யாழ்ப்பாண நூலகம்

யாழ்ப்பாண நூலகம்

யாழ் நூலக எரிப்பு – தமிழக ஹிந்தி மொழித் திணிப்புடன் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் காட்சியாகிறது !

யாழ் நூலக எரிப்பு – தமிழக ஹிந்தி மொழித் திணிப்புடன் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் காட்சியாகிறது !

 

தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி இருவரும் இலங்கையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்கள் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். மும்மொழிக் கொள்கையை மறைமுக இந்தித் திணிப்பாக கருதும் தமிழ்நாட்டு மக்கள் அதனை கடுமையாக எதிர்க்கின்றனர். அந்தவகையில் மொழித் திணிப்பை எதிர்க்கும் கதைக்களத்தைக் கொண்ட பராசக்தி படம் இலங்கையிலும் படமாக்கப்படவுள்ளது.

‘சூரரைப் போற்று’ என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய பெண் இயக்குநர் சுதா கொங்கரா ‘பராசக்தி’ திரைப் படத்தையும் இயக்குகிறார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெறவுள்ளது. இதில் யாழ் நூலக எரிப்பை மையப்படுத்திய காட்சிகளும் படத்தில் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிக்கப்பட்ட யாழ்.நூலகமும் – எரியூட்டப்பட்ட திகதி தெரியாத தமிழர்களும் !

மே 31 இல் அரச பேரினவாதம் நூலகத்தை அழித்தது! தமிழர்கள் நூலகச் சிந்தனையை அழித்தனர்:

 

ஆண்டுகள் உருண்டோடி யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டு நாற்பதாவது ஆண்டு ஆகிவிட்டது. ஆண்டுகளைக் கடந்து செல்வது போல் எமது வரலாறுகளையும் பதிவுகளையும் கூட நாம் மிக எளிதில் கடந்து அல்ல பாய்ந்தே சென்றுவிடுகின்றோம். வேகத்திற்கு அளித்த மதிப்பை விவேகத்திற்கு அளிகாததால் தமிழ் சமூகம் இன்று தனது இருத்தலுக்கான அடிப்படைகளையே இழந்துகொண்டிருக்கின்றது. ‘செய் அல்லது செத்துமடி’ என்ற விவேகமற்ற கோசங்கள் என்னத்தையாவது செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்ற நிலையில் நிற்கின்றோம்.

 

இலங்கையில் தமிழ் அறிவுப்புலத்தின் மையப்புள்ளியாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் அமைந்தது. யாழ்ப்பாண நூலகம் பற்றிய குறிப்பு ஏப்ரல் 10 1894 இல் தி ஓவர்லன்ட் சிலோன் ஓப்சேர்வர் என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இது யாழ்ப்பாண நூலகத்தின் தொன்மையயை வெளிப்படுத்தி நிற்கின்றது. நூறாண்டுகளைக் கடந்த யாழ்ப்பாண நூலகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் யாழ்ப்பாண அறிவுப்புலத்தின் எழுச்சியயையும் வீழ்ச்சியயையும் பிரதிபலிக்கpன்றது. இது யாழ்ப்பாண அறிவுப்புலத்தை மட்டுமல்ல அச்சமூகத்தின் சிந்தனையையும் பிரதிபலிக்கும் ஒரு நிறுவனமாகவும் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலையின் பிரதிபலிப்பாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.

இக்கட்டுரையை வீடியோ வடிவில் காண கீழே உள்ள Link ஐ Click செய்யுங்கள்..;