இஸ்ரேல் – பலஸ்தீன்

இஸ்ரேல் – பலஸ்தீன்

இஸ்ரேலால் முடக்கப்பட்டது சர்வதேச ஊடகமான அல் ஹசீனா !

ஹமாஸுடனான போருக்கு மத்தியில் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் பணியகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அனுமதிக்கும் புதிய விதிமுறைகளுக்கு இஸ்ரேலிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெருசலேமில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அந்நாட்டின் அரசாங்க செய்தி தொடர்பாளர் அயூப் காரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“அல் ஜசீரா அலுவலகங்களை மூடுவதற்கும் அவர்களின் வேலையைத் தடைசெய்வதற்கும் அரபு நாடுகளின் நடவடிக்கையின் அடிப்படையில் எங்கள் முடிவை மேற்கொண்டுள்ளோம்.

 

வன்முறையை மேற்கொள்ளும் முகமாக இந்த ஊடகம் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன” என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை, அந்நிறுவனம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இஸ்ரேல் – பலஸ்தீன் போர்ப்பதற்றம்” – உயர்வடைய ஆரம்பித்துள்ள மசகு எண்ணெய்யின் விலை !

இஸ்ரேல் – ஹமாஸ் போரினை தொடர்ந்து மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் இன்று (14) மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் WTI ரக மசகு எண்ணெய்யின் விலை 87.69 டொலராகவும், ஒரு பீப்பாய் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 90.89 டொலராகவும் அதிகரிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது.

அத்தோடு, சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் இன்றைய விலை 3.23 டொலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.