கேரளகஞ்சா

கேரளகஞ்சா

வடக்கில் தொடர்ச்சியாக பிடிபடும் கேரளா கஞ்சா பொதிகள் !

வடக்கில் தொடர்ச்சியாக பிடிபடும் கேரளா கஞ்சா பொதிகள் !

தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்து வந்த சுமார் 49 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் கடந்த மார்ச் மார்ச் மாதம் 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதிகளை அவதானித்து சோதனை செய்தபோது, அந்தப் பொதிகளில் பொதிச் செய்யப்பட்டிருந்த சுமார் 124 கிலோகிராம் மற்றும் 392 கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இவை 46 பொதிகளாக கட்டப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு 49 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வட்டுக்கோட்டையிலிருந்து வந்த வாகனத்தில் கேரளா கஞ்சா வடமராட்சியிலிருந்து கிளிக்கு கடத்தல் பரந்தனில் கைது !

வட்டுக்கோட்டையிலிருந்து வந்த வாகனத்தில் கேரளா கஞ்சா வடமராட்சியிலிருந்து கிளிக்கு கடத்தல் பரந்தனில் கைது !

வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராமுக்கும் அதிக பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது லொறியின் அடிப் பகுதியில் சூட்சுமமாக தயாரிக்கப்பட்ட தொட்டியிலிருந்து 182 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 34, 40 வயதுடைய கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து வாகனம் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்கள் வடகல் எல்லையில் எம்முடைய கடல் வளத்தை அழிப்பதுடன் இந்த போதைப் பொருட்களை யாழுக்கு கடத்தி வந்து தமிழ் இளைஞர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கின்றனர். இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்திய அரசை வற்புறுத்தும் செயற்பாட்டை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மட்டும் மேற்கொண்டு வருகிறார். ஏனைய தமிழ் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் மௌனம் காக்கின்றனர். எம் தமிழ் இளைஞர்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை ஆனால் இந்தியத் தூவரை மனம்நோகச் செய்யக் கூடாது என்ற பாணியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்.