பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஜனாதிபதி ஆட்சி முறையும் முடிவுக்கு வருகின்றது ! மாகாண சபைக்கான அதிகாரப் பரவலாக்கலும் மேற்கொள்ளப்படும் !

பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஜனாதிபதி ஆட்சி முறையும் முடிவுக்கு வருகின்றது ! க்கான அதிகாரப் பரவலாக்கலும் மேற்கொள்ளப்படும் !

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருமுன் குறிப்பிட்டது போல பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என தேசிய மக்கள் சக்திக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகையைப் பெறுவதற்காக அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு தற்காலிகத் தடையை விதிக்கலாம் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் வரிச்சலுகையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாது ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சமிஞ்ஙையை வழங்கியுள்ளது. இந்தி சமிஞ்ஙையை இலங்கை அரசாங்கம் வரவேற்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க முடிவெடுத்துள்ள நிலையில் தற்காலிகமாக ஒரு தடையைக் கொண்டுவருவதில் அரசு எவ்வித பிரச்சினையும் இருக்க வாய்ப்பில்லை என தேசிய மக்கள் சக்திக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதிலும் ஆர்வமாகவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரியவருகின்றது. ஜேவிபியோடு கூட்டிணைந்துள்ள கல்வியியலாளர் மற்றும் அமைப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அடுத்த தேர்தலுக்குச் செல்வதற்கு முன்னதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருப்பதாக தேசம்நெற்க்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நிறைவேற்றுவதன் மூலம் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன் மேலும் 5 ஆண்டுகளுக்கான ஆணையை மக்களிடம் இருந்து பெற்றுவிடலாம் என்ற நம்பிகையுடன் ஜேவிபி உள்ளது.

யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் தேசிய மக்கள் சக்தி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் என்பதை கடல்தொழில் அமைச்சர் சந்திரசேகரும் ஏனைய ஜேவிபி மைய அமைச்சர்களும் வெளிப்படையாக இதனைத் தெரிவிப்பதன் பின்னணி இதுவே என தேசிய மக்கள் சக்திக்கு நெருங்கியவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடும்போக்குவாதக் கொள்கைகளைத் தளர்த்தி கூட்டுச்சேர்ந்துள்ள அமைப்புகளோடு தேசிய மக்கள் சக்தியாக பயணிப்பதன் மூலம் மட்டுமே இந்த அரசியல் தளத்தில் தக்க வைக்கமுடியும் என்பதை ஜேவிபியும் உணர்த்துள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பின்னணியில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கான மூலோபாயமாக உள்ள மாகாணசபைக்கான தேர்தலை 2026 இல் நடத்துவதற்கு தட்டமிட்டுள்ளனர். அந்த மாகாணசபைக்கான நான்காவது தேர்தலிலும் தாங்களே வெற்றிபெறுவோம் என்ற உறுதியோடு தேசிய மக்கள் சக்தி உள்ளது. அந்த மாகாண சபைக்கான உண்மையான அதிகாரப் பரவலாக்கத்தை செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *