பட்டலந்த அறிக்கை

பட்டலந்த அறிக்கை

கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மீள் விசாரணைக்குட்படுவர் :பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர !

கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மீள் விசாரணைக்குட்படுவர் :பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர !

 

கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பிரதியமைச்சர் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார் . அவர் மேலும் இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

இதனை அவர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில். நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை இதற்கு முதலிலே அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் பழிவாங்கப்பட்ட வரலாறு இருக்கின்றது. 1977 ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்துக்கு ஒரு விடுமுறையை வழங்கி மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் சிறுபான்மைக்கும் எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது அப்படிப்பட்ட நாட்டிலே நாங்கள் வாழுகின்றோம் என்றார்.

அரசாங்கத்தை பொறுப்பெடுக்கும் போது உண்மையை அறியும் ஆணைக்குழுவை நியமித்து இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவோம் என தெரிவித்தோம் . அதற்காக மக்கள் 5 வருடத்துக்கு ஆட்சியை தந்துள்ளனர். எனவே இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதே ரீதியில் நாட்டில் ஒரு குரோதத்தை வளர இடமளியோம். அந்த வகையில் எல்லோரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம் என்றார்.

பட்டலந்த அறிக்கை ஜே.வி.பி தான் குற்றவாளி என்று – எஸ்கேப் ஆக முயற்சிக்கிறார் ரணில் !

பட்டலந்த அறிக்கை ஜே.வி.பி தான் குற்றவாளி என்று – எஸ்கேப் ஆக முயற்சிக்கிறார் ரணில் !

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகவும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் என் மீது முழுமையான அரசியல் அவதூறு பிரச்சாரத்தை நோக்கமாகக் கொண்டு பட்டலந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது எனவும் அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் தன்னை ஒரு சாட்சியாளராகவே அழைத்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரணில் ஆற்றிய விசேட உரையில், 1988-90 காலகட்டத்தில் ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாத செயல்கள் குறித்து ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்திய – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஜே.வி.பி நாடு முழுவதும் பயங்கரவாதத்தை விதைக்க நடவடிக்கை எடுத்தது. அந்த நேரத்தில், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனே நாட்டின் முக்கியமான இடங்களைப் பாதுகாக்கும் அதிகாரத்தை அமைச்சரவை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.

இந்த பயங்கரவாத காலகட்டத்தில், சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார். அந்த நேரத்தில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன என்னை அழைத்து, இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வீட்டு திட்டத்தில் உள்ள வெற்றிடமான வீடுகளை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, அப்போதைய கலைப்பாளர், சம்பந்தப்பட்ட வீடுகளை களனி பொலிஸ் கண்காணிப்பாளர் நலின் தெல்கொடவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.

1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பட்டலந்த பகுதியில் சித்திரவதைக் கூடம் இருந்ததா? என்பதை விசாரிக்க சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு ஆணைக்கழுவை அமைத்தார். அதற்குப் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். நான் அங்கு சாட்சியாக மட்டுமே அழைக்கப்பட்டேன். அந்த நேரத்தில், நான் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. ஒரு அமைச்சராக, பொலிஸ் கண்காணிப்பாளர், பொலிஸ் அதிகாரிகளுக்கு வீட்டுவசதி வழங்குவது சரி என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து விடயங்களும் எனக்குப் பொருந்தாது.

1988-90 காலப்பகுதியில் ஜேவிபி செய்த ஏராளமான பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தலைவரின் அவதானிப்புகள் அமைந்துள்ளன. பின்னணியையும் சொல்கிறது. ஆணைக்குழுவின் அறிக்கையின் 3 ஆம் அத்தியாயம், ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாதச் செயல்களை விரிவாக விவரிக்கிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் நான் பொறுப்பாக மாட்டேன். அந்த அறிக்கையை நான் முழுமையாக நிராகரிக்கிறேன்” என்றார்.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக இருளில் இருந்த பட்டலந்த அறிக்கையை அப்போது காணவில்லையா, என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பியிருந்தததும் கவனிக்கத்தக்கது.

எவ்வாறான போதும், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ரணில் விக்ரமசிங்க பேசுவதற்கு தற்போது மிகவும் தாமதமாகிவிட்டதாகவும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பட்டலந்த ரணிலுக்கு முற்றுப்புள்ளியாக அமையுமா ?

பட்டலந்த ரணிலுக்கு முற்றுப்புள்ளியாக அமையுமா ?

