சி.வி.கே.சிவஞானம் – மார்ச்சில் ஏப்பிரல் பூல் (April Fool) ‘எமது கட்சிக்குள் எந்த பிரிவுகளும் இல்லை !
சி.வி.கே.சிவஞானம் – மார்ச்சில் ஏப்பிரல் பூல் (April Fool) ‘எமது கட்சிக்குள் எந்த பிரிவுகளும் இல்லை !’
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி அமைக்கப்பட்டது தமக்கு எந்த ஏமாற்றத்தை தரவில்லையெனவும் தமிழரசுக் கட்சியை கீழ்நிலைக்கு கொண்டுச் செல்ல எவராலும் முடியாது எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அனுப்பிய பதில் கடிதம் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் நலன் குறித்து சிந்திக்க வேண்டுமென தாம் ஏற்கனவே தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளியில் கூறப்படுவது போல தமது கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும் தாம் ஒற்றுமையாகவே உள்ளதாகவும் சி.வி.கே.சிவஞானம் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யாதது மட்டும் தான் குறை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.