நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

உடுவில் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத எதிர்க்கட்சி யாழ்.பா.உக்கள் !

உடுவில் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத எதிர்க்கட்சி யாழ்.பா.உக்கள் !

 

யாழ். உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. பிரதேசம் சார்ந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட குறித்த கூட்டத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

வழக்கம் போலவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண அவைத்தலைவருக்கான ஆசனங்கள் முன் வரிசையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அக்கதிரைகள் கூட்டம் முடியும் வரை காலியாகவே இருந்தன.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஶ்ரீ பவானந்தராஜா, “அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, தான் கலந்து கொள்ள முடியாமை தொடர்பாக முற்கூட்டியே அறிவித்தலை வழங்கியிருந்தார். ஏனைய எவரும் முன்கூட்டியே அறிவித்திருக்கவும் இல்லை கலந்துகொள்ளவும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

கதிர்காம பேரழகி மன்னம்பேரியை எப்படி பார்க்கிறீர்களோ அது போல இசைப்பிரியாவுக்கும் நீதி வேண்டும் – பாராளுமன்றில் சிறிதரன் !

கதிர்காம பேரழகி மன்னம்பேரியை எப்படி பார்க்கிறீர்களோ அது போல இசைப்பிரியாவுக்கும் நீதி வேண்டும் – பாராளுமன்றில் சிறிதரன் !

வரவு செலவுத் திட்டத்தில் 11 வீதமானதை இராணுவத்திற்காக ஒதுக்கியிருப்பது இந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல எனவும் இதனை நாங்கள் எதிர்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அங்கு பா.உ சிறிதரன் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே யுத்தம் இல்லை, சண்டை இல்லை, ஆயுதங்களுடைய சரசரப்புக்கள் இல்லை ஆனால் 442 பில்லியன் ரூபாக்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை சுகாதாரத்திற்காக, கல்விக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் கூட பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.

கதிர்காமத்து அழகி மனம்பேரியின் மரணம் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல அந்தக் கால கட்டத்திலே தமிழ் மக்களையும் நிறைந்த அளவிலே பாதித்திருந்தது. மனம்பேரியினுடைய மரணத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்களோ அதேபோன்று இசைப்பிரியாவின் மரணம் எங்களை எவ்வளவு பாதித்திருக்கும் என்பதையும் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

சம உரிமை சமமாக வழங்குகின்றோம். நாங்கள் சமமாக நடத்துகின்றோம் என்ற வார்த்தைகளுக்கூடாக தமிழர்களின் கோரிக்கைகளை மழுங்கடிக்க செய்யாதீர்கள் ” என தெரிவித்துள்ளார்.