பா.உ இளங்குமரன்

பா.உ இளங்குமரன்

இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார் ! பா உ சிறிதரன் – “கறன்ட் கம்பம் இல்லாம கறன்ட் வராதில்லா” பா உ இளங்குமரன்

இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார் ! பா உ சிறிதரன் – “கறன்ட் கம்பம் இல்லாம கறன்ட் வராதில்லா” பா உ இளங்குமரன்

பா உ சிவஞானம் சிறிதரன் பா உ இளங்குமரனின் தொழிலை நையாண்டி செய்து கிளிநொச்சியில் உரையாற்றினார். தனக்கு கட்சிக்குள் நடக்கின்ற சொந்தக் கதை சோகக் கதைகளை எல்லாம் கொட்டித் தீர்த்து கிளிநொச்சியில் உள்ள நான்கு பிரதேச சபைகளைக் கைப்பற்றப் பெரும் பிரயத்தனம் எடுத்துவருகின்றார். கிளி கனிஸ்டா மகாவித்தியாலயத்தில் அதிபராக இருந்தவர். இன்றும் அப்பாடசாலையின் செயற்பாடுகளில் கட்டுப்பாடுகளை வைத்துள்ளார். கிளிநொச்சி பா உ சிறிதரனின் கோட்டை என்றால் மிகையல்ல. சிறிதரன் ஏன் எனக்கு இவ்வளவு பயப்படுகின்றார் என்று சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கேள்வி எழுப்பினார். அவருடைய பிரச்சாரப் பீரங்கி அலனைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சியை நாங்கள் முறியடித்தோம். அது தான் அவருக்குக் கோபம் என்றார் பா உ இளங்குமரன்.

 

கிளிநொச்சிக் கூட்டத்தில் அண்மையில் உரையாற்றுகின்ற போது பா உ இளங்குமரன் மின்சார சபையில் ஊழியராகப் பணியாற்றியதை கிண்டலடித்து: “இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார்” எனத் தனது தொழில் மேலாண்மையை வெளிப்படுத்தினார். இதே போல் பா உ இளங்குமரனின் தொழிலைக் கிண்டலடித்து ‘நாயைப் பிடியுங்கோ என்று வீடுவீடாய் மீற்றர் ரீடிங் எடுத்தவர், தன்னைப் போல் எம்பிபிஎஸ் படிக்காதவர்’ என்ற தொனியில் கருத்து வெளியிட்டு இருந்தார்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கிளி ஊடகவியலாளர் தமிழ்செல்வனை ‘வடக்கத்தையான்’ என்று பா உ சிறிதரன் திட்டிய ஒளிப்பதிவு வெளியாகி இருந்தது. அதுபோல் பா உ அர்ச்சுனா அமைச்சர் சந்திரசேகரை மலையகத் தமிழர்கள் பற்றிய பொதுப்புத்தியில் இருந்து கைநாட்டு எழுத வாசிக்கத் தெரியாதவர் என நையாண்டி பண்ணியதோடு தான் கப்பல் விட்ட பரம்பரையிலிருந்து வந்ததாகவும் மலையக மக்களை கள்ளத் தோணிகள் கப்பலில் வந்தவர்கள் எனவும் தெரிவித்திருந்தார். பா உ இரா சாணக்கியனும் அமைச்சர் சந்திரசேகரனது நாசியில் உள்ள ஒவ்வாமைப் பிரச்சினையை வைத்து நளினம் செய்திருந்தார். தமிழ தமிழ் தேசியத் தலைமைகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசியலை எதிர்கொள்ளும் அரசியல் வலிமை இல்லாததால் அவர்கள் தங்களது சாதி, பிரதேச, மதவாத அரசியலையும் எதிரணியினரின் தொழிலையும் வைத்து அரசியல் செய்யும் மூன்றாம்தர நிலைக்கு கீழிறங்கி உள்ளனர்.

