சி.வி.கே.சிவஞானம்

சி.வி.கே.சிவஞானம்

சி.வி.கே.சிவஞானம் – மார்ச்சில் ஏப்பிரல் பூல் (April Fool) ‘எமது கட்சிக்குள் எந்த பிரிவுகளும் இல்லை !

சி.வி.கே.சிவஞானம் – மார்ச்சில் ஏப்பிரல் பூல் (April Fool) ‘எமது கட்சிக்குள் எந்த பிரிவுகளும் இல்லை !’

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி அமைக்கப்பட்டது தமக்கு எந்த ஏமாற்றத்தை தரவில்லையெனவும் தமிழரசுக் கட்சியை கீழ்நிலைக்கு கொண்டுச் செல்ல எவராலும் முடியாது எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அனுப்பிய பதில் கடிதம் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சியின் நலன் குறித்து சிந்திக்க வேண்டுமென தாம் ஏற்கனவே தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளியில் கூறப்படுவது போல தமது கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும் தாம் ஒற்றுமையாகவே உள்ளதாகவும் சி.வி.கே.சிவஞானம் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யாதது மட்டும் தான் குறை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

“இலங்கை தமிழரின் பெருமைக்கும் – இருமாப்புக்கும் உரிய யாழ்ப்பாணம்” – தமிழரசுக்கட்சி தலைவர் சி.வி.கே ! 

“இலங்கை தமிழரின் பெருமைக்கும் – இருமாப்புக்கும் உரிய யாழ்ப்பாணம்” – தமிழரசுக்கட்சி தலைவர் சி.வி.கே !

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்திய துணை தூதுவர் சாய்முரளியைச் சந்தித்து தமிழரசுக் கட்சி சார்பில் கட்சிப் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.

இக்கடிதத்தில் “இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான “யாழ்ப்பாணம்” என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும். “யாழ்ப்பாணம்” என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம். இனத்தின் அடையாளம் ஆகும். எனவே இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்” என சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையம் திருவள்ளுவரின் பெயரில் மாற்றப்பட்டதும் – அதனை இந்திய பிரதமர் தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்கும் நோக்குடன் தமிழை பெருமைப்படுத்துகிறோம் என ட்வீட் செய்திருந்தார்.

சி.வி.கே சிவஞானம், ஒருபடி மேலே போய் யாழ்ப்பாணத்தவர்களின் மேட்டுக்குடி அரசியலை, இலங்கை வாழ் ஏனைய தமிழர்களின் தலையில் கட்டிவிடும் வழமையான ஓர் செயலை தன் கடிதத்தின் மூலம் நகர்த்தியுள்ளார்.