இஸ்ரேல் – பாலஸ்தீன்

இஸ்ரேல் – பாலஸ்தீன்

பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேல் – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் !

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெத்தலகேமில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்த பள்ளி கட்டிடமானது ஸதா விரோதமாக கட்டப்பட்டதாகவும் அங்கு படிக்கும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறி அப்பள்ளியை இடிக்க இஸ்ரேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பேரில் இஸ்ரேல் அதிகாரிகள் அப்பள்ளியை இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அங்கு கல்வி பயின்று வந்த குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது. இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என  தெரிவித்துள்ளது. பள்ளி இருந்ததற்கான தடையாமே இல்லாமல் இடித்து அளிக்கப்பட்ட சம்பவத்தால் பாலஸ்தீனியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

பாலஸ்தீனிய போராளி குழுக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 5 வயது சிறுமி உட்பட 10 பேர் பலி !

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய போராளி குழுக்களுக்கு இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், காஸாவில் இஸ்லாமிய ஜிஹாத் இலக்குகள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலில், 5 வயது சிறுமி மற்றும் 23 வயது பெண் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 75 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தீவிரவாதிகள் என்று இஸ்ரேல் தெரிவிக்கின்றது.

மேலும், இஸ்லாமிய ஜிஹாத் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான தைசீர் அல் ஜபாரி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்லாமிய ஜிஹாத்தின் ஆயுதப் பிரிவான குத்ஸ் படைப்பிரிவின் தளபதியாகவும், அதன் இராணுவ சபையின் உறுப்பினராகவும் இருந்தார்.

இந்த வார தொடக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மற்றொரு மூத்த போராளி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடனடி அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவை குறிவைப்பதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.

பாலஸ்தீனிய போராளிகள் பல மணிநேரங்களுக்குப் பிறகு ரொக்கெட்டுகளை சரமாரியாகத் தாக்கினர், மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன.இஸ்லாமிய ஜிஹாத் 100 ரொக்கெட்டுகளை ஏவியது.

இஸ்ரேல் மற்றும் காசாவின் போர்க்குணமிக்க ஹமாஸ் ஆட்சியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளில் நான்கு போர்கள் மற்றும் பல சிறிய போர்களில் ஈடுபட்டுள்ளனர்.