இதே மூன்றாம் தர அரசியலைஇ தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகுதி மக்களுக்கு எதிராகவும் இந்த தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள் செய்கின்றனர். இவர்கள் விளிம்புநிலை மக்களை சமூகத்தில் பல்வேறு வகையிலும் ஒடுக்கப்படும் மக்களை, தொழிலாளர்களை, ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதிபர்கள், மருத்துவர்கள் என மேட்டுக்குடியைச் சேர்ந்த பரம்பரை மேல் தட்டினரையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதாலேயே தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியில் பா உ இளங்குமரன் என்ற சாதாரண மின்சாரசபை ஊழியரும் உள்ளார். சிறிபவானந்தரா மருத்துவ கலாநிதி இவ்வாறு பல தரப்பட்ட சமூக தொழில் பிரிவுகளில் உள்ளவர்களும் தோழமை அடிப்படையில் மக்களோடு மக்களாக இணைந்து செயற்படுகின்றனர்.

சிறிதரனின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது போல் அமைச்சர் சந்திரசேகர் கருத்துத் தெரிவிக்கையில் நீங்கள் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு பிரிந்து நின்று குழாயடிச் சண்டை பிடிக்கின்றீர்கள் என்று குற்றம்சாட்டினார்.

படலந்த வதைமுகாம் போல யாழ் நூலக எரிப்பு தொடர்பிலும் விசாரணை வேண்டும் – ஆளுங்கட்சி எம்.பி இளங்குமரன் !

படலந்த வதைமுகாம் போல யாழ் நூலக எரிப்பு தொடர்பிலும் விசாரணை வேண்டும் – ஆளுங்கட்சி எம்.பி இளங்குமரன் !

 

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்.பி.பி யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மிக நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழ் தேசியக் கட்சிகளின் எம்பிக்கள் இவ்விடயத்தில் எதுவும் தெரியாதவர்கள் கேளாதவர்கள் போன்றே இருந்து வந்தனர். மேலும் என்பிபி யை வீழ்த்த சஜித், ரணில் ஆகியோருடன் இணைவதற்கு நேரம் பார்த்து காத்திருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றிய அவர், மழைக்காலத்தில் கத்தித் தானாகவே இறக்கும் தவளை போல வேட்புமனுவை சரியாக நிரப்பத் தெரியாமல் விலக்கப்பட்ட அர்ச்சுனா அணியினர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் இது தொடர்பில் தெளிவான அறிவுறுத்தல்களை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்

பா.உ இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து !

 

சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர், அவரது உதவியாளர் மற்றும் வாகனத்தின் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவரது உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் – தொழில்துறையை வளர்ப்பதன் மூலம் இளைஞர்கள் வெளியேற்றத்தை தடுப்போம் என்கிறார் பா.உ இளங்குமரன்!

வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் – தொழில்துறையை வளர்ப்பதன் மூலம் இளைஞர்கள் வெளியேற்றத்தை தடுப்போம் என்கிறார் பா.உ இளங்குமரன்!

 

வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் உருவாக்கப்படும்  என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன். நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய பா.உ இளங்குமரன், “கடந்த அரசாங்கத்தை விட எமது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கல்விக்கு மேலும் அதிக நிதியை ஒதுக்கி கல்வித் துறையை மேம்படுத்துவோம். நாட்டை விட்டு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.தற்போது பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு காரணம் நாட்டின் பொருளாதார பின்னடைவும் கிராமிய வறுமையுமே காரணம்.  நாங்கள் எமது நாட்டினுள்ளேயே தொழிற் துறைகளை உருவாக்கும் போது மாணவர்களும் இங்கே கல்வி கற்க கூடிய சூழ்நிலை ஏற்படும். என தெரிவித்தார்.

மேலும் பேசிய பா.உ இளங்குமரன், தங்கத் தீவாக இருந்த தீவகம், கடந்த ஆட்சியாளர்களின் திறனற்ற ஆட்சி காரணமாக தகரத் தீவாக மாற்றம் பெற்றுள்ளது. சுற்றுலாத்துறையை தீவகத்தில் அபிவிருத்தி செய்வதனூடாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் இடமாக மாற்றுவதனூடாக தீவகம் மீண்டும் செந்தளிப்பு பெறும். தீவகத்தை மீண்டும் தங்கத் தீவாக மிளிர வைப்போம்.

