இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

பொது வேட்பாளராக களமிறங்குகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கும் கூட்டணியில் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும், தேர்தல் குறித்த அறிவிப்புக்கு பின்னர் மேலும் சாதகமான பல மாற்றங்கள் தேசிய அரசியலில் இடம்பெறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பிரத்தியேக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்த உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதார சாதக தன்மைகள் குறித்து தெளிவுப்படுத்த உள்ளார். இதன் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் பெரும்பாலும் கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை டெல்லியில் சந்தித்து வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்று முதலாவது விஜயமாக கடந்த வியாழக்கிழமை கொழும்பை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடியின் விசேட செய்தியுடனேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்திருந்தார். இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை இராஜதந்திர வழிமுறைகளுக்கு அமைய சந்தித்து கலந்துரையாடினார்.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில், இரு தரப்பு கலந்துரையாடலுக்கு அப்பால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கிடையில் மாத்திரம் பிரத்தியேகமான விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன் போது உத்தேச தேர்தல்கள் மற்றும் நாட்டின் அரசியல் – பொருளாதார ஸ்தீரதன்மைக்கான முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தேச ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்படும் கூட்டணியின் முன்னேற்றங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வினாவியுள்ளார்.

பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கைக்குறிய வகையில் வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளன. அந்த கூட்டணியில் பொது வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்பின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் குறிப்பிட்டுள்ளதுடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்புடன், மேலும் சாதகமான பல மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்திய அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பினை விடுக்க உள்ளார். இந்த அறிவிப்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான முன்னெடுப்புகளில் உள்ள பன்னாட்டு கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளமையை அறிவிக்க உள்ளார்.

இலங்கையின் கடன் மேலாண்மை வசதிகளில் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை அரசாங்கம் கோரியுள்ள நிலையில், இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முழுமையான ஒத்துழைப்புகளுக்கு உறுதியளித்துள்ளன.

குறிப்பாக சர்வதேச கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தம் இருநாட்களுக்குள் கைச்சாத்திடப்பட உள்ளது. இந்த தகவலையும், இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள் நாடு அடைந்த பொருளாதார வெற்றிகளையும் நாட்டு மக்களுக்கு கூறவுள்ள ஜனாதிபதி ரணில், ஜனாதிபதி தேர்தல் குறித்தும் தெரியப்படுத்த வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

“சர்வதேச நாணய நிதியத்தை சமாளிக்க இலங்கைக்கு உதவிய ஒரே நாடு இந்தியா“ – நினைவுபடுத்துகிறார் எஸ் ஜெய்சங்கர் !

பிராந்தியம் முக்கியத்துவம் பெறுவதால், பல நாடுகள் இந்திய பெருங்கடலில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட சீன ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தியப் பெருங்கடல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மற்றொரு விசேட அம்சமாக மாறாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா தனது தேசிய நலன்களை கவனித்துக்கொள்ள வேண்டும், ஆனால் பிராந்தியத்தில் தனித்துவத்தை கோர முடியாது. இந்தியாவின் அண்டை நாடுகள் கலாசார ரீதியாக ஒன்றுப்பட்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும் பிணைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தை சமாளிப்பதற்கு முன்வருவதற்கு உதவிய ஒரே அண்டை நாடு இந்தியா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கையர்கள் விரும்பினால் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்க தயார் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் !

இலங்கை மக்கள் விரும்பினால்- இந்தியா இலங்கை தனது ஒரு மாநிலம் என அறிவிக்க தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள டுவிட்டர் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ள இந்தியா அதனை கடுமையாக சாடியுள்ளது.

இலங்கை மக்கள் இணங்கினால் இலங்கையை இந்தியா தனது இன்னுமொரு மாநிலமாக அறிவிக்க தயார். அதற்கு பதிலாக இந்தியா இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு உட்பட ஏனைய பிரச்சினைகளிற்கு தீர்வை காணும் நீண்டகால விடயங்களிற்கும் உதவலாம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார் என குறிப்பிடும் டுவிட்டர் செய்தியொன்று வைரலாகி வருகின்றது.

இந்த டுவிட்டர் செய்தி போலியானது என தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ள இந்திய தூதரகம்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களின் ட்விட்டர் கணக்கிற்குரியதென காண்பிக்கும்வகையில் வடிவமைக்கப்பட்ட போலியானபடம் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம்.இது முழுக்கமுழுக்க போலியானதும் புனையப்பட்டதுமாகும்.தீய எண்ணத்துடனான இதன் உள்ளீடுகளை நாம் கடுமையாக மறுக்கின்றோம்.

இந்தியா இலங்கை இடையில் காணப்படும் நட்புரீதியானதும் நெருக்கமானதும்இ தொன்மையானதுமான உறவை பாதிக்கும்வகையில் அவநம்பிக்கைகொண்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தீய நோக்கத்துடனான இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையப்போவதில்லை என தெரிவித்துள்ளது.

“இலங்கையின் நிலையை கண்டு கண் கலங்கினேன்.” – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

மருந்துத் தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்திய உதவியை வழங்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்று முற்பகல் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்வுப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே தற்போது இடம்பெற்று வருவதாக பேராதனை வைத்தியசாலை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் இது தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“இந்தச் செய்தியைக் கண்டு கலங்கினேன். இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பதைத் தொடர்புகொண்டு விவாதிக்குமாறு உயர் ஆணையர் பாக்லேயிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என ஜெய்சங்கர் இன்று ட்வீட் செய்துள்ளார்.

 

“இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்க்க நாங்கள் தயார்.” – இந்திய அரசாங்கம் அறிவிப்பு !

“இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கையில் முதலீடு செய்ய தயார்.” என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இணையவழி கலந்துரையாடலின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர்இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிதி நெருக்கடிக்கு தீர்வை காண்பது தொடர்பில் இருநாடுகளிற்கும் மத்தியில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் உட்பட ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா கடன் உதவிகளை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.