தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி

தமிழ் மக்கள் எம் பக்கம்” – தமிழ் தலைவர்களுக்கு கடுப்பேத்துகின்றார் வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத்

தமிழ் மக்கள் எம் பக்கம்” – தமிழ் தலைவர்களுக்கு கடுப்பேத்துகின்றார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

‘தமிழ் மக்கள், நாடாளுமன்ற தேர்தலில் திசைகாட்டியை தெரிவு செய்து அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கும் எமக்கே ஆதரவு வழங்குவார்கள் ஆகவே தமிழ் கட்சிகள் காணும் கனவு பலிக்காது. தமிழர்களை எம்மிடம் இருந்து பிரிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘தமிழ் மக்களுக்குத் தெரியும் தேசிய மக்கள் சக்தி நல்லதொரு திசையைக் காட்டுகின்றது’ என்றும் அவர்கள் ‘சொன்னதையே செய்வார்கள்’ என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மேலும் ‘வடக்கு தமிழ்க் கட்சியினர் எம்மை விமர்சனம் செய்வதால் தமிழ் மக்களின் ஆதரவை எம்மிடம் இருந்து பிரிக்க முடியாது’ எனவும் ‘மக்களின் அரசியல் பொருளாதார கோரிக்கைகள் எம்மால் நிறைவேற்றப்படும்’ எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கருத்து தெரிவிதுள்ளார்.

வடக்கு கிழக்கில் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரத்தை தாங்க முடியாது தமிழ் தேசியக் கட்சிகள் தலைவெட்டப்பட்ட கோழிகள் போல் திக்குத் திசை தெரியாமல் ஓடித்திரிந்து உள்ளடக்கமற்ற உளறல்களை வெளியிடுகின்றனர். உள்ளுராட்சி சபைகளுடன் தொடர்பற்ற விடயங்களைப் பேசி மக்களை இனவாத உசுப்பேத்தலுக்குள் தள்ள எண்ணுகின்றினர்.

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் ஜேவிபி மன்னாரில் வென்றால் மன்னார் பறிபோய்விடும் என்கிறார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மனிதப்புதைகுழிகள் பற்றிப் பேசுகின்றார். ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளுராட்சித் தேர்தலுக்கு பிரதமர் ஏன் யாழ்ப்பாணம் வருகின்றார், ஜனாதிபதி ஏன் யாழ்ப்பாணம் வருகின்றார் என்று கேள்வி எழுப்புகின்றார். தமிழரசுக் கட்சியும் தன் பங்கிற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோருகின்றது. எல்லா தமிழ் கட்சிகளுமே, தேசிய மக்கள் சக்தி தேர்தல் இடம்பெற்று இவ்வளவு காலமாகியும் தேசிய மக்கள் சக்தி ஒரு ஆணியையும் புடுங்கவில்லை எனக் கோரஸ் போடுகின்றனர்.

ஆனால் தாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளுராட்சி சபையை, மாகாணசபையை, பாராளுமன்ற ஆசனத்தை தந்த மக்களுக்கு எந்த ஆணியைப் புடுங்கினார்கள் என்பதைச் சொல்லவில்லை. இனிமேலாவது உள்ளுராட்சி சபையில் எந்த ஆணியைப் புடுங்கபோகிறார்கள் என்பதையும் சொல்லவில்லை.

ஆனால் தமிழ் மக்கள் ஏதோ ஜேவிபியும் என்பிபியும் வெவ்வேறு என்று தவறாக நினைப்பதாக தமிழ் கட்சிகள் முட்டாள்தனமாக நம்புகின்றனர். தமிழ் மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும் என்பிபி இன் மீது ஏறியிருந்து சவாரி செய்வது தமிழ் மக்களுக்குத் தெரியும். கடிவாளம் ஜேவிபியின் கையில் இருப்பதை நன்கு தெரிந்து தான் தமிழ் மக்கள் ஜேவிபிக்கு வாக்களிக்கின்றனர். இது தெரியாமல் சுரேஸ் பிரேமச்சந்திரன் தான் இதை முதன்முதலில் கண்டு பிடித்து புட்டு புட்டு வைப்பதாக கதைசொல்கின்றார். ஈபிஆர்எல்எவ் போல் சில கட்சிகளுக்கு இது தான் கடைசித் தேர்தலாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில் ஜேவிபி மட்டுமே உள்ளுராட்சி சபையில் அவ்வவ் பிரதேசங்களுக்கு என்ன செய்வோம் என்பதை மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றனர். யாழ் மாவட்ட மாநாகர முதல்வருக்கான வேட்பாளராக விரிவுரையாளர் கபிலனை அறிவித்து தங்களது வேலைத்திட்டங்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஏனைய கட்சிகளுக்கு மாநகர முதல்வருக்கான வேட்பாளரை அறிவிக்க முடியாமல் உள்ளனர்.

சொன்னபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்போம் – மன்னாரில் பிரதமர் !

சொன்னபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்போம் – மன்னாரில் பிரதமர் !

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் முசலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவது தொடர்பாக அமைச்சரவையால் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, எதிர்காலத்தில் இந்தச் சட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் எந்த வகையான ஒடுக்குமுறைக்கும் ஆளாக மாட்டார்கள் என்றும், அரசாங்கம் ஒருபோதும் இனவெறி மனநிலையுடன் நெருக்கடிகளைப் பார்க்காது என்றும் அவர் உறுதியளித்தார்.

தமிழ் கட்சிகள் தேர்தலுக்காக மட்டும் சேராமல் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக ஒரே அணியில் செயற்பட வேண்டும் !

தமிழ் கட்சிகள் தேர்தலுக்காக மட்டும் சேராமல் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக ஒரே அணியில் செயற்பட வேண்டும் !

இலங்கையின் இராணுவத் தளபதிகளுக்கு எதிரான தடையுத்தரவை பிரித்தானிய அரசு கொண்டுவருவதற்கு பின்னிருந்து செயற்பட்ட சென் கந்தையா

என்பிபி அரசாங்கமும் தமிழர்களை வன்முறைக்கு தூண்டுகிறது – அருட்தந்தை மா. சக்திவேல் ! 

என்பிபி அரசாங்கமும் தமிழர்களை வன்முறைக்கு தூண்டுகிறது – அருட்தந்தை மா. சக்திவேல் !

 

சட்ட விரோத தையிட்டி விகாரைக்கு மேலதிகமாக புதிய மடாலயமும் அமைக்கப்பட்டுள்ளமையானது விகாரை விடயம் மீண்டும் தமிழர்களின் நீதிக் குரலை இராணுவத்தின் சப்பாத்துக்காலால் மிதித்து சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் தேசிய மக்கள் சக்தியும் அடக்கும் என்பதை நிரூபித்துள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அருட்தந்தை மா.சத்திவேல் , இது தமிழர்களை மீண்டும் போராட்ட வன்முறைக்கு தூண்டி பயங்கரவாதிகளாக்கும் அரச பயங்கரவாதத்தின் வன்முறையை கண்டிப்பதோடு அண்மித்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் இதற்கு தகுந்த பதிலடியை கொடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

என்பிபி க்கு மாற்றாக தெற்கிலோ வடக்கிலோ முற்போக்கான தலைமைகள் இல்லை ! அதனால் வடக்கில் 50 வீதத்திற்கு அதிகமான ஆசனங்களை என்பிபியே கைப்பற்றும் – சோலையூரான் !

என்பிபி க்கு மாற்றாக தெற்கிலோ வடக்கிலோ முற்போக்கான தலைமைகள் இல்லை ! அதனால் வடக்கில் 50 வீதத்திற்கு அதிகமான ஆசனங்களை என்பிபியே கைப்பற்றும்

 

ஈபிஆர்எல்எப் முன்னாள் போராளிஇ சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரானுடன் நேர்காணல்

 

 

அரசியல் கைதிகள் விடுவிப்பு! காணிகள் விடுவிப்பு ! வீதிகள் விடுவிப்பு ! நாளையே நடக்கலாம் ! அமைச்சர் சந்திரசேகர் !

