கஜேந்திரகுமார்.

கஜேந்திரகுமார்.

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் – கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் – கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர். அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர். அதேபோன்று இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள். அடிமைசாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களாக இருக்கின்ற தேசிய கீதம், தேசிய கொடியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் தேசம் திரை நேர்காணலில் கருத்து தெரிவித்த விடுதலை புலிகள் தலைவரின் நேரடி கண்காணிப்பில் இயங்கிய வேர்கள் புலனாய்வு அமைப்பின் புலனாய்வாளர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவராகவுள்ள கஜேந்திரகுமார் தமிழ்தேசியம் – தனிநாடு என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது. திலீபன் உண்ணாவிரதம் இருந்த போது வெளிநாட்டு படிப்பு, சுகபோக வாழ்க்கை என இருந்த கஜேந்திரகுமார் உள்ளிட்டோர் இப்போது திலீபனுக்கு பேரணி வேறு செய்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.

பா.உ இராமநாதன் அர்ச்சுனா தனது முதல் பாராளுமன்ற அமர்வினை தொடர்ந்து தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடும் உறுதிப்பிரமாணத்தில் இந்த நாட்டிற்குள் இன்னுமொரு நாட்டையோ பிரிவையோ உருவாக்க மாட்டேன் என கையெழுத்திட்டு பாராளுமன்ற அமர்வில் இணையும் தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு தமிழ் மக்களிடம் தனிநாடு பெற்றுத் தருவோம் என பேசுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களிடமும் தமிழ் ஊடகங்களிலும் தேசியக்கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் எதிராகக் கருத்துத் தெரிவித்த போதும் அதற்குக் கட்டுப்பட்டே பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்கின்றனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றுமொரு சட்டத்தரணி சுகாஸ் தாங்கள் தேசியக் கொடிக்கு அருகிலேயே செல்வதில்லை என்று ஒரு ஊடக நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அதனால் மக்கள் அவரைப் பாராளுமன்றம் அனுப்பி சங்கடப்படுத்த வேண்டாம் என அவருக்கும் செல்வராஜா கஜேந்திரனுக்கும் வாக்களிக்கவில்லை.

 யாழ் மத்திய கல்லூரி அதிபர் மீது கஜா பாய்ச்சல் ! மீண்டும் சாதிய முழக்கமா ?

யாழ் மத்திய கல்லூரி அதிபர் மீது கஜா பாய்ச்சல் ! மீண்டும் சாதிய முழக்கமா ?

‘யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் அதிபர் அதற்குத் தகுதியில்லாதவர். இன்னமும் பதவியில் இருக்கின்றார்’ என்ற தொனிப்பட யாழ் பா உ உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது அப்பாடசாலையின் அதிபராக உள்ளவர், அப்பாடசாலையின் அதிபராகச் செயற்பட முடியாதவர் என்ற பொருள்படவும் கஜேந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டுக்கள் ஜனவரி 22இல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமாரை, ஏன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதுவரை கலைக்கவில்லை. டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டினால் கொண்டுவரப்பட்டவரே எஸ் இந்திரகுமார் எனக் குற்றம்சாட்டியிருந்தார், தமிழ் தேசியய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்.