மார்ச் 14 பட்டலந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட வேளை சபாநாயகர் அதன் கொடூரத்தை நினைத்து கண் கலங்கியிருந்தார். ரணில் விக்கிரமசிங்கவின் அல்ஜசீரா நேர்காணலைத் தொடர்ந்து பட்டலந்த அறிக்கை தற்போது பாராளுமன்றத்துக்கு வந்துள்ளது.

மார்ச் 14இல் இவ்வறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்குவதாக பீமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவித்து இருந்தார். மேலும் ஜனாதிபதியின் விசேட குழுவொன்று பட்டலந்த அறிக்கையை ஆராய நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு இவ்வறிக்கையை வைத்து நடவடிக்கைகள் எடுப்பது என்ற கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பட்டலந்தை அறிக்கை சட்டமா அதிபரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் இந்த அறிக்கையை ஆய்வு செய்து அதில் யாருக்கு எதிராகவும் வழக்குத் தொடர முடியுமா என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வரும். பட்டலந்த அறிக்கையில் யாராவது குற்றம் சாட்டப்பட்டு இருந்தால் குற்றப்பதிவைச் செய்ய முடிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்.

பட்டலந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் முன்னணி சோசலிசக் கட்சியும் அழுத்தங்களை வழங்கியிருந்தது. இந்த அறிக்கை முன்னாள் ஜனாதபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் வாழ்வுக்கு முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குலகம் ரணிலை வைத்துக்கொண்டே ஜேவிபிக்கு ஆப்பு வைக்கும் என்ற எண்ணம் அரசியல் விமர்சகர்களிடம் உள்ளது. அந்த வைகயில் ரணில் பதிவி விலகிய பின்னரும் தீவிரமான அரசியலில் சர்வதேச அரங்கில் ஈடுபட்டு வந்திரக்கின்றார். இந்தப் பட்டலந்த விவகாரம் ரணிலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விவகாரமாக அமைய வாய்ப்புள்ளது.

பட்டலந்த படுகொலைகள் போல் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் !

பட்டலந்த படுகொலைகள் போல் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் !

பட்டலந்த படுகொலை முகாம் தொடர்பான அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அல்ஜசீரா நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதியிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது இந்த அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை தன் மீது குற்றம்சாட்டப்பட்டவில்லை என அந்நேர்காணலில் ரணில் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நேற்றையதினம் (14) காலை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஆணைக்குழு சமர்ப்பித்த 159 பக்க அறிக்கையின் இறுதி அவதானிப்புக் குறிப்புகளின் படி, 1988 முதல் 1990 வரையிலான காலகட்டம் இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட, மற்றும் வன்முறை நிறைந்த அத்தியாயங்களில் ஒன்றாகும் என்றும், தேசத்தையே சூழ்ந்த பயங்கரவாத சுழற்சியால் குறிக்கப்பட்டது என்றும், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) பரவலான கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும், அதே நேரத்தில் அரசு மற்றும் அரசு சாரா சக்திகள் சட்டத்தின் எல்லைகளுக்கு வெளியே மிருகத்தனமான எதிர் நடவடிக்கைகளுடன் பதிலளித்ததாகவும் கூறுகின்றன.

பட்டாலந்தா ஆணைக்குழுவின் அறிக்கை, முறையான அரசாங்க கட்டமைப்பிற்கு அப்பால் செயல்படும் சக்திகள், நிழல் “தேடல் குழுக்கள்” உட்பட, சட்ட அமலாக்க முகவர் மற்றும் அரசாங்கத்திற்குள் உள்ள கூறுகளின் மறைமுக ஒப்புதலுடன் நீதிக்கு புறம்பான நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பதை உறுதிப்படுத்துகிறது.

சில சந்தர்ப்பங்களில், இந்த குழுக்கள் அதிகாரப்பூர்வ பாதுகாப்புப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கடத்தல்கள், படுகொலைகள் மற்றும் கிளர்ச்சியை அடக்குவதற்கான பிற சட்டவிரோத முறைகளில் ஈடுபட்டன, அரசாங்கம் கிளர்ச்சியை ஒழிப்பதில் உறுதியாக இருந்தபோதிலும், இந்த நோக்கத்தை அடையப் பயன்படுத்தப்படும் முறைகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அது சிறிதும் அக்கறை காட்டவில்லை என்று அறிக்கை மேலும் குறிப்பிட்டது. ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள், அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைத் தடுக்கத் தவறியதையும், பொறுப்பானவர்களைக் காப்பாற்றுவதில் அதன் தீவிரப் பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

