உச்சத்தை தொடும் சுற்றுலாப் பொருளாதாரம் – இணைந்து கொள்ளுமா வடக்கு ?
சுற்றுலாத்துறை வருமானம் 53.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2024 இல் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இருபது லட்சமாகTk; 3,168.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் தென்னிலங்கை மற்றும் கிழக்கு இலங்கையை மையப்படுத்தியே நகரும் நிலையில் mg;பகுதிகளில் இன்னமும் பயணிகளை கவரும் நிலையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை வடக்கு மாகாணத்திலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய பறவைகள் சரணாலயங்கள், போர்த்துக்கேயர் கால கோட்டைகள், நெடுந்தீவு சுற்றுலா மையம், பழங்கால கோயில்கள் , வடக்கு நிலத்துக்கே உரித்தான கைத்தொழில் நடவடிக்கைகள் என பல்வேறுபட்ட அம்சங்கள் காணப்படுகின்றது. எனினும் கூட வடக்கு மாகாணசபை இயங்கு நிலையில் இருந்த போது வடக்கின் சுற்றுலாத்துறையை முன்னேற்ற எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே ஊழல் அமைச்சர்களால் புஸ்வாணமாகிப்போனது. கிளிநொச்சியில் பறவைகள் திடல் என்ற பெயரில் பொன். ஐங்கரநேசன் அமைத்த திட்டம் கூட இன்று கவனிப்பாரற்று கிடக்கின்றது.
இது போலவே யாழ் மாநகரசபைதானும் ஏதேனும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுத்து சுற்றுலா பயணிகளை கவர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பலர் எதிர்பார்த்த போதும் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. யாழ் மாநகர சபையின் முதல்வராக வி. மணிவண்ணன் ஆரம்பித்த ஆரியகுளம் புதுப்பிப்பு திட்டம், வரலாற்று இடங்களை பாதுகாக்கும் திட்டங்கள் கூட உட்கட்சி கோளாறுகளாலும் – சுயநல அரசியலாலும் வீணே போனதுதான் வரலாறு.
இலங்கை ஓர் சுற்றுலாத்துறை நாடு என்ற அடிப்படையில் தேசிய பொருளாதார நீரோட்டத்தில் வடக்கு மாகாணமும் தன்னை இணைக்காதவரை அபிவிருத்தி திட்டங்கள் இந்த பகுதிகளை வந்தடைவதும் சிரமமானது தான். சுற்றுலாத்துறை நோக்கி வடக்கு பொருளாதாரம் கட்டமைக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. நீண்ட கடல்வளமும் – வரலாற்று பாரம்பரியமும் – தனித்துவமான வாழ்க்கை கோலமும் – பிரமாண்டமான நீர்ப்பாசன கட்டமைப்புக்களையும் – இயற்கை கொடைகளையும் கொண்ட வடக்கு மாகாணம் தேசிய பொருளாதார நீரோட்டத்துடன் தன்னை இணைக்க மறுக்கிறது. இதன் விளைவே இன்றும் வடக்கு புலம்பெயர் தமிழர்களின் கைகளை நம்பியிருக்கவும் காரணம்.