோம் என கூறும் நிலையில் ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை எத்தனை கடைக்குச் செல்கிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.

யாழ்ப்பாண நகர பகுதிகளில் பைகளில் அடைக்கப்பட்ட கறி மிளகாய் தூள் 600 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் ஒரு கிலோ மிளகாய்த்தூளை அரைப்பதற்கு 1,500 ரூபாய் செலவாகிறது.

குறித்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அதிகார சபைக்கு தெரியப்படுத்திய போது மிளகாய் தூள் தரம் தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

மக்களின் வரிப்பணத்தை சம்பளமாகப் பெறும் அரச உத்தியோகத்தர்களான பாவனையாளர் அதிகார உத்தியோர்கள் குறித்த மிளகாய் பை தொடர்பில் இதுவரை அறிந்திருக்கவில்லையா.

அரச உத்தியோகத்தர்களை குறை கூறுவது எனது நோக்கம் அல்ல இதே ஊடக சந்திப்பு போன்ற கடந்த மாதமும் செய்த போது குறித்த மிளகாய் பாக்கெட் தொடர்பில் கருத்துக்களை முன் வைத்தேன் ஆனால் எவரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை .

விலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் பாவணையாளர்கள் அதிகார சபைக்கு  மட்டும் சட்டம் இருக்குது என்றால் தரமற்ற பொருள் தொடர்பில் அவதானித்தால் அதை சம்பந்தப்பட்ட பொது சுகாதார பரிசோதர்களுக்கு ஏன் அறிவிக்க முடியாது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக கலாச்சார விழாக்கள் மற்றும்  பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வர்த்தகர்களிடம் பணம் பொற்று விழாக்களை நடத்துங்கள் எனக்  கூறப்பட்டதாக அறிந்தேன்.

வர்த்தகர்களிடம் கையேந்தி விழாக்களை நடத்தும் அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு வர்த்தக நிலையங்கள்  உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆகவே, மக்கள் வரி பணத்தை பெற்றுக்கொண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பார் மக்களின் மக்களின் அன்றாட பிரச்சினை தொடர்பில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என கூறிக் கொள்வதோடு அரசாங்க அதிபரும் தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு அழைப்பு விடுத்த மாவட்ட அரசாங்க அதிபர் !

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்,  கால்நடைகளை வெட்டுதல், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி நேற்றைய தினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினார்.

இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பல அளவீடு செய்யப்படாது பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே  மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

 

மேலும் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன காணியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய நிலையில், சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பொருட்கள் களவாடப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.எனவே இராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பல அளவீடு செய்யப்படாது பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளது.

குறித்த காணிகளையும் விரைவில் அளவீடு செய்யும் நடவடிக்கையில் உரிய சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இராணுவத்தினர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குறிப்பாக மீள்குடியேறிய மக்களுக்கு இராணுவத்தினரால் 700ற்கும் மேற்பட்ட வீடுகள் இராணுவத்தினரின் பங்களிப்போடு கட்டி முடிக்கப்பட்டுள்ள அதேபோல் எதிர்வரும் காலத்திலும் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் தேவைகள் மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்ய இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தான் கோரியதாகவும் தெரிவித்தார்.

 

காங்கேசன்துறையில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியேற மக்கள் தயக்கம் !

இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறையில் இராணுவத்தினிடமிருந்தும் கடற்படையினரிடமிருந்தும் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் நீண்ட காலமாக இடம்பெற்றாலும் சிறிது சிறிதாக காணிகள் விடுவிக்கப்படுகின்ற போதிலும் ஒரு இடர்பாடு காணப்படுகின்றது.

முகாம்களில் இருக்கின்றவர்களை நாங்கள் விடுவிக்கப்பட்ட இடங்களில் குடியேற்றக்கூடியவாறு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.

விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காணிகளை முழுமையாக கையேற்று அதனை உரிய பாவனைக்கு உட்படுத்தினால் மாத்திரமே தொடர்ச்சியாக காணிகளை விடுவிப்பதற்கு உதவியாக இருக்கும்.

விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினர் இருந்து வெளியேறியுள்ளனர். எனவே காணி உரிமையாளர்கள் தமது காணிகளை கையேற்கத் தவறுவதால் அந்த கட்டிடடப் பொருட்களை சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்கின்ற நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் தங்களுடைய சொந்த காணிகளை கையேற்பதன் மூலமே நாங்கள் மேலதிகமாக படையினரிடம் உள்ள காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

விடுவிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தமது காணிகளை பொறுப்பேற்பதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.