“முன்னைய பாராளுமன்றத்தில் ஹரினி அமரசூரிய எனக்குப் பின்னால் இருந்தவர்’ என்றும் ‘அன்று யாழ் மத்திய கல்லூரி தொடர்பில் ஒரு பிரச்சினையை எழுப்பி இருந்ததார், என்றும் சுட்டிக்காட்டினார் கஜேந்திரகுமார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “ஹரினி அமரசூரிய இப்போது கல்வி அமைச்சராக, அரசாங்கத்தில் சக்திவாய்ந்த ஒரு நபராக இருக்கின்றார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகிவிட்டது. யாழ் மத்திய கல்லூரியின் தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமாரை ஏன் இன்னமும் மாற்றி அமைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இப்பதவி நியமனம் போன்ற, முறையற்ற செயற்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது. “சோலியன் குடுமி சும்மா ஆடுமா ? பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஏன் யாழ் மத்திய கல்லூரியைப் பற்றி இப்ப கதைக்க வேண்டி வந்தது ?” என்று கேள்வி எழுப்பிய அவர், “எஸ் இந்திரகுமார் சோனல் டிரைக்டராக இருந்து அதிபராக வந்தவர். அவருடைய தலைமையில் யாழ் மத்திய கல்லூரி பாரிய வளர்ச்சியைக் கண்டு கொண்டுள்ளது. அவர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அதிபர். ஆனால் அவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சாதியைச் சேர்ந்தவரல்ல. அதனால் தான் கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் கூடுதல் நேரம் கேட்டு தன் சாதியத் திமிரைக் காட்டுகின்றார்” என்று குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான அனஸ்லி ரட்ணசிங்கம் தற்போது ஜேர்மனியில் வாழ்கின்றார், அவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் “தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமார் கல்லூரியின் ஒரு சொத்து. அவருடைய தலைமைத்துவத்தில் கல்லூரி வெகுவான முன்னேறி வருகின்றது. ஹரினி முன்னர் இது தொடர்பில் கேள்வி எழுப்பி இருந்தாலும், அதற்குப் பின் மக்கள் அவருக்கு கையொப்பமிட்டு கடிதங்களை அனுப்பி வைத்து, விளக்கமளித்ததைத் தொடர்ந்து அவர் மேற்கொண்டு இவ்விடயத்தில் தலையீடு செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கேள்வி எழுப்பிய மற்றுமொரு யாழ் மத்திய கல்லூரி மாணவன் லண்டனில் வாழும் ரங்கநாதன் ரமணன், “அதிபராகத் தகுதியில்லாத, அதிபர் தரத்தைப் பெற்றிராத ஆறு திருமுருகன் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியை குட்டிச்சுவராக்கிய போது, யாழ் பல்கலைக்கழத்தின் பேரவையில் இருந்து பல்கலைக்கழத்தை குட்டிச்சுவராக்கிய போது, இந்த கஜாக்களுக்கு அவர்களை விமர்சிக்க சாதிய விசுவாசம் விடவில்லையோ” எனக் கேள்வி எழுப்பினார். “ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒருவர் யாழ் நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றை நிர்வகிக்கின்றார். அதிலும் அதனை மிகத் திறம்பட நிர்வகிப்பதாக அங்கு கற்கும் மாணவர்களின் பெற்றோர்களே பாராட்டுகின்ற போது, கொழும்புக்கு ஓடிப்போய் பாராளுமன்றத்தில் முறையிட்டு ஒரு நல்ல தகுதியான அதிபரை விரட்டியடிக்க நினைப்பது என்ன மனநிலை” என்றும் கேள்வி எழுப்பினார்.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார், தற்போது யாழ் மாவட்ட மக்களை மிகவும் பாதிக்கின்ற குடி தண்ணீர் பிரச்சினை அதனால் ஏற்படுகின்ற சுகாதாரப் பிரச்சினை, யாழ் மீனவர்கள் எதிர்கொள்கினற வாழ்வாதாரப் பிரச்சினை என்று பல பிரச்சினைகள் இருந்த போதும் அவை பற்றியெல்லாம் பாராளுமன்றத்தில் வாய் திறப்பதில்லை. இல்லாத பிரச்சினையை வெறும் சாதிய நலன்களுக்காக முன்வைக்கின்றார் என்றே பழைய மாணவர்களும் தற்போதைய கல்விச்சமூகமும் உணர்கின்றது.

முன்னைய அதிபர் ஓய்வுபெற்றுச் சென்றபோது அங்கு உப அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டார். ஆண்கள் பாடசாலைக்கு பெண் அதிபர் வேண்டாம் என்ற போராட்டமும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தகுதிகள் பலவுடைய தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமார் நியமிக்கப்பட்டார். அதன் பின்னால் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவின் அழுத்தங்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டது. எது எவ்வாறாக இருந்தாலும் தற்போதைய அதபர் எஸ் இந்திரகுமார் மக்களால் வரவேற்கப்படுகின்றார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபருக்கான தகுதியில்லாமல் ஆறுதிருமுருகன் யாழ் ஸ்கந்தவரோதாயாக் கல்லூரியில் நியமிக்கப்பட்டார். யாழ் பல்கலையில் பேரவையிலும் நியமிக்கப்பட்டார். இவர் இப்பதவிகளைப் பெற முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசு இருந்தது. தான் போன கல்வி நிறுவனங்களைச் சீரழித்தார் ஆறுதிருமுருகன். ஆனால் யாரும் ஆறு திருமுருகன் மீது கேள்வி எழுப்பவில்லை. ஏனெனில் அவர் ஆதிக்க சாதி, ஆளப் பிறந்தசாதி, பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் சாதி என்பதைத்தவிர வேறு காரணங்கள் இல்லை.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் – கருணா அம்மன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கஜேந்திரகுமார் வலியுறுத்தல் !

மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர்,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து பல மனித எச்சங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் தமது உறவுகளும் இருக்கலாமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச விதிமுறைகளை கடைபிடித்து வெளிநாட்டு நிபுணர்கள், தடயவியலாளர்கள் ஆகியோரின் உதவிகளையும் பெற வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயத்தில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த பொலிஸார் தயக்கம் காட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் மனித புதைகுழி தொடர்பில் விடுதலை புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், அதற்காக கருணா அம்மன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ரணில் அரசாங்கத்தின் தேசிய பேரவையில் சி.வி.விக்கி, கஜேந்திரகுமார் – தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என்கிறது கூட்டமைப்பு!

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டுள்ளார்.

சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதானது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.” என தெரிவித்துள்ளார்.

……………………….

கடந்த நல்லாட்சி அரசு காலத்திலும் சரி, 2009ஆம் ஆண்டு முதல் மகிந்தராஜபக்ச தரப்பினரையும் எதிர்க்கவும் சரி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினருடன் இரா.சாணக்கியன் அங்கத்துவம் வகிக்கும் தமிழ்தேசியகூட்டமைப்பு இணைந்து செயலாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக ரணில் விக்கிரமசிங்க தமிழர் தேசியபிரச்சினைக்கு தீர்வு வழங்ககூடிய தலைவர் என கூறி வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ரணில் அரசாங்கத்தின் தேசிய பேரவையில் இணைந்தது தொடர்பில் இரா.சாணக்கியன் விசனம் தெரிவித்துள்ளார்.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும்.”- கஜேந்திரகுமார்

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியுடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு நடைபெற்ற போதும் கூட இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பில் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை என்பது ஊடகங்கள் மூலம் உறுதியாகின்றது.

அதேசமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கத்திலிருந்து 13ஆம் திருத்தத்தை அமல்படுத்துவதற்கான அழுத்தங்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. இது சம்பந்தமாக நாம் தெரிவித்து வந்த கருத்துக்களானது மீண்டும் மீண்டும் உறுதியாவதாகவே கருதுகிறோம்.

கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்களை தடை செய்த அரசு தற்போது பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளபோது அந்த புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கின்றது. புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை நீக்குவதற்கு கூட அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி உள்ளது. இது எதை காட்டுகிறது என்றால் தடை என்பது இலங்கை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயம் அல்ல என்பதே ஆகும்.

13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே. அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என்றார்.

மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இந்த முறை கடுமையானதாக இருக்குமாம் – கஜேந்திரகுமார் கருத்து !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இந்த முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பிலும் அவருக்கு விளக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

“சிங்கள தரப்புடன் இணைந்து அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் மனோகணேசன்.” – கஜேந்திரகுமார்

தென்னிலங்கை சிங்கள தரப்புடன் இணைந்து அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலம் இது தொடர்பில் பேசிய அவர்,

ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஒற்றையாட்சிக்குள் திணிக்கும் சதி வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது.  இந்தியாவின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் பேசும் தலைவர்களான மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை வேதனையளிக்கின்றது.

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் முஸ்லிம் மக்களே பேரினவாதிகளால் இலக்கு வைக்கப்படுகின்றமையை உணர்ந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை செயற்பட வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

“ஒரு கோடி ரூபாவில் அரைவாசியை செலவழித்துக்கொண்டு மிகுதியை தமது பொக்கட்டுக்குள் போடுகிறார்கள்.” – யாழ்.மாநகர சபை தொடர்பில் கஜேந்திரகுமார் விசனம் !

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடப்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ் மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

அவர் மெலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய அமைப்பு குறித்த பாதீட்டை எதிர்க்கும். அது அனைவருக்கும் தெரிந்த விடயம். புதிய விடயம் அல்ல. ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது. அது மிக விரைவில் வெளிவரும்.

ஊழல் செய்து தனிபர் உழைப்பதற்கான ஓர் இடமாக மாறியுள்ளது. இதனை மக்கள் மிக விரைவிலே உணர தொடங்குவார்கள். அந்த கலாச்சாரத்தை வைத்துக்கொண்டு ஒருநாளும் முடிவுக்கு வர முடியாது. ஒரு கோடி ரூபாவில் அரைவாசியை செலவழித்துக்கொண்டு மிகுதியை தமது பொக்கட்டுக்குள் போடும் நிலைதான் இருக்கின்றது என்றால் அது ஒருபோதும் மக்களிற்கு சார்பான விடயமாக மாறப்போவதில்லை.

