இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு

2023இல் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் கைதானவர்கள் பொலிஸ் அதிகாரிகளே..!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த வருடம் இலஞ்சம்,  ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 3,431 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இலஞ்சம் மற்றும் ஊழல் முறைப்பாடுகளுக்காக கைது செய்யப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பொலிஸ் அதிகாரிகள் என்றும்   தெரிவித்துள்ளது.

இந்த  முறைப்பாடுகளில் 2,789 முறைப்பாடுகள் விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த  அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டுப் பயிற்சிக்குத் தெரிவான யோஷித ராஜபக்ச – விசாரணைகளை ஆரம்பித்தது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு !

அண்மைக்காலம் வரை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமை அதிகாரியாக இருந்த யோஷித ராஜபக்ச தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை கடற்படையில் பணியாற்றிய போது வெளிநாட்டுப் பயிற்சிக்குத் தெரிவான விதம் பற்றி இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது . இதற்காக தேர்வு பணியில் ஈடுபட்டவர்கள் விசாரிக்கப்பட உள்ளனர்.

யோஷித ராஜபக்ச கலந்துகொண்ட முக்கிய வெளிநாட்டுப் பயிற்சிகளில் ஒன்று, பிரித்தானியா கடற்படைக் கல்லூரியில் உள்ள பாடநெறியாகும், இது பிரித்தானிய அரச கடற்படையின் நிறுவனமான டார்ட்மவுத் என குறிப்பிடப்படுகிறது.