சிவஞானம் சிறிதரன்

சிவஞானம் சிறிதரன்

தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களுக்கு பேக் ஐடி: பா உ அர்ச்சுனாவுக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னிக்கும் எதிரிகள் ஒன்றே ! எங்கோ உதைக்கின்றது !

தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களுக்கு பேக் ஐடி: பா உ அர்ச்சுனாவுக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னிக்கும் எதிரிகள் ஒன்றே ! எங்கோ உதைக்கின்றது !

தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்ளுக்காக பேக் ஐடியைப் பாவிப்பதும் தனிநபர்களில் இருந்து ஏகாதிபத்தியங்கள் வரை மேற்கொள்கின்ற சில்லறை அரசியல். இவ்வாறான மோசடிகள் தொழில்நுட்பம் வளராத காலகட்டங்களிலும் பார்க்க தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய காலகட்டங்களில் இது மிக மோசமானதாக உள்ளது. இந்த பேக் ஐடி அரசியல், தற்போது தமிழ் மக்கள் மத்தியில் மிகத் தீவிரமடைந்துள்ளது.

அருச்சுனா கட்டைப்பஞ்சாயத்து! - pathivu

அண்மையில் முளைத்துள்ள ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற முகநூல் தளம் ஒரு முகமூடிக் கூட்டம். பா உ அர்ச்சுனாவுக்கும் இந்த முகமூடி அணிந்த ஊழல் ஒழிப்பு அணி வன்னிக்கும் எதிரிகளிலும் செயற்பாட்டிலும் ஒரே ஒற்றுமை. இந்த மூகமூடி அணிந்தவரின் முகமாக பா உ அர்ச்சுனா செயற்படுகின்றார். அண்மையில் குறிவைத்து அடிக்கப்பட்டவர்கள்: அமைச்சர் சந்திரசேகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், பெண்ணியவாதி, சட்டத்தரணி சுவஸ்திகா அருளலிங்கம், ஊடகவியலாளர் சங்கவி, சாதாரண பெண் சாளினி என்று தொடர்கின்றது.

பா உ உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ் வின் மற்றும் தமிழ் வின், ஜேவிபி நியூஸ் எனடபவற்றை இயக்கி தன்னுடைய அரசியல் விரோதிகளையும் தனக்கு எதிரானவர்களையும் தாக்கி இனவிரோதத்தையும் கூர்மைப்படுத்தி வந்தார். இந்த இணையத் தளங்கள் அன்று பா உ சிவஞானம் சிறிதரனின் சகோதரனால் இயக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழ் வின் – லங்காசிறியை ஐபிசி பாஸ்கரன் பாங்கிவிட்டார். ஜேவிபி நியுஸ் இன்றைக்கும் பா உ சிறிதரனின் சகோதரனால் இயக்கப்படுகின்றது. இதனை ஜேவிபி நடத்தவில்லை. ஜேவிபிக்கு தங்களுடைய பெயரில் இவ்வாறு ஒரு இணையத்தளம் இருப்பது தெரியுமோ தெரியாது.

இலங்கையின் பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது : பாராளுமன்ற  உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்!

ஆனால் பா உ எஸ் சிறிதரன் ஜேவிபிநியூஸிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்கின்றார். அதே பாணியில் பா உ அர்ச்சுனாவும் தனக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னிக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்று சத்தியம் பண்ணுகிறார். தேசியத் தலைவரின் மீது சத்தியம் பண்ணிச் சொல்கின்றார். ஆனால் பா உ அர்ச்சுனாவின் எதிரிகளும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் கதிரிகளும் ஒன்றாகவே இருப்பது தான் ஆச்சரியம்.

ரிக்ரொக்கில் பொழுது போக்காகா கலாய்க்கின்ற ஒரு பல்கலைக்கழகத்திலும் ஒரு டிகிரியும் எடுக்காத ஒரு இளம் பெண் தான் கிளிநொச்சி இராமநாதபுரத்தைச் சேர்ந்த சாளினி. மற்றுமொரு பெண் ஊடகவியலாளரான சங்கவி. அவரும் ஒரு பல்கலைக்கழகத்திலும் ஒரு டிகிரியும் எடுக்காதவர் என பா உ அர்ச்சுனா கண்டுபிடித்திருக்கிறார். தங்களுடைய கிலுகிலுப்புக்காக தங்கள் சமூகவலைத்தள பார்வையை அதிகரிக்க, இந்த ஊழல் ஒழிப்பு அணி வன்னியும் பா உ அர்ச்சுனாவும் இப்பெண்களை விபச்சாரிகள் என்று கூவி வருகின்றனர். பாராளுமன்றத்திலும் சாளினியை விபச்சாரி; என்று முழங்கியுள்ளார் மூன்று பல்கலைக்கழகங்களில் பட்டித்து பட்டம் பெற்றதாகக் கூறும் அர்ச்சுனா. அதற்கு லண்டன் தமிழ் அடியான் ஜால்ரா அடித்து வருகின்றார்.

பாராளுமன்றத்தில் அர்ச்சுனாவை சொந்தவாந்தியை உண்ணும் நாய் என்று வர்ணித்த அமைச்சர் சந்திரசேகரனை ஊழல் ஒழிப்பு அணி வன்னி குறிவைத்தது. அதற்கிடையே பாதிக்கப்பட்ட சாளினி, சங்கவிக்காக குரல் கொடுத்த சுவாஸ்திகா அருளலிங்கத்தை பெட்டை நாய் என்று குதறியிருக்கின்றார் அர்ச்சுனா.

