
சமூக வலைத்தளங்களில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பதிவுகளை இட்டுவந்த ஜெய் – கொன்ஸ் இரட்டையர்கள் பயன்படுத்திய வட்ஸ்அப் குறூப் மார்ச் 25 தேசம்நெற் – தேசம்திரையில் சாட்சியங்களோடு வெளியான பதிவைத் தொடர்ந்து, அதன் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு மூடப்பட்டது. ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளரான ஜெய் என்ற பெயரில் எழுதி வந்த ஆர் ஜெயதேவன் மற்றும் தவறணை மில்லியனெயர் ரரின் கொன்ஸ்ரன்ரைன் ஆகிய இரட்டையரே இந்த வட்ஸ்அப் குறூப்பில் சமூக விழுமியங்களுக்குப் புறம்பாக பெண்களின் படங்களை, பதினெட்டுவயதுக்கும் குறைந்த இளம் பெண்களின் படங்களை சிறுவர்களின் படங்களைப் பதிவேற்றி பாலியல் உறுப்புகள், மன்மதக்குஞ்சுகள் என்றெல்லாம் சம்பாசித்து வந்துள்ளனர்.
இவ்வாறாக ஆண்கள் மட்டுமே உள்ள சமூக வலைத்தளத்தில் பெண்களை, இளம்பெண்களை, சிறுவர் சிறுமிகளைப் பதிவேற்றிய இந்த இரட்டையர்கள் அறுபது வயதைத் தாண்டியவர்கள். ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் திருமண வயதில் உள்ள இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று பிள்ளைகளின் தந்தை. இரண்டாயிரமாம் ஆண்டு நடுப்பகுதிகளில் இவருக்கும் நோர்வேயில் இருக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக அறியப்பட்ட ‘ஊத்தை’ சேதுவுக்கும் நடந்த சமூக வலைத்தள மோதலில் ஆர் ஜெயதேவனின் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தது. இப்போது ஆர் ஜெயதேவனும் கொன்ஸ்ரன்ரைனும் சேர்ந்து பெண்கள், இளம்பெண்கள், சிறுவர் சிறுமிகளின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரெஸ்ரெஸ்திரோஜன் பம்பண்ணுவதாக சல்லாபிக்கின்றனர். ரரின் கொன்ஸ்ரன்ரைனுக்கும் திருமண வயதில் ஒரு பெண் பிள்ளையுட்பட இரு பிள்ளைகள் உள்ளனர்.
பகலில் ஈழபதீஸ்வரர் மற்றும் ஆலயங்களின் பூஜைகளை, மட்டக்களப்பில் தங்கள் ஆலயம் வீடுகட்டிக்கொடுப்பதைப் பதிவிடும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர், இருள ஆரம்பித்ததும் ரரின் கொன்ஸ்ரன்ரைன் பெண்களின், சிறுமிகளின் படங்களைப் பதிவேற்றி தங்கள் வக்கிரத்தைக்கொட்டும் வகையில் சில வசனங்களைப் பதிவேற்றுவார். அதனைத் தொடர்ந்து அதற்கு பொழிப்புரை எழுத வரும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் அந்தப் பெண்களின், சிறுமிகளின் படங்களின் கீழ் பாலியல் உறுப்புகள், மன்மதக் குஞ்சுகள் என்று சிலாகிப்பார். இதன் உச்சமாக மார்ச் 23இல் இளம்பெண்களின் படத்தைப் பதிவேற்றி பாலியல்தூண்டலை ஏற்படுத்தும் ரெஸ்ரெஸ்திரோன் பம் பண்ணுவது பற்றி சல்லாபித்துள்ளார். இதனைத் தொடர்ந்தே தேசம்நெற் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக குறித்த வட்ஸ்அப் குறூப் கலைக்கப்பட்டது.
இந்த சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட சிறுமிகள் வேறுயாருமல்ல ரரின் கொன்ஸ்ரன்ரைனது வைத்தியரும் ரரின் கொன்ஸ்ரன்ரைனின் மகனுக்கு கற்பித்த ஆசிரியரதும் பெண் பிள்ளைகளும் மகனும். அதைவிடவும் அவர்கள் ஈழபதீஸ்வரரையும் நம்புபவர்கள். மேலும் இவர்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டவர்களில் ஈழபதீஸ்வரர் மீது நம்பிக்கை கொண்டவர்களும் இருந்தனர். கடந்த சில மாதங்களாகவே பெண்களைத் துஸ்பிரயோகம் செய்யும் வகையிலும் இப்பெண்கள் இரண்டாவது, மூன்றாவது, ஐந்தாவது நபராக திருமணமாவதாக ஏளனம் செய்யும் வகையில் குரங்குகளோடு இணைத்தும் பல பதிவுகளை இந்த ஜெய் – கொன்ஸ் இரட்டையர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்துள்ளனர்.