எதிர்காலத்தில் வடக்கில் மூன்று மத்திய பொருளாதார நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை மாங்குளத்திலும், பரந்தன் – ஆனையிறவை மையப்படுத்திய இடத்தில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும், பலாலியில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இங்கேயே தொழில்துறையை உருவாக்கி, இங்கேயே உழைத்து உண்ணக்கூடிய ஒரு நிலையை உருவாக்குவோம். கடந்த காலத்தில் மனித வளம் சிறந்த முகாமைத்துவம் இல்லாமையால் வீணடிக்கப்பட்டது. ஆனால் இனி நாங்கள் மனித வளத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு நிர்வகித்து நாட்டை கட்டியெழுப்புவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

என்.பி.பி இளங்குமரன் ஏற்படுத்திய வெளிச்சத்தில் குளிர்காயும் பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசிய குழுவினர் !

என்.பி.பி இளங்குமரன் ஏற்படுத்திய வெளிச்சத்தில் குளிர்காயும் பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசிய குழுவினர் !

 

யாழ்ப்பாணத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுண்ணாம்பு கல் அகழ்வு இடம்பெறுவதை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் என்.பி.பி பா.உ இளங்குமரன் அம்பலப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து சட்டவிரோதமான சுண்ணாம்பு கல் அகழ்வு நடைபெறுவது தொடர்பில் இதுவரை கண்டுகொள்ளாத யாழ்ப்பாணத்து ஊடகங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தற்போது பொறுப்புள்ளவர்களாக பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வடமாகாண ஆளுநரிடம் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை முடிவுறுத்தக்கோரி மனு ஒன்றை கையளித்துள்ளார். குறித்த மனுவில் யாழ்ப்பாணக் குடாநாடு கடலாலும், கடல் நீரேரிகளாலும் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்பட்டுவரும் கடல்மட்ட உயர்வு குடாநாட்டைப் பெருமளவு பாதிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடற்ற சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு காலநிலை மாற்றத்தால் ஏற்படவுள்ள பாதகங்களை மேலும் விரைவுபடுத்தும், அதிகப்படுத்தும். இவற்றைக் கருத்திற்கொண்டு விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் பொ. ஐங்கரநேசன்.

வட மாகாண சபையின் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சராக பணியாற்றியிருந்த பொன். ஐங்கரநேசனுக்கு சுண்ணாம்புக்கல் அகழப்படும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியாமலில்லை. கடந்த கால ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் கூட சுண்ணாம்புக்கல் அகழ்வு தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து சட்டவிரோதமான அகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் இவை தொடர்பில் வடக்கு மாகாண சபை இயங்குநிலையில் இருந்த போது இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை அப்போதைய அமைச்சர் பொன். ஐங்கரநேசன். மாறாக இரணைமடு குளத்தின் அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல திட்டங்களில் தங்களால் முடியுமானவரை எல்லாம் ஊழல் நடந்தது வடக்குமாகாண சபை இயங்கு நிலையில் இருந்த காலகட்டங்களில். இதனாலேயே வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில் இருந்த அனைவரையும் தமிழ்மக்கள் அடுத்தடுத்து அனைத்து தேர்தல்களிலும் நிராகரித்தனர் – நிராகரித்தும் வருகின்றனர்.

 

இவ்வாறான நிலையில் புதிதாக பாராளுமன்றம் தெரிவான என்.பி.பி இளங்குமரன் மீது ஊடக வெளிச்சம் விழ ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் அந்த வெளிச்சத்தில் தாங்களும் குளிர்காய எண்ணி வழக்கொழிந்து போன பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசிய வாதிகளும் தம் மௌனம் களைத்து சுண்ணாம்புக்கல் அகழ்வு பிரச்சினை பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். எவ்வாறான போதும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் ஆரோக்கியமானது தான் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.