ஐக்கிய மக்கள் சக்தி கட்சி

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் – எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன..?

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து ஐக்கியமக்கள் சக்தி ஆராயவுள்ளது.

இது தொடர்பான கட்சியின்கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லைஎன தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்ர ரஞ்சித் மத்துமபண்டார மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என தீர்மானிப்போம் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆராய்வதற்கான கட்சியின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்தும் ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக புதிய சட்டங்கள் அவசியம் என்றால் அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் எனினும் உத்தேச பயங்கரவாத சட்ட மூலத்திற்கு திருத்தங்களுடன் கூட எந்த ஆதரவையும் அளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்

“குருந்தூர் மலையை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத கலவரங்கள் ஏற்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.” – சஜித் தரப்பு !

குருந்தூர் மலையை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத கலவரங்கள் ஏற்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதென ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் யுத்தத்தினால் பாரியளவில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீண்டுமொரு முறை யுத்தத்தை தூண்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை என கிளிநொச்சி மாவட்டத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட போது திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

“குருந்தூர் மலை தொடர்பில் தற்போது பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. எந்தவொரு மதமும் தமது உரிமைகளுக்காக வன்முறைகளில் ஈடுபடுமாறு கூறவில்லை. இது தொடர்பில் நாம் கவலையடைய வேண்டும்.

அனைத்து மதங்களும் அனைத்து மதத்தையும் மதிக்குமாறு போதித்துள்ளது.

குருந்தூர் மலை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதை அனைவரும் அறிந்த விடயம். தற்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் முதன்மையான கடமையாக அமைந்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் மூலம் குறித்த பகுதி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாறாக இதனை வைத்து இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டக் கூடாது.

குருந்தூர் மலையின் தொல்பொருள் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

“திருடர்கள் கையில் சாவி” – திருடர்களுக்கு தீனி போட்டு வளர்க்கும் தேசிய கட்சிகளின் தலைமைகள் !

இம்முறை உள்ளூராட்சிமன்ற  தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுன சார்பில் சிலாபம்  உள்ளூராட்சி சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நேற்று (12)  மாதம்பே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர். உடலவெல பிரதேசத்தில் வீதித் தடையில் அவர் பயணித்த சிறிய லொறியை பொலஜஸார் சோதனையிட்டபோதே கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன்  அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முறுவ பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக லொறியில் மாதம்பேயிலிருந்து இந்தக் காசிப்பு போத்தல்களை கொண்டு சென்று கொண்டிருந்தபோதே இவை  கைப்பற்றப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு “தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுற்றுலா விசாவில் மக்களை லாவோஸுக்கு அழைத்துச் சென்று, பணமோசடி செய்த குற்றச்சாட்டில் அம்பலாந்தோட்டை உள்ளூராட்சி மன்றத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.”

https://www.thesamnet.co.uk//?p=94737

இதே நேரம் இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்களை தேசம்நெட் வெளியிட்டும் கூட இது தொடர்பான எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை.

https://www.thesamnet.co.uk//?p=94268

இப்படியாக இலங்கையின் தேசிய கட்சிகள் என குறிப்பிடப்படும் பொதுஜனபெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி போன்ற கட்சிகளின் அடிப்படை உறுப்பினர்களும் – வேட்பாளர்களும் கூட திருடர்களாகவும், மோசடிகாரர்களாகவும், குற்றவாளிகளாகவும் காணப்படும் நிலையில் இந்த கட்சிகளின் தலைமைகள் இது தொடர்பில் எந்த வித நடவடிக்கைகளும் இது வரை மேற்கொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொரு மேடைகளிலும் ஊழலை ஒழிப்போம் – திருடர்களை சிறையிலடைப்போம் என வீரவசனம் பேசிக்கொண்டு தங்களுடைய கட்சிகளிலேயே திருடர்களை வைத்துககொண்டிருக்கிறார்கள். இதில் இன்னமும் வேதனையான விடயம் இந்த குற்றங்களை செய்ததாக நாம் மேலே குறிப்பிட்டுள்ள கட்சி வேட்பாளர்கள் அல்லது அங்கத்தவர்கள் இன்னமும் ஆட்சி தொடர்பான மன்றங்களில் அதிகாரத்துக்கு வரவில்லை. அதிகாரம் இல்லாத போதே இந்த உள்ளுராட்சி மற்றும் மாவட்ட மட்ட பிரதிநிதிகள் இவ்வவு குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்து உயர் பதவிகளை பெற்றால் நாட்டின் நிலை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும். சாதாரணமாக கட்சிக்குள் நடக்கும் ஊழலையே ஒழிக்க திராணியற்ற இந்த தலைவர்கள் தான் நாட்டை மீட்கப்போகிறோம் என கூவித்திரிகிறார்கள்.