பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சகல பஸ் வண்டிகளையும் சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் வண்டிகள் மாத்திரமன்றி மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுப்படவுள்ளன.
இவ்வாறு 600 பஸ்கள் சேவைக்கென தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக சகல புகையிரதங்களும் விசேட நாட்களில் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி, பதுளை, பெலியத்த வரையில் மேலதிக ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. தேவையேற்படும்; பட்சத்தில் மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
|
ReplyForward
|