இந்தக் கீழ்த்தரமான பதிவுகளைப் பதிவிட்ட இந்த இரட்டையர்கள் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் மாதம் 8ம் திகதி ஒரு பெண்ணின் படத்தை மஹிந்த ராஜபக்ச ஒரு பெண்ணுடன் ஒட்டுறவாக இருக்கும் படத்தோடு ஒப்பிட்டு இப்பெண்ணும் சிங்கள இரத்தம் கலந்த ஒருவரை பிடித்துள்ளார் என்ற தோரணையில் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் எழுதியுள்ளார். ஆர் ஜெயதேவன் – ரரின் கொஸ்ஸ்ரன்ரைன் இரட்டையர்கள் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த சில வாரங்களிலேயே நான் முந்தி நீ முந்தி என்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்து விருந்து சாப்பிட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகிந்த ராஜபக்சவுடன் விருதுண்ண முன்பிருந்தே புலனாய்வுத்துறையோடும் நெருக்கமாக இருந்த இவர்கள் தற்போது தஞ்சம் கோரிய பெண்ணொருவரது படத்தை வெளியிட்டு அவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையில் இருந்ததாக காட்டிக்கொடுக்கிறார்களாம்.
இவர்களது சமூக வலைத்தளப் பதிவுகளால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில், “இந்த அயோக்கியர்களை கோயில்களுக்குள் விடவே கூடாது. ஆனால் எப்பிடி ஈஸபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளராக இருக்கின்றான்?” என்று கேள்வி எழுப்பினார். “இந்தக் கோயில்களை யார் நடத்தலாம் என்றில்லாமல் மொள்ளமாரிகளும் முடிச்சவிக்கிகளும் கோயில் நடத்தினால், இவன்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு நற்சான்றிதழ் கொடுமால் சமூக சேவையா செய்வான்கள் என்றும் அவர் கொதித்தெழுந்ததார். ஓம் சரவணபவ வட்பேடில் காமக்குத்து அடித்த குற்றச்சாட்டுக்கு வெள்ளையடிக்க தாயகத்தில் வீடு கட்டிக்கொடுகிறார். இங்க ஈழபதீஸ்வவர் ஆலய உரிமையாளர் ஜெயதேவன் மட்டும் என்ன செய்கிறார் ? தன்னுடைய சீர்கெட்ட பழக்கவழக்கங்களை மறைக்க கோயில், வீடு கட்டுகிறேன் என்று வைற் வோஸ் அடிக்கின்றார்” என்கிறார்.
இவர்களால் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு பாதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண்ணின் கணவர், தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் “இந்த பார் மில்லியனெயர் ரரின் கொன்ஸ்ரன்ரைனும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவனும் இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ அல்ல. இவர்கள் மனிதப் பிறப்புகளே இல்லை” என்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “இவ்வாறான அயோக்கியர்களாலேயே பெண்கள் முன்னுக்கு வரப் பின்நிற்கின்றனர். இந்தப் படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் இவ்வளவு க்குப் பரப்பப்பட்டால் எந்தப் பெண் தான் சமூக நோக்கத்தோடு முன்வந்து செயற்பட முன்வருவாள்” எனக் கேள்வி எழுப்பினார்.
இணைப்பை அழுத்தி, கொன்ஸ்ரன்ரைன் பெண்ணொருவரை விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று காட்டிக்குடுக்கிறாராம் என்ற அவர் சமூக வலைத்தளத்தில் அப்பெண்ணின் படத்தோடு பரவவிட்ட அவதூறைப் பார்க்கலாம்.