இந்த தமிழ் தலிபான்களின் அடுத்த இலக்கு எந்த அப்பாவிப் பெண்ணாக இருக்குமோ தெரியவில்லை. இப்பெண்களுக்காக குரல்கொடுப்பவர்கள் அடுத்த இலக்காக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அரசியல் கைதிகள்: பெயர்பட்டியலைத் தாருங்கள் ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் நீதி அமைச்சர் !

அரசியல் கைதிகள்: பெயர்பட்டியலைத் தாருங்கள் ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் நீதி அமைச்சர் !

அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலைத் தாருங்கள் அவர்களை விடுவிப்பது பற்றி ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளை எப்போது விடுதலை செய்வீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் பேசிய சிவஞானம் சிறீதரன், “தமிழ் இளைஞர்கள் பலர் இலங்கையின் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக அரசியற் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்களின் கண்ணீருடனம் கவலையுடனும் அவர்களின் வரவுக்காக காத்திருக்கின்றார்கள். தாயை இழந்த நிலையில் தந்தை பல ஆண்டுகளாக சிறையில் இருக்க தாய், தந்தையின் அரவணைப்பு இல்லாமலே பல பிள்ளைகள் தமது பெற்றோரின் விடுதலைக்காக தவமிருக்கின்றார்கள்.

இந்த நாட்டின் இன ஒற்றுமை, மாற்றம் வேண்டிய புதிய சிந்தனை, சுத்தமான இலங்கை உள்ளிட்ட மகுட வாசகங்கள் சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற மகுட வாசக்ததை மனதில் வைத்தாவது பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியற் கைதிளை விடுவிக்குமாறு அவர் தம் உறவுகள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்” என குறிப்பிட்டு, இது தொடர்பில் 4 கேள்விகளை எழுப்பிய பா.உ சிறிதரன், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் பெயர்களையும் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர், ஒரு வார காலத்திற்குள் இதற்குப் பூரணமான பதிலை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் என உறுதியளித்தார். மேற் குறிப்பிட்ட பெயர்களை இன்றைய தினம் எனக்கு வழங்கினால் நான் விசேட கவனம் செலுத்துவதுடன் இதற்குரிய பதிலையும் வழங்குவேன் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

அண்மையில் பா உ சிறிதரனின் வலதுகரமான கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் வேழமாளிதன் புலம்பெயர்ந்த கணவனது அரசியல் தஞ்ச வழக்கிற்கு கடிதம் கேட்கச் சென்ற போது அவரை படுக்கையறைக்கு அழைத்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. பாதிக்கப்பட்ட பெண்ணை பா உ சிறிதரனின் அலுவலகத்தில் வைத்தே வேழமாளிதன் சீண்டியும் உள்ளார். இவ்விடயங்கள் தொடர்பில் பா உ சிறிதரனது பெயரையும் பாதிக்கப்பட்ட பெண் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சம்பவங்களால் பா உ சிறிதரன் பாராளுமன்றத்தில் காட்டும் தமிழ் தேசிய முகக்காடு காற்றில் பறக்கின்றது.

 

பகலில் கூட வெளியே வர அச்சப்படும் மாணவிகள் – வன்முறைகள் நிறைந்த பகுதியாக மாறிக்கொண்டிருக்கும் கிளிநொச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் சமூக சீர்கேடுகளை எடுத்துக் காட்டும் ஒரு சம்பவம் அண்மையில் செல்வா நகர் பகுதியில் கோவில் திருவிழாவின் போது பாடசாலையில் கல்வி கற்கும் இளைஞர் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல்.

வடபகுதியில் குறிப்பாக கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் திரும்பும் திசையெல்லாம் இராணுவ முகாம்களும் காவல் நிலையங்களும் காணப்பட்டும் கூட இந்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக இந்த வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் கைதாவோர் இளைஞர்களாக காணப்படும் அதேவேளை போதைப் பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டவர்களாகவும் – கசிப்பு காய்ச்சுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவோராகவுமே அடையாளம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் காணப்படும் வன்முறையான நிலை ஆக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது என்பதே உண்மை.

இதனை கடந்தகால செய்திகளின் தலைப்புக்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

கிளிநொச்சியில் பரபரப்பு : செல்வாநகர் ஐயப்பன் கோயிலில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு. (07.05.2022)

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் கெரொயின் மற்றும் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது. (28.07.2020)

கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் வாள்வெட்டு – கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் படுகாயம். (29.05.2019)

கிளிநொச்சியில் உள்ள தனது காணியை பார்வையிட வந்த அமெரிக்க பிரஜை ஒருவர் அடித்துப் படுகொலை (7.05.2018)

டியூசனுக்கு படிக்க சென்றாலும் ஐந்து மணிக்கு பிறகு எந்த பாடங்களிலும் பங்கு கொள்வதில்லை. ஏனெனில் ஆறு மணிக்கு முன்பாக ஊருக்குள் நுழைந்தால் தான் பாதுகாப்பாக வீடு செல்ல முடியும் என்ற துர்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.” என அந்த மாணவி தெரிவித்தார்.