அந்த மாநகர சபை ஊடாக எத்தனையோ விடயங்களை சரிப்படுத்தியிருக்கலாம். இன்று உலக வங்கி கோடி டொலர் கணக்கில் உதவிகளை செய்துவருகின்ற நிலையில், அந்த உதவிகளை சிறிலங்கா அரசும் ஏனைய தரப்புக்களும் ஊழல் மற்றும் வேறு காரணங்களிற்காகவும் சரியான ஆய்வுகளை செய்யாமல் இருக்கின்ற இடத்தில், மாநகர சபை அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி நவீன நகரமாக மாற்றியமைப்பதற்கு இந்த நிதிகளை பயன்படுத்துவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டும்.

மாநகர சபை எல்லைக்குள் இருக்கின்ற மத்திய அரசு செய்யக்கூடிய வேலைகளைக்கூட சரியான முறையில் நிபுணத்துவம் இன்றி ஆய்வுகள் செய்யாமல் வெறுமனே கண் துடைப்புக்காக செய்ததாக இல்லாமல், உண்மையி்ல் ஆக்கபூர்வமான அபிவிருத்தியாக மாற்றியமைக்கக்கூடிய கண்காணிப்பாக செயற்பட்டிருக்க வேண்டும்.

இன்று மழைவந்தால் கோடிக்கணக்கில் அதனை சீர் செய்வதற்காக நிதியை செலவு செய்கின்றார்கள். ஆனால் வெள்ளம் அப்படியே நிக்கின்றது. ஏனெனில், ஏற்றம் தாழ்வு தொடர்பில் எந்தவித கணிப்பும் இல்லாது, வெறுமனே வீதியில் வாய்க்காலை கட்டியிருக்கின்றார்கள்.

இவ்வாறான மிக மோசமான மோசடிகள் எல்லாமே , மாநகர சபைக்குள் மாத்திரமல்ல, உள்ளுராட்சி சபைகளிற்குள்ளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான விடயங்களில் தேசிய சிந்தனை இல்லாமல், வெறுமனே உழைக்கின்ற சிந்தனையோடு செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

நான் பேசிய விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறேன் – பாராளுமன்றில் பொன்சேகாவுக்கு கஜேந்திரகுமார் பதிலடி.

பேசும் விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என சரத்பொன்சேகா நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியமை குறித்தே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து கஜேந்திரகுமார் சபையில் உரையாற்றுகையில், “சபை அமர்வில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எனது பெயரைக் குறிப்பிட்டமை தொடர்பாக கருத்துக்கூற விரும்புகிறேன்.

அவர், நான் பேசிய விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எனக்கு சில அறிவுரைகளை வழங்கியதுடன், அதனூடாகவே இன நல்லிணக்கம் பேணப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நான் பேசிய விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறேன் என்பதை அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் குறிப்பிட்ட விடயங்களின் அளவீடுகள் தொடர்பாக நான் பிரக்ஞையுடன் இருக்கிறேன். குறிப்பாக இவர் என்னை காரணப்படுத்துவதை நான் விசேடமாக அவதானித்தேன்.

ஏனெனில், இவர் இராணுவத் தளபதியாக செயற்பட்ட காலங்களில் இலங்கை சிங்கள மரம் என்றும் ஏனையவர்கள் அனைவரும் அந்த சிங்கள மரத்தின் மீதான கொடிகள் மற்றும் சிறிய உயிரினங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான கடுமையான வார்த்தைகள், பொதுவுடைமையாளராக இல்லாத அல்லது இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே வெளிவருகிறது. ஒருவேளை அவர் தனது பதவியை இழந்த பின்னர் அல்லது சிறையில் இருந்த பின்னர் மாறியிருக்கலாம். ஆனால், அவர் எனக்கு இந்த அறிவுரையினை வழங்கியமையை மிகமுக்கியமாகப் பார்க்கிறேன்.

வடக்கு கிழக்கு பகுதிகள் இலங்கையில் யுத்தத்தினை எதிர்கொண்ட, பாரிய அளவில் அழிவுகளைச் சந்தித்த பகுதிகள். 32 வருடங்களாக நாம் போரை எதிர்கொண்டோம்.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாகவும் ஜெனரல் பொன்சேகாவாகவும் இருந்த அக்காலப்பகுதியில், வடக்கு கிழக்கு முழு பொருளாதார தடையின் கீழ் இருந்தது. அக்காலப்பகுதியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. வடக்கு கிழக்குப் பகுதிகள் எதிர்கொண்ட நிலை இதுவே.

32 வருடங்கள் முழுமையான அழிவுக்குப் பிறகு அந்தப் பகுதிகளை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றது. 32 வருடங்களுக்கு மேலாக பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட மக்களை, இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் சம அளவாக போட்டியிட எதிர்பார்ப்பது சாத்தியமற்றது” என்று தெரிவித்தார்.