அரசியல் கைதிகள் விடுவிப்பு! காணிகள் விடுவிப்பு ! வீதிகள் விடுவிப்பு ! நாளையே நடக்கலாம் ! அமைச்சர் சந்திரசேகர் !

 

யாழ்ப்பாணத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாழ் பல்கலைக்கழக திட்டமிடல் துறை விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் அறிவிக்கப்பட்டுள்ளார். கபிலன் ஏற்கனவே யாழ் மாநகரின் வடிகாலமைப்புத் தொடர்பில் ஆய்வுகளைச் செய்து வந்தவர். அவை தொடர்பில் முன்னைய அரசாங்கங்களிடம் அவற்றை சமர்ப்பித்தும் அவை கருத்திலெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திட்டமிடல் தொடர்பில் புலமை மிகுந்த ஒருவரை என்.பி.பி முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளமை சாலப் பொருத்தமானது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதல்வர் வேட்பாளர் கபிலன், என்.பி.பியின் வேட்புமனுக்கள் யாழில் அனைத்து இடங்களிலும் எவ்வித விலக்கலும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டமை நாங்கள் எங்களுடைய மக்களுக்காக எவ்வளவு பொறுப்புணர்வோடு இவற்றைத் தயாரித்துள்ளோம் என்பதைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சந்திரசேகர் வடக்குக்கு அரசாங்கம் பெரும் நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் நாங்கள் கிராமம் கிராமமாக அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார். மேலும் காணிகள் விடுவிப்பு மற்றும் மக்களுக்கு வழங்கிய விரைவில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

போட்டியிடாமலேயே மண் கவ்விய ஊசி, சங்கு , மான் குறூப் – யாழ் உட்பட வடக்கு கிழக்கில் வீடா ? திசைகாட்டியா ?

போட்டியிடாமலேயே மண் கவ்விய ஊசி, சங்கு , மான் குறூப் – யாழ் உட்பட வடக்கு கிழக்கில் வீடா ? திசைகாட்டியா ?

 

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பல முன்னணி தமிழ்தேசிய மற்றும் அரசியல்வாதிகளின் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமலேயே மண் கவ்வியுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஊசி கட்சி சார்பாக களமிறங்கிய சுயேட்சைக்குழுவின் வேட்பு மனுக்கள் பருத்தித்துறை நகரசபை தவிர்ந்த யாழ்ப்பாணத்தின் அனைத்து சபைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபையில் முதல்வர் வேட்பாளர் கௌசல்யா நரேன் வேட்புமனுவில் கையெழுத்திடாமையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த பணம் அனுப்புமாறு அர்ச்சுனா கோரியதையடுத்து புலம்பெயர் தமிழர்கள் பலர் அவருக்கு பணம் அனுப்பியிருந்தனர். வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களின் கட்டுப்பணம் மீள அவர்களிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில் அர்சுனா அவற்றை புலம்பெயர் தமிழர்களுக்கு திருப்பி அனுப்புவாரா எனவும் பலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு யாழ்.மாநகர சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிவண்ணனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. வலிகாமம் தெற்கு, பருத்தித்துறை பிரதேச சபையிலும் அவர்களுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் வேட்புமனுக்கள் யாழ் மாநகர சபை உட்பட பெருமளவான இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி நகர சபை, காரைநகர் பிரதேச சபை, ஊர்காவற்றுறை பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலி.மேற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை ஆகிய இடங்களிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே நிராகரிப்பு தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உயர் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ள அதேவேளை தமிழ்க் கட்சிகள் சார்பாக நான் நீதிமன்றில் ஆஜராக மாட்டேன் என சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்புமனுக்கள் பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்கள் வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தி, தமிழரசு கட்சி ஆகிய இரு கட்சிகளினது வேட்பு மனுக்கள் மட்டுமே அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே யாழில் திசைக்காட்டியா..? வீடா என்ற போட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ் 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் தான் – நாடு மட்டுமல்ல கிராமங்களும் அனுரவோடு தான் ! அமைச்சர் சந்திரசேகர் 

