நிலாந்தி கொட்டஹச்சி

நிலாந்தி கொட்டஹச்சி

நான் என்ன பேசவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன் – என்.பி.பி பெண் எம்பி நிலாந்தி

நான் என்ன பேசவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன் : அதனை டில்வின் சில்வாவோ ஜனாதிபதியோ தீர்மானிக்க முடியாது என்கிறார் என்.பி.பி பெண் எம்பி நிலாந்தி !

ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவோ அல்லது கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்கவோ ஊடகங்களுடன் பேசுவதை நிறுத்துமாறு தன்னை வற்புறுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார். அத்துடன், ஊடகங்களுடன் பேசுவதா இல்லையா என்பது தனது முடிவு என்று தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

என்.பி.பி பா.உ நிலந்தி கோட்டஹச்சியை ஊடகங்களிடம் வாய் திறக்க வேண்டாம் என என்.பி.பி தலைமை கட்டுப்படுத்துவதாக அண்மையில் பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கட்சி தனக்கு அறிவுறுத்தவில்லை என்று நேற்றைய தினம் பாராளுமன்றத்திலும் பா.உ நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்துள்ளார்.

நிலந்தி கோட்டஹாச்சி பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பேசிய போது, தனது கட்சியால் ஊடகங்களுடன் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறியதாக’ கூறும் ஒரு கட்டுரையை அந்த ஊடகம் அதன் ஆங்கில மற்றும் சிங்கள ஊடக தளங்களில் வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களில் இந்தச் செய்தி பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது, அது தவறானது. இதுபோன்ற அடிப்படையற்ற, உறுதிப்படுத்தப்படாத மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுவதன் மூலம் எனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளது.

எனவே, இந்த விஷயத்தை விரிவான விசாரணைக்காகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும், இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகள் குழுவிடம் பரிந்துரைக்குமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

முன்னைய அரசாங்கம் உகாண்டாவில் மறைத்து வைத்த பணத்தை இலங்கைக்கு மீட்டு வர நடவடிக்கை!

முன்னைய அரசாங்கம் உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின்  வேட்பாளரும் சட்டத்தரணியுமான நிலாந்தி கொட்டஹச்சி  தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, உகண்டாவிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற, சட்டவிரோதமாக பெறப்பட்ட உழைக்கப்பட்ட பணத்தை மீட்கவேண்டிய பரந்துபட்ட சூழமைவின் அடிப்படையிலேயே உகண்டாவில் உள்ள களவாடப்பட்ட சொத்துக்கள் குறித்து நான் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தேன்.

நான் தெரிவித்தமைக்காக நான் முழுப்பொறுப்பையும் ஏற்கின்றேன். நான் தெரிவித்த சில கருத்துக்களிற்காக எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர். எனக்கு உகாண்டா குமாரி மெனிக்கே என பட்டப்பெயர் சூட்டியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நான் ஆற்றிய உரைகளின் போது சட்டமொழுங்கு நீதியை நிலைநாட்டுவது குறித்தும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அநுரகுமார திசநாயக்கவினால்  அதனையே செய்ய முடியும் என்பதையும் நான் குறிப்பிட்டிருந்தேன்.