ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி ஐஎஸ்ஐஎஸ் சஹ்ரான் ஹாஷிம் ! உதய கம்மன்பில

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி ஐஎஸ்ஐஎஸ் சஹ்ரான் ஹாஷிம் ! உதய கம்மன்பில

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி முக்கிய அரசியல் பிரமுகர்!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி முக்கிய அரசியல் பிரமுகர்!

2019 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றவே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி ஒரு முக்கிய அரசியல் பிரமுகர் என என்பிபி வட்டாரங்கள் தகவல்களை கசியவிட்டுள்ளன.

குறிப்பிட்ட அரசியல் பிரமுகர் கைதாகும் போது தென்னிலங்கையில் திட்டமிட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்களை சம்பந்தப்பட்ட தரப்புகள் தூண்டினால் அதனை தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளதாக கூறப்படுகிறது. இராணுவம் மற்றும் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

யார் அந்த முக்கிய பிரமுகரகாக இருக்க முடியும்? என்ற வாதங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன. கைதாகப் போகும் நபர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற ஊகங்களும் வெளியிடப்படுகின்றன. இடம்பெறப் போகிற கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே தினத்தையொட்டி மேதினச் செய்தியாக இவ்விடயம் வெளிவரலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி ஐஎஸ்ஐஎஸ் சஹ்ரான் ஹாஷிம் ! உதய கம்மன்பில

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி ஐஎஸ்ஐஎஸ் சஹ்ரான் ஹாஷிம் ! உதய கம்மன்பில

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி யார் என அமெரிக்காவின் எஃப்பிஐ ஆதாரபூர்வமாக நிரூபித்து விட்டது. அது வேறு யாருமல்ல தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமும் நெளபர் மொளலவி என்றும் உதய கம்மன்பில கூறுகிறார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் பிள்ளையானிடம் கட்டாய வாக்கு மூலத்தை வாங்கி ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியென வேறுயாரோ ஒருவரை பலியாக்க இருப்பதாகவும் கம்மன்பில குறிப்பிட்டார். தான் ஒற்றை மனிதனாக பிள்ளையானை சந்தித்து அரசாங்கத்தினுடைய வேடத்தை கலைத்த வீரன் ராம்போவாக உருவெடுத்திருப்பதாகவும் பெருமிதம் அடைந்தார்.

இனவாதியான கம்மன்பில இராணுவ துணைப்படையாக இருந்து பல கொலைகளில் மற்றும் கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படலில் சம்பந்தப்பட்ட பிள்ளையானை நாட்டைக் காப்பாற்றிய தேசபக்தன் என உதய கம்மன்பில பாராட்டி வருவதை அமைச்சர் கண்டித்தமை தெரிந்ததே.

ஒரு பக்கம் ஈஸ்டர் தாக்குதலில் இந்தியாவின் பங்கு என்ன? எனவும், அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற கோத்தபாய மற்றும் ராஜபக்ச குடும்பத்தின் சதியெனவும் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நகருகின்றது.