யாழ் 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் தான் – நாடு மட்டுமல்ல கிராமங்களும் அனுரவோடு தான் ! அமைச்சர் சந்திரசேகர்

 

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தபோது இந்தக் கருத்தை தெரிவித்தார். அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தையும் இன்றைய தினம் என்.பி.பி செலுத்தியுள்ளது.

“பாதாள உலக குழுக்கள் பழைய அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டார்கள் – எங்களால் இல்லாதாக்கப்படுவார்கள்” – அருண் ஹேமச்சந்திரா !
 பாதாள உலக பிரச்சினை நாம் உருவாக்கிய ஒன்றல்ல என பிரதியமைச்சர் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார். முன்னாள் அரசியல்வாதிகளே பாதாள உலக கோஸ்டிகளை உருவாக்கியதாக கூறிய அவர், சொத்தி உபாலி, பொட்ட நௌபர் போன்ற பல பாதாள உலக தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளின் பிரதிபலனாக உருவானதாகவும் அவர்கள் அரசியல் தயாரிப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார். பழைய அரசியல் கலாசாரத்தால் பாதாள உலக கோஷ்டி உருவானார்கள், ஆனால் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் கலாசாரத்தில் அது இல்லாமல் போகும் என அவர் கூறினார்.
இதுவேளை, சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும். நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவுத்துள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

தொடரும் என்.பி.பி அலை – தேர்தலை பின்னுக்கு தள்ளி கால அவகாசம் கோருகிறார் பா.உ சிறிதரன் !

தொடரும் என்.பி.பி அலை – தேர்தலை பின்னுக்கு தள்ளி கால அவகாசம் கோருகிறார் பா.உ சிறிதரன் !

 

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவது என்பது என்னை பொறுத்தவரை நெருக்கடியாக இருக்கும். இதற்கான காரணம் என்னவெனில், ”சாதாரண தரப் பரீட்சை, வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு போன்ற சமய நிகழ்வுகள் குறித்த காலப்பகுதியில் வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் அத்துடன் தேர்தல் திருத்தங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், பெண்களுக்கு 25 வீதம் வழங்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

தேர்தலை பின்தள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, எந்த தேர்தலுக்கும் முகம்கொடுப்பதற்கு நாங்கள் பின்வாங்கியதில்லை. தேர்தல் பிரசார காலப்பகுதி யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வேட்புமனு கோருமாறு கேட்கிறோம் என தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடங்கி மாகாண சபை தேர்தல்கள் வரை அனைத்திலும் என்.பி.பி அலையே தொடரும் என அரசியல் அவதானிகள் கூறி வருகின்றனர். ஆனால் இன்னமும் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி பூசல் கூட முடிந்தபாடில்லை. பாராளுமன்றத்தேர்தல்களை போலவே உள்ளூராட்சி தேர்தல்களிலும் தமிழரசுக்கட்சியை விட என்.பி.பி ஆதிக்கம் செலுத்த வாய்புள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தான் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்தேசிய கட்சிகளை விட தேசியக்கட்சி ஒன்று தன் ஆதிக்கத்தை பெரும்பான்மை ஆசனங்கள் மூலம் உறுதி செய்திருந்தது. இதனை தொடர்ந்தும் தக்க வைக்கும் நோக்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் என அடுத்தடுத்து ஒவ்வொரு வார இடைவெளியிலும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பகுதிகளுக்கு திடீர் விஜயம் செய்து என்.பி.பி தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்திவருகிறது. இதனால் உள்ளூராட்சி தேர்தல் தமிழ்தேசிய கட்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளது.