மாகாண சபை

மாகாண சபை

பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஜனாதிபதி ஆட்சி முறையும் முடிவுக்கு வருகின்றது ! மாகாண சபைக்கான அதிகாரப் பரவலாக்கலும் மேற்கொள்ளப்படும் !

பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஜனாதிபதி ஆட்சி முறையும் முடிவுக்கு வருகின்றது ! க்கான அதிகாரப் பரவலாக்கலும் மேற்கொள்ளப்படும் !

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருமுன் குறிப்பிட்டது போல பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என தேசிய மக்கள் சக்திக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகையைப் பெறுவதற்காக அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு தற்காலிகத் தடையை விதிக்கலாம் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் வரிச்சலுகையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாது ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சமிஞ்ஙையை வழங்கியுள்ளது. இந்தி சமிஞ்ஙையை இலங்கை அரசாங்கம் வரவேற்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க முடிவெடுத்துள்ள நிலையில் தற்காலிகமாக ஒரு தடையைக் கொண்டுவருவதில் அரசு எவ்வித பிரச்சினையும் இருக்க வாய்ப்பில்லை என தேசிய மக்கள் சக்திக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதிலும் ஆர்வமாகவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரியவருகின்றது. ஜேவிபியோடு கூட்டிணைந்துள்ள கல்வியியலாளர் மற்றும் அமைப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அடுத்த தேர்தலுக்குச் செல்வதற்கு முன்னதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருப்பதாக தேசம்நெற்க்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நிறைவேற்றுவதன் மூலம் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன் மேலும் 5 ஆண்டுகளுக்கான ஆணையை மக்களிடம் இருந்து பெற்றுவிடலாம் என்ற நம்பிகையுடன் ஜேவிபி உள்ளது.

யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் தேசிய மக்கள் சக்தி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் என்பதை கடல்தொழில் அமைச்சர் சந்திரசேகரும் ஏனைய ஜேவிபி மைய அமைச்சர்களும் வெளிப்படையாக இதனைத் தெரிவிப்பதன் பின்னணி இதுவே என தேசிய மக்கள் சக்திக்கு நெருங்கியவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடும்போக்குவாதக் கொள்கைகளைத் தளர்த்தி கூட்டுச்சேர்ந்துள்ள அமைப்புகளோடு தேசிய மக்கள் சக்தியாக பயணிப்பதன் மூலம் மட்டுமே இந்த அரசியல் தளத்தில் தக்க வைக்கமுடியும் என்பதை ஜேவிபியும் உணர்த்துள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பின்னணியில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கான மூலோபாயமாக உள்ள மாகாணசபைக்கான தேர்தலை 2026 இல் நடத்துவதற்கு தட்டமிட்டுள்ளனர். அந்த மாகாணசபைக்கான நான்காவது தேர்தலிலும் தாங்களே வெற்றிபெறுவோம் என்ற உறுதியோடு தேசிய மக்கள் சக்தி உள்ளது. அந்த மாகாண சபைக்கான உண்மையான அதிகாரப் பரவலாக்கத்தை செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகாண சபையிலும் கை வைக்க மாட்டோம். தையிட்டி விவகாரத்தில் தமிழர்களின் விருப்பத்துக்கு மாறாக செயற்பட மாட்டோம்.” – இராமலிங்கம் சந்திரசேகர் !

மாகாண சபையிலும் கை வைக்க மாட்டோம். தையிட்டி விவகாரத்தில் தமிழர்களின் விருப்பத்துக்கு மாறாக செயற்பட மாட்டோம்.” – இராமலிங்கம் சந்திரசேகர் !

 

இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்.மாவட்ட செயலகத்தில் சீன அரசாங்கத்தின் உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுத்திருந்த போது தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்தும் அமைச்சர் தெரிவிக்கையில்,

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ்வரும் மாகாண சபை முறைமை நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தர தீர்வு என நாம் நம்பவில்லை. மாகாண சபை முறைமையை அர்த்தமுள்ள முறைமையாக மாற்றியமைப்போம். சிறுபான்மையின மக்கள் உட்பட நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும்.

அதேவேளை, மக்களுடன் கலந்துரையாடி, நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் ஏற்படாத வகையில் தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். தையிட்டி விகாரை விடயத்தில் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக எமது தீர்மானம் இருக்கும்.

முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கருத்து என்னவென்பதை நாம் பார்க்க வேண்டும். தையிட்டியில் விகாரை கட்டப்படும்போது அதுதொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்காதவர்கள் தற்போது அந்தப்பிரச்சினையை பூதாகரமாக தூக்கிப்பிடிக்கின்றார்கள். தையிட்டி விகாரை விடயத்தினை தூக்கிப்பிடிப்பவர்கள் உண்மையிலேயே அந்த விடயத்தினை முன்னெடுக்கின்றார்களா? இல்லை விரைவில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் வரவிருப்பதால் அதற்கான துருப்புச்சீட்டாக இதனைப் பயன்படுத்தப் பார்க்கின்றார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

அனுர அரசு இந்தியாவால் இலங்கை மீது திணிக்கப்பட்ட 13ஆம் திருத்தம்-மாகாணசபை முறையை நடைமுறையில் வைத்திருப்பார்களா?

அனுர அரசு இந்தியாவால் இலங்கை மீது திணிக்கப்பட்ட 13ஆம் திருத்தம்-மாகாணசபை முறையை நடைமுறையில் வைத்திருப்பார்களா? – அரசியல் செயற்பாட்டாளர் இக்னீஷியஸ் செல்லையா மனோரஞ்சனுடனான நேர்காணல்.

இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டாலும் கூட அதன் ஆரம்ப புள்ளியான ஜே.வி.பி இந்திய ஏகாதிபத்தியத்தை முழுமையாக எதிர்க்கும் நோக்குடன் ஆரம்பகாலங்களில் செயற்பட்ட ஓர் அமைப்பாகும். இந்த நிலையில் ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் இந்திய எதிர்ப்பை நடைமுறைப்படுத்துமா..? புலிகளால் எதிர்க்கப்பட்ட 13ஆம் திருத்தத்தை – மாகாண சபை முறையை புலிகள் எதிர்த்ததன் பின்னணி..?, யாழ்பாண வெள்ளாளியம் 13ஆம் திருத்தத்தை எதிர்த்தது ஏன்..? தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் அதன் அடித்தளம் பெறுகின்ற முக்கியத்துவம் என பல விடயங்களை அரசியல் செயற்பாட்டாளர் இக்னீஷியஸ் செல்லையா மனோரஞ்சனுடன் கலந்துரையாடுகிறார் தேசம் ஜெயபாலன்.

 

 

 

ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை – தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் உள்ளது. ஆகவே இந்த செயல்முறையில் தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை என சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளோம். அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதுடன். மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) இன்று கண்டியில் வெளியிடப்பட்டது.

 

இதிலேயே இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

மேலும்,6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் மேலும் அதிகபட்ச நிதி திறன் மற்றும் செயல்திறனுடன் மாகாண சபைகள் செயல்படுவதை உறுதிசெய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு, அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம். பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.