ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி முக்கிய அரசியல் பிரமுகர்!
2019 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றவே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி ஒரு முக்கிய அரசியல் பிரமுகர் என என்பிபி வட்டாரங்கள் தகவல்களை கசியவிட்டுள்ளன.
குறிப்பிட்ட அரசியல் பிரமுகர் கைதாகும் போது தென்னிலங்கையில் திட்டமிட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்களை சம்பந்தப்பட்ட தரப்புகள் தூண்டினால் அதனை தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளதாக கூறப்படுகிறது. இராணுவம் மற்றும் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
யார் அந்த முக்கிய பிரமுகரகாக இருக்க முடியும்? என்ற வாதங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன. கைதாகப் போகும் நபர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற ஊகங்களும் வெளியிடப்படுகின்றன. இடம்பெறப் போகிற கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே தினத்தையொட்டி மேதினச் செய்தியாக இவ்விடயம் வெளிவரலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