Constantine_T_LTTE_Harasment_01
இது பற்றி தேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்த வெம்பிளியில் வாழும் ஈழபதீஸ்வரர் ஆலய அடியார் சிவா மயில்வாகனம், தான் ஈழபதீஸ்வரர் ஆலயம் புலி ஆதரவாளர்களால் நடத்தப்படும் போது இருந்தே சென்று வருவதாகவும் பல கொலைகளுக்கும் காரணமான கிருஷ்ணன் இருக்கும் போதும் ஆலயத்துக்கு சென்று வந்ததாகவும் தெரிவிக்கும் அவர் கள்ளனாகப் பார்த்து திருந்தாவிட்டால் சராசரி மனுசர் நாங்கள் என்ன செய்ய முடியும் எனத் தெரிவித்தார். நாளைக்கு நாங்கள் ஏதாவது கேட்டால் என்னுடைய மனைவி பிள்ளைகளின் படங்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பபடும் எனவும் அவர் தெரிவித்தார். அவர் இறுதியாகக் குறிப்பிடுகையில் “அவனொருதன் இருந்து எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான்” எனத் தெரிவித்தார்.
“இவர்களுக்கும் குடும்பம் இருக்கும் தானே? ஏன் இவர்கள் இப்படி நடந்துகொள்கின்றனர்?” என்று கேள்வி எழுப்பிய பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தி, “இவர்கள் வயோதிபப் பெண்களையும் விட்டுவைக்கவில்லை. அவர் இளமையாக இருக்கும் போது விபச்சாரம் செய்தார்” என்று வேறு எழுதுகின்றனர். இவர்களுடைய வீட்டில் உள்ள மனைவி, பெண் பிள்ளைகள், ஏனைய உறவுப் பெண்கள் இவர்களால் என்னபாடு படுவார்கள்” என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் “ஈழபதீஸ்வரர் ஆலயக் குருக்கள், பக்தர்கள் மற்றும் ஆர் ஜெயதேவனின், ரரின் கொன்ஸ்ரன்ரைனின் குடும்ப உறுப்பினர்கள், உறவுகள், இவர்கள், பொதுவெளியில் பெண்களுக்கு ஆபத்தானவர்களாக மாறியிருப்பதையும் குடிபோதையில் சாமம் சாமமாக படங்களைப் பதிவேற்றி வக்கிரங்களைக் கொட்டுவதையும் தடுக்க முன்வர வேண்டும். முடிந்தால் இவர்களுக்கு பெண்ணிய வாதியும் மனித உரிமைவாதியுமான நளினி ரட்ணராஜா குறிப்பிடுவது போல் உளவியல் ஆலோசணைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அப்பெண் மேலும் தெரிவிக்கையில், “இது ஒரு சில பெண்களது பிரச்சினைமட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தினதும் பிரச்சினை. இவ்வாறானவர்களை சமூகமும் அவரது நட்புகளும் உறவுகளும் களையெடுக்க வேண்டும். அப்போது தான், பாரதி கண்ட புதுமைப் பெண்ணால் சமூகவலைத்தளத்திற்கு வர முடியும். இல்லாவிட்டால் அவளையும் பொதுத்தளத்தில் இந்தக் காமுகர்கள் ஒரு பாலியல் தொழிலாளியாக்கி விடுவார்கள்” என்று தெரிவித்தார்.
இவ்விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவர்களுடன் தொடர்புடைய பலரும் தேசம் ஊடகவியலாளர் தன்னுயிர் தொடர்பிலும் கவனமெடுக்குமாறு ஆலோசணை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இலங்கைக்குச் சென்றுவருவதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கின்றனர். இது தொடர்பில் காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கீழே இவ்வாறு ஆண்கள் ஏன் நடந்துகொள்கிறார்கள் என்பது பற்றி மனித உரிமைவாதி நளினி ரட்ணராஜாவுடனான நேர்காணலைக் காணலாம்.




இது பற்றி மேலும் தேசம்நெற்க்கு தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு சட்டத்திரணிகள் ஏற்கனவே பொலிசாரினால் உறுதி மோசடி வழக்கிற்காக கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு, தற்சமயம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று சட்டத்தரணிகளை இவ்வாறான விசாரணைகளுக்காக பொலிசார் கைது செய்யத் தயாராகிய நிலையில், அவர்களுக்கான முன் பிணை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது. அவர்களினது கோரிக்கையினை செவிமடுத்த ஜனாதிபதி ரணில், “கள்ள உறுதி முடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பொலிசாருக்கு அறிவுறுத்துவது சட்டத்திற்கு முரணானது” என்றும் “அவ்வாறான அறிவுறுத்தல்களை தன்னால் வழங்க முடியாது” எனவும் பக்குவமாக தன்னைச் சந்திக்க வந்த யாழ் சட்டத்தரணிகள்: குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன், செலஸ்ரியன் ஆகியோருக்குத் தெரிவித்ததாக அறியவருகின்றது.
