சிறீபவானந்தராஜா

சிறீபவானந்தராஜா

உடுவில் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத எதிர்க்கட்சி யாழ்.பா.உக்கள் !

உடுவில் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத எதிர்க்கட்சி யாழ்.பா.உக்கள் !

 

யாழ். உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. பிரதேசம் சார்ந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட குறித்த கூட்டத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

வழக்கம் போலவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண அவைத்தலைவருக்கான ஆசனங்கள் முன் வரிசையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அக்கதிரைகள் கூட்டம் முடியும் வரை காலியாகவே இருந்தன.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஶ்ரீ பவானந்தராஜா, “அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, தான் கலந்து கொள்ள முடியாமை தொடர்பாக முற்கூட்டியே அறிவித்தலை வழங்கியிருந்தார். ஏனைய எவரும் முன்கூட்டியே அறிவித்திருக்கவும் இல்லை கலந்துகொள்ளவும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

வடக்கில் அத்துமீறும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் எம்பி சிறீபவானந்தராஜா காட்டம் !

வடக்கில் அத்துமீறும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் எம்பி சிறீபவானந்தராஜா காட்டம் !

 

பொலிஸாரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் ஒருவர் “அண்மைக் காலமாக பொலிஸாரின் அடாவடிகள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட பொலிஸார் நெல்லியடியில் ஒரு வீட்டுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகி இருந்தது. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றீர்கள்” என கேள்வி எழுப்பியவேளை அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அங்கு மேலும் பேசிய எம்.பி சிறீ பவானந்தராஜா மேலும் தெரிவிக்கையில், பொலிஸாருக்கு போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பொலிஸார் சில இடங்களில் தாங்கள் நினைத்தபடிதான் நடக்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் பிழையாக இருந்தால் அந்த பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.