மஹிந்த அமரவீர

மஹிந்த அமரவீர

“இந்த வருடம் ஒரு நெல்மணி அரிசியை கூட இறக்குமதி செய்யவில்லை.” – விவசாயிகளை பாராட்டிய விவசாய அமைச்சர் !

எமது நாட்டில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் மூலம் இவ்வருடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை சேமிக்க முடிந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தேசிய விவசாயக் கல்விக் கண்காட்சியை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், உத்தேச நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சில் நடைபெற்றது.

2022 ஆம் ஆண்டில் 800,000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த அரிசி ஒரு வருடத்தில் இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மிகப்பெரிய தொகையாகும். மேலும் ஜனவரி முதல் இறுதி வரை அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை. இந்த 800,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது” என அமைச்சர் தெரிவித்தார்.

“இந்த வருடம் இதுவரையில் ஒரு நெல்மணியை கூட இறக்குமதி செய்யவில்லை. அதிகப்படியான அரிசியைப் பயன்படுத்துவது குறித்து பரந்த அளவில் சிந்திக்க வேண்டியது அவசியம் மற்றும் ஏற்றுமதி செய்யக்கூடிய அரிசி வகைகளின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயிரிடப்படாத காணிகளை அரசு கையகப்படுத்தும் – அமைச்சர் மஹிந்த அமரவீர

நாடளாவிய ரீதியில் பயிரிடப்படாமல் விடப்பட்டுள்ள அனைத்து வயல் காணிகளையும் உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு 05 வருட காலத்திற்கு கையகப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் சுமார் 300,000 தொன் பிளாஸ்டிக்கை இறக்குமதி செய்யும் இலங்கை !

2020ஆம் ஆண்டு 611 மில்லியன் டொலர் பெறுமதியான பிளாஸ்டிக் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் UN COMTRADE தரவுத்தளத்தின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும்  சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஹேமந்த விதானகே உள்ளிட்ட சூழல் ஆர்வலர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது. சிங்கராஜ வன வலயத்தால் கையகப்படுத்தப்படவுள்ள ஏனைய காடுகள் மற்றும் சிங்கராஜா வனப்பகுதியை அண்மித்துள்ள சுற்றாடல் பாதிப்புக்குக் காரணமான மனித செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை வருடாந்தம் சுமார் 300,000 தொன் பிளாஸ்டிக்கை இறக்குமதி செய்கிறது, அதில் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை சட்டவிரோதமாக சுற்றுச்சூழலில் கொட்டப்படுகிறது.

பெரும்பாலானவை மனிதர்களால் எரிக்கப்பட்டு பாரிய காற்று மாசை ஏற்படுத்துகின்றன.

வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை – – அமைச்சர் மஹிந்த அமரவீர

பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சகல பஸ் வண்டிகளையும் சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் வண்டிகள் மாத்திரமன்றி மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுப்படவுள்ளன.

இவ்வாறு 600 பஸ்கள் சேவைக்கென தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக சகல புகையிரதங்களும் விசேட நாட்களில் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி, பதுளை, பெலியத்த வரையில் மேலதிக ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. தேவையேற்படும்; பட்சத்தில் மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.