ஆனால் அதற்கு மாற்றாக ஜனாதிபதி ரணில் சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணத்தைச் சந்திப்பதற்கு ஒழுங்குபடுத்தித் தருவதாகவும் அவரின் ஆலோசனையை பெறுமாறும், உறுதி முடிக்கும் அந்த சட்டத்தரணிகளிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அமைவாக பெப்ரவரி 13 மாலையே சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணத்தைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டு வழக்கு உள்ள யாரும் அச்சந்திப்பில் கலந்துகொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் சட்டமா அதிபர் அறிவுறுத்தி இருந்தார். அதனால் செலஸ்ரியனைத் தவிர ஏனைய நான்கு சட்டத்தரணிகளும்: குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன் ஆகியோர் சட்டமா அதிபரை சந்தித்துள்ளனர்.
சட்டமா அதிபரைச் சந்திக்கச் சென்ற நான்கு சட்டத்தரணிகளுக்கும் அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அச்சந்திப்பிற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரும் அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வருகின்றது. இவர்களினது கோரிக்கையினை கேட்டு அறிந்து கொண்ட சட்டமா அதிபர், பொலிஸ் உயர் அதிகாரியிடம் இது தொடர்பான விளக்கத்தைக் கோரிய போது, பொலிஸ் அதிகாரியினால் பின்வரும் விடயங்கள் கூறப்பட்டதாக தெரிய வருகின்றது: “சட்டத்தரணி கௌதமன் ஒரே நாளில் ஒரே காணிக்கு 03 உறுதிகள் எழுதியுள்ளார், இதற்கு நாங்கள் எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது?” என்று அப்பொலிஸ் உயர் அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். அதே போன்று பல சட்டத்தரணிகளால் பதிவு செய்யப்பட்ட மோசடி உறுதிகள் தொடர்பான விபரங்களையும் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். இதனைக் கேட்டுக் கொண்ட சட்டமா அதிபர் “பொலிசாரின் நடவடிக்கைகளை தன்னால் தடுக்க முடியாது” என்ற கருத்தைக் கூறியதுடன் அவ்வாறு சட்டத்தரணிகளை கைது செய்வதாயின் அதற்கு முன் தன்னையும் கலந்தாலோசிகும் வண்ணம் பொலிஸ் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதாக அறியவருகின்றது.
“வடக்கு கிழக்கில் காணிகளைக் கணணிப்படுத்துவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முரண்டுபிடித்து தடுத்ததற்கு முக்கிய காரணம், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் எவ்வளவு சொத்துக்கள், காணிகள் இருக்கின்றது என்ற உண்மை ஒரு ‘பட்டனை’ அழுத்தியதும் தெரியவந்துவிடும். அதனாலேயே அவர்கள் இதனைத் தடுத்தனர்” என்கிறார் சமத்துவக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மு சந்திரகுமார். அன்று காணிகளைக் கணணிப்படுத்தியிருந்தால் தற்போது நிலமற்ற பல்லாயிரக்கணக்கானோருக்கு காணி கிடைத்திருக்கும். காணியும் முகவரியும் உள்ளவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான நிலமற்ற தமிழ் குடும்பங்கள் மிகுந்த பயன்பெற்றிருக்கும்” என மு சந்திரகுமார் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.
தமிழரசுக் கட்சியின் சட்டத்தரணியான இரா சம்பந்தன் குடும்பத்துக்கும் கணக்கற்ற சொத்துக்கள் இருந்தது. திருகோணமலை லிங்கநகர் குடியிருப்பும் இரா சம்பந்தனின் சொத்துக்களுக்குள் அடக்கம். 1987இல் அக்காணிகளில் பலாத்காரமாகக் குடியிருந்த சிங்களவர்களை துரத்திவிட்டு அங்கு தமிழர்களைக் குடியேற்றியவர்களில் மு சந்திரகுமாரும் ஒருவர். 2009 இறுதி யுத்தத்திற்குப்பின் அக்காணியில் குடியேறியவர்களிடம் இரா சம்பந்தன் லட்சக் கணக்கில் பணம் கேட்டிருந்தார். இதுபற்றி லண்டன் வந்த இரா சம்பந்தரிடம் தேசம்நெற் வினவிய போது அவர் அக்காணிகள் தன்னுடையதல்ல என்றார். “அக்காணிகள் உங்களுடைய மனைவி மற்றும் வெளிநாடுகளில் உள்ள உங்களுடைய சகோதரர்களின் பெயர்களிலும் தானே உள்ளது” என்பதை தேசம்நெற் அன்று சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும், கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சட்டத்தரணி ஆனந்தசங்கரிக்கும் இன்றும் நிறைய சொத்துக்கள் உள்ளது. அதைவிடவும் அதிகமாக கிளிநொச்சி மண்ணே தெரியாத தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் அப்பன், பாட்டன் வளைத்துப்போட்ட சொத்துக்கள் ஏராளம் உள்ளது. இப்படி பெரும்பாலான சட்டத்தரணிகளுக்கு சொத்துக்களுக்கு எவ்வித குறையும் இருப்பதில்லை. அவர்களுடைய பரம்பரைக்கும் சொத்துக்களுக்கும் நிலத்துக்கும் குறைவில்லை.
யாழ்ப்பாணத்துக்கு என்றொரு பண்பாடும் கலாச்சாரமும் இருக்கின்றது என்று அழுத்திச் சொல்பவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தின் தற்போதைய சமூக சீரழிவுகளை எண்ணி சற்றுத் தலைகுனிவது இயல்பாகிவிட்டது. இதற்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து செல்லும் பலரினதும் செயற்பாடுகளும், புலம்பெயர் நாடுகளிலிருந்து பாயும் பணமும் முக்கிய காரணமாக உள்ளது. புலம்பெயர்ந்தவர்களின் பணம் யாழ்ப்பாணத்தின் பண்பாடு, கலை, கலாச்சாரத்தை இரண்டாம் தரத்துக்கு பின்தள்ளிவிட்டது. ‘காசே தான் கடவுளடா…’ என்று சமூக விழுமியங்களை அப்படியே அது புரட்டிப் போட்டுள்ளது. புலம்பெயர் ஹொட்டேலியர்கள் தாயக மண்ணின் சமூகச் சீரழிவுகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளனர். புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் கள்ள உறுதி எழுதுவதில் வல்லவர்கள் தான். அது இயலாவிட்டால் வேலிப் பிரச்சினையையும் காணிப் பிரச்சினையையும் கூலிப்படைகளை வைத்துக் கையாள்கின்றனர்.
யாழ் நல்லூரடியில் காம விடுதி என்று எல்லோராலும் அறியப்பட்ட லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் குடுமி ஜெயா என்று அறியப்பட்ட ஜெயந்திரனும் ஒரு சட்டத்தரணியின் வாரிசுதான். பாரிஸ் லாகூர்னேயில் உள்ள சிவன் கோயிலின் முதலாளி இவர். இந்த ஹொட்டேலை விஸ்தரிப்பதற்கான காணியை சட்டத்துக்குப் புறம்பாக ஆனால் சட்டபூர்வமாகக் களவாடியே ஹொட்டலை விஸ்தரித்துள்ளார். இலங்கையின் நன்கு அறியப்பட்ட இடதுசாரி அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான மங்கள முனெசிங்கேயின் மனைவி ஞானா முனெசிங்கேக்குச் சேரவேண்டிய காணியையே குடுமி ஜெயா ஆட்டையைப் போட்டார். மங்கள முனெசிங்கே நவ சம சமாஜக் கட்சியில் பாராளுமன்றம் சென்றவர். 1993 இல் உருவாக்கப்பட்ட இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் உருவாக்கப்பட்ட ‘மங்கள முனெசிங்கே ஆணைக்குழுவுக்கு தலைமையேற்றவர். பின்னாட்களில் இந்தியா மற்றும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றியவர். இவருடைய மனைவி ஞானா யாழ்ப்பாணம் நல்லூரடியைச் சேர்ந்தவர்.
தனது ஹொட்டலை விஸ்தரிப்பதற்காக அயலில் உள்ள காணியில் கண் வைத்த குடுமி ஜெயா காணிச் சொந்தக்கரரரைத் தேடி வலைவிரித்தார். அப்போது அக்காணியின் உடமையாளரான ஞானாவுடைய சகோதரி மீனா ரட்ணம் இந்தியாவின் புத்தபக்தியில் உள்ள சாயி பாபாவின் ஆச்சிரமத்தில் இருப்பதை அறிந்து நேரடியாகவே அங்கு சென்றார். அவரோட ஒட்டுறவாகப் பழகி அவருடைய சகோதரிக்கு ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொண்டு வந்துள்ளார். அக்கடிதத்திலிருந்த கையெழுத்தைப் போடப் பழகி அக்காணிக்கான எழுத்துமூலமான உரிமத்தை, கனடாவில் உள்ள குடுமி ஜெயாவின் சகோதரி ரஞ்சினி ராகவனின் பெயரில் பெற்றுக்கொண்டுள்ளார். அதனை திருட்டுத்தனமாக அக்காணியை விற்பதற்கான ஒப்புதலாக மாற்றி அக்காணியை தனக்குத் தெரிந்த ஒருவருக்கு மாற்றி எழுதியுள்ளார். அதன் பின் காணியை தனது வட்டத்திற்குள் உள்ள மூன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மாற்றி எழுதி, இறுதியில் தன்னுடைய பெயருக்கு மாற்றி பெற்றுக்கொண்டார்.
ஒரு பெயர்பெற்ற சிங்கள அரசியல்வாதியின், ராஜதந்திரியின் மனைவிக்கு சேரவேண்டிய காணியை ஒரு சதமும் செலுத்தாமல் ஆட்டையைப் போட்ட குடுமி ஜெயா, ஞானா முனெசிங்கேக்கு நாமத்தைப் போட்டார்.
இவர்கள் மத்தியில் சமூக அக்கறையுடைய சிலரும் இல்லாமல் இல்லை. பிரித்தானியாவில் நீண்டகாலம் சட்டத்தரணியாக இருந்த ரங்கன் தேவராஜன் தற்போது யாழில் சட்டத்தரணியாக கடமையாற்றுகின்றார். இவர் பாதிக்கப்பட்ட பலருக்கு அவர்களுடைய காணிகளை சட்டப்படி பெற்றுக்கொடுப்பதில் கட்டணம் வாங்காமல் பணியாற்றி வருகின்றார். இவர் பொதுவில் சட்டத்தரணிகள் பற்றிக் குறிப்பிடுகின்ற போது “சட்டத்தரணிகள் தொழில் என்பது மோசமான ஒரு தொழிலாக்கப்பட்டுவிட்டதுஇ மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் ஒரு தொழிலாக இது மாறி இருக்கின்றது” என்று இவர் லண்டனில் இருக்கின்ற போது தன்னுடைய நண்பர்கள் மத்தியில் குறிப்பிடுவார். இவர் தன்னுடைய சேவை மனப்பான்மையால் பிழைக்கத் தெரியாதவர்’ என்று பெயரெடுத்தவர். லண்டனிலும் கட்டணம் வாங்காமலேயே குரலற்றவர்களின் குரலாக வாதாடியவர்.
அன்று தமிழ் ஹவுசிங்கின் Thamil Community Housing Association பொறுப்பதிகாரியாக இருந்த, தற்போதைய ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் மாறன் என்பவரை வேலையால் கலைக்க எடுத்த அத்தனை முயற்சிகளையும் ரங்கன் தேவராஜன் தொழில் நீதிமன்ற விசாரணை தொடங்கிய சில நிமிடங்களிலேயே உடைத்து மாறனுக்கு நிதியைப் பெற்றுக்கொடுத்தார். கணிசமான தொகை இழப்பீட்டையும் பெற்றுக் கொடுத்தார். இந்த வழக்கை ரங்கன் தேவராஜன் நண்பருக்கான உதவியாகவே வாதாடி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைப் பற்றி புறம்தூற்றி அவர் 20,000 பவுண்டுகள் தனக்குத் தரவேண்டும் என லண்டனில் தவறணையில் சட்ட நிறுவனம் நடத்தும் ரரின் கொன்ஸ்ரன்ரைன் என்பவர் சண்டே லீடர் பத்திரிகை மற்றும் சமூக வலைத்தளங்களில் எழுதியிருந்தார். இறுதியில் ரரின் கொன்ஸ்ரன்ரைன் நீதிமன்றில் மண்கவ்வியதுடன் அபராதமும் செலுத்தப் பணிக்கப்பட்டார். இது பற்றி சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் வருமாறு குறிப்பிடுகின்றார்:
(Cartoon: Morten Morland (The Times, 2010)
