இலங்கை சுற்றுலா

இலங்கை சுற்றுலா

உச்சத்தை தொடும் சுற்றுலாப் பொருளாதாரம் – இணைந்து கொள்ளுமா வடக்கு ?

உச்சத்தை தொடும் சுற்றுலாப் பொருளாதாரம் – இணைந்து கொள்ளுமா வடக்கு ?

சுற்றுலாத்துறை வருமானம் 53.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2024 இல் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இருபது லட்சமாகTk; 3,168.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் தென்னிலங்கை மற்றும் கிழக்கு இலங்கையை மையப்படுத்தியே நகரும் நிலையில் mg;பகுதிகளில் இன்னமும் பயணிகளை கவரும் நிலையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை வடக்கு மாகாணத்திலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய பறவைகள் சரணாலயங்கள், போர்த்துக்கேயர் கால கோட்டைகள், நெடுந்தீவு சுற்றுலா மையம், பழங்கால கோயில்கள் , வடக்கு நிலத்துக்கே உரித்தான கைத்தொழில் நடவடிக்கைகள் என பல்வேறுபட்ட அம்சங்கள் காணப்படுகின்றது. எனினும் கூட வடக்கு மாகாணசபை இயங்கு நிலையில் இருந்த போது வடக்கின் சுற்றுலாத்துறையை முன்னேற்ற எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே ஊழல் அமைச்சர்களால் புஸ்வாணமாகிப்போனது. கிளிநொச்சியில் பறவைகள் திடல் என்ற பெயரில் பொன். ஐங்கரநேசன் அமைத்த திட்டம் கூட இன்று கவனிப்பாரற்று கிடக்கின்றது.

இது போலவே யாழ் மாநகரசபைதானும் ஏதேனும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுத்து சுற்றுலா பயணிகளை கவர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பலர் எதிர்பார்த்த போதும் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. யாழ் மாநகர சபையின் முதல்வராக வி. மணிவண்ணன் ஆரம்பித்த ஆரியகுளம் புதுப்பிப்பு திட்டம், வரலாற்று இடங்களை பாதுகாக்கும் திட்டங்கள் கூட உட்கட்சி கோளாறுகளாலும் – சுயநல அரசியலாலும் வீணே போனதுதான் வரலாறு.

இலங்கை ஓர் சுற்றுலாத்துறை நாடு என்ற அடிப்படையில் தேசிய பொருளாதார நீரோட்டத்தில் வடக்கு மாகாணமும் தன்னை இணைக்காதவரை அபிவிருத்தி திட்டங்கள் இந்த பகுதிகளை வந்தடைவதும் சிரமமானது தான். சுற்றுலாத்துறை நோக்கி வடக்கு பொருளாதாரம் கட்டமைக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. நீண்ட கடல்வளமும் – வரலாற்று பாரம்பரியமும் – தனித்துவமான வாழ்க்கை கோலமும் – பிரமாண்டமான நீர்ப்பாசன கட்டமைப்புக்களையும் – இயற்கை கொடைகளையும் கொண்ட வடக்கு மாகாணம் தேசிய பொருளாதார நீரோட்டத்துடன் தன்னை இணைக்க மறுக்கிறது. இதன் விளைவே இன்றும் வடக்கு புலம்பெயர் தமிழர்களின் கைகளை நம்பியிருக்கவும் காரணம்.

உலகின் தலைசிறந்த சுற்றுலாத்தீவாக இலங்கையை பட்டியலிட்டு ஏமாற்றும் தீவு என பெயரிட்ட Big 7 Travel !

பயண இணையத்தளமான பிக் 7 ட்ரவல் (Big 7 Travel) வெளியிட்ட “2023 ஆம் ஆண்டிற்கான உலகின் 50 சிறந்த தீவுகள்” பட்டியலில் உலகின் சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

50 தீவுகளில் 13 வது இடத்தில் உள்ள இலங்கை உள்ள நிலையில் அவ்வறிக்கையில் “ஏமாற்று”(beguiling) தீவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை தொடர்பில் அவ்வறிக்கையில்,

“அத்துடன், எதிர்ப்புகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தொற்றுநோய்கள் காரணமாக இலங்கை சில ஆண்டுகளாக சுற்றுலா நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தது ஆனால் அதன் கதவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன.

ஏமாற்றும் தீவுக்குச் செல்ல ஆயிரம் காரணங்கள் உள்ளன, குறைந்தது அதன் மக்கள், சுவையான உணவு, முடிவில்லா கடற்கரைகள், தேயிலைத் தோட்டங்கள், யானைகள் நிறைந்த வனவிலங்கு பூங்காக்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான இடிபாடுகள் என்பன அதில் அடங்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் வரிசைப்படுதல்களை மேற்கொள்ள ஒரு நுட்பமான தேர்வு செயன்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, இந்த இடங்களை நேரடியாக ஆராய்ந்த சமூக ஊடக பார்வையாளர்கள் மற்றும் பயண நிபுணர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, மதிப்பெண்கள் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.