“ஜே.வி.பி.யின் வன்முறை நடவடிக்கைகள் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் மரணத்திற்கு வழிவகுத்தன, அத்தியாவசிய சேவைகளை கடுமையாக சீர்குலைத்தன, அதே நேரத்தில் அரசாங்கத்தின் பதில் சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக, அரசு பயங்கரவாதத்தின் மூலம் பயங்கரவாதத்தை எதிர்கொண்டது, சில சமயங்களில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் காவல்துறை நடவடிக்கைகளை வழிநடத்தி, அடக்குமுறைகளில் தீவிரமாக பங்கேற்றனர். படலந்தா சித்திரவதை முகாம் இந்த அதிகப்படியான செயல்களின் கொடூரமான அடையாளமாக நிற்கிறது” என்று அது மேலும் கூறியது.“

“ஜே.வி.பி.யின் தூண்டுதலின் அளவு எதுவாக இருந்தாலும், அரசாங்கம் ஒருபோதும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை அனுமதித்திருக்கவோ அல்லது இயக்கவோ கூடாது. அரசு பயங்கரவாதத்தால் பயங்கரவாதத்தை அடக்குவதற்கான முயற்சி உண்மையான கிளர்ச்சியாளர்களை ஒழிப்பதில் மட்டுமல்ல, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாத பல அப்பாவி இளைஞர்களின் மரணத்திலும் விளைந்தது.” – என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பட்டலந்த அறிக்கை ஜே.வி.பியினர் மீது மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை வெளிக்கொண்டு வருவதாக காணப்படுகின்ற படியால் தேசிய மக்கள் சக்தி இது தொடர்பான பகிரங்கப்படுத்தல் மற்றும் விசாரணைகளை துரிதப்படுத்துவதாக தமிழ்தேசிய தரப்பினர் குற்றச்சாட்டி வருகின்றனர். படலந்த படுகொலைகள் போலவே அரச பயங்கரவாதம் 2009 இறுதிப்போரில் மேற்கொண்டது எனவும் இது பற்றிய பொறுப்புக்கூறலில் இருந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தப்பியோடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

பட்டலந்த விசாரணை அறிக்கை ஒருவாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் !

பட்டலந்த விசாரணை அறிக்கை ஒருவாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஔிபரப்பான Head to Head நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகள் பெரும் சலசலப்பை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 88 தொடக்கம் 90 காலப்பகுதியில் இடம்பெற்ற பட்டலந்த படுகொலைகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய தகவல்கள் மீள சமூக வலைத்தளங்களில் தூசுதட்டப்பட்டு வருகிறது.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பட்டலந்த வதை முகாமுடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்றோர் மனித உரிமைகளை பாரதூரமான முறையில் மீறியுள்ளதால் அவர்களது பிரஜாவுரிமையை பறிப்பதற்கு தேவையான மேலதிக அதிகாரத்தை உயர் நீதிமன்றத்திற்கு வழங்குமாறு இது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முக்கிய பரிந்துரையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரஜாவுரிமை பறிக்கப்படலாம் என தகவல்கள் பரப்பப்படுகின்றன.

ஆப்பிழுத்த ரணில் – அல்ஜசீரா நேர்காணல் !

ஆப்பிழுத்த ரணில் – அல்ஜசீரா நேர்காணல் !

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்புபட்ட “பட்டலந்த அறிக்கை” குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல உறுதிப்படுத்தி உள்ளார்.

அப்போதைய அரசாங்கம் ஜே.வி. பியின் கிளர்ச்சியின் போது கைதான ஜே.வி.பியினரை தடுத்து வைக்கும் முகாமாக பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தை பயன்படுத்தியது. அங்கு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை மற்றும் படுகொலைகள் இடம்பெற்றன என குற்றம் சாட்டப்பட்டது. 1980களின் பிற்பகுதியிலும் 1990இன் ஆரம்பத்திலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 1994 இல் சந்திரிக்கா தலைமையிலான அரசாங்கம் அமைத்த பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையே பட்டலந்த அறிக்கை என அழைக்கப்படுகிறது.

1997 இல் வெளியான ஆணைக்குழுவின் அறிக்கை பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு  அக்காலப்பகுதியில் சிரேஸ்ட அமைச்சராக பணியாற்றிய ரணில்விக்கிரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் தொடர்புள்ளது என தெரிவித்திருந்தது. இவ் அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாமை தொடர்பிலேயே அல்ஜசீராவில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் சுனில் வட்டகல மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அல் ஜசீராவுக்கு (al jazeera) வழங்கிய நேர்காணலில் குறிப்பிடப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார். அதேவேளை, மத்திய வங்கி பத்திர மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும். அத்துடன் இவை இரண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட திடசங்கற்பம் பூண்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இதுவலை ரணில் விக்ரமசிங்க அரசியல் பாதுகாப்பைப் பெற்று தவிர்த்து வந்த அனைத்து விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.