ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் – சுமந்திரனும் வலியுறுத்தல் !

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் – சுமந்திரனும் வலியுறுத்தல் !

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அவ்வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 15 பேரில் இருவர் மட்டுமே தமிழர்கள். ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழர்களுக்கு எதிராக மட்டும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மேற்கொள்ளப்படுகின்றபோது கூட் இவ்வளவு ஆக்ரோசமாக அதனை நீக்கச் சொல்லிக் கேட்கவில்லை. ஆனால் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் பெருமளவில் பாதாள குழுக்களுக்கு எதிராகப் பாய்ந்துகொண்டிருக்கின்ற இந்நேரத்தில் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரும் கொள்கைப் பிடிப்போடு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் எங்களுடைய சகோதரர்கள் உங்களுக்குப் பிச்சை போடுவார்கள் என்று பா உ அர்ச்சுனா முழங்கினார். பொன்னம்பலம் கஜேந்திர குமார் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கினால் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்போம் என்று தெரிவித்திருந்தார். பாதாள குழுக்களின் மனித உரிமைகள் மீது தமிழ் தேசியத்துக்கு ரொம்பவும் கருணைதான் என்கிறார் ஆய்வாளர் வி சிவலிங்கம்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சுமந்திரன், இச்சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் பாரதி ஊடகவியலாளராகப் பணிபுரிந்ததுடன், இச்சட்டத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை நாம் பார்த்திருக்கிறோம். தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்கனவே வாக்குறுதியளித்ததைப் போல் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்.

அதேவேளை இச்சட்டத்தைப் பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்க வேண்டியது மிகமிக அவசியமானதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

அனுர ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் – ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் இருக்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று (31) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு தேர்தல் வருகிறது, ஒரு மாற்றத்திற்கான தேர்தல் என்று சொல்லப்படுகிறது. அந்த மாற்றத்தின் ஆரம்பம் ஜனாதிபதி தேர்தல் என்று ஜனாதிபதி தேர்தலை கூறுகிறார்கள்.

அது ஒரு வகையிலும் சரியானது தான் எமது நாட்டில் இரு கட்சி ஆட்சி என்று சொல்லப்படும் நிலையில் அந்த இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் ஒரு பாரிய மாற்றமாக மூன்றாம் தரப்பு இப்பொழுது ஆட்சியை பிடித்து இருக்கிறது.

அந்த மூன்றாம் தரப்பு யார் என்று நாங்கள் பார்த்தால் ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆட்சியை பிடிப்பதற்காக ஆயுதம் எடுத்து போராடிய தரப்பினர்.

ஒரு மாற்றம் வேண்டும் என்ற நிலையில் யாரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க மக்களுக்கு கிடைத்தது தேசிய மக்கள் சக்தி தான். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் இருக்கிறது என தெரிவித்தார்.