பா.உ சிறிதரன்

பா.உ சிறிதரன்

பா உ சிறிதரனை கட்சியிலிருந்து நீக்க, திருமலையில் தமிழரசுக் கட்சி கூடுகின்றது ! பா உ சிறிதரன் கலந்துகொள்ளவாரா ? 

பா உ சிறிதரனை கட்சியிலிருந்து நீக்க, திருமலையில் தமிழரசுக் கட்சி கூடுகின்றது ! பா உ சிறிதரன் கலந்துகொள்ளவாரா ?

நாளை 18, திருகோணமலையில் தமழரசுக் கட்சியின் மத்திய குழு கூடி, உள்ளுராட்சித் தேர்தல், கட்சியின் முடிவுகளுக்கு புறம்பாகச் செயற்பட்டவர்கள் தொடர்பிலான முடிவுகள், கட்சி மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் வைக்கப்படும் தமிழர் பேரவைத் தீர்வுத் திட்டம் தொடர்பான கட்சி நிலைப்பாடு, முன்னைய மட்டு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது என்பன பற்றி ஆராயப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ் கிளிநொச்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பா உ சிறிதரன் கட்சி நிலைப்பாடுகளுக்கு மாறாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தது, மற்றும் கட்சி நிலைப்பாடுகளுக்கு புறம்பாக நடந்துகொள்வதற்கு எதிரான குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்பட்டு, பா உ சிறிதரனை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தமிழரசுக் கட்சி வட்டாரங்களில் இருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட குழப்பநிலைகளாலும் பா உ சிறிதரனுக்கு ஆதரவு தெரிவக்கக் கூடியவர்கள் கட்சியிலிருந்து ஏற்கனவே வெளியேறியும் உள்ளனர். கட்சி மத்திய குழவிற்குள் தற்போது பா உ சிறிதரனின் ஆதரவுத்தளம் என்ன நிலையில் இருக்கின்றது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் நாளைய மத்திய குழக் கூட்டத்தில் பா உ சிறீதரன் கலந்துகொள்ளமாட்டார் எனவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை. ஜனவரி 18 பா உ சிறிதரனின் முடிவெடுக்கும் நாளாக அமையலாம், இல்லையேல் இந்த இழுபறி இன்னும் தொடரலாம். எம் ஏ சுமந்திரன் மீதான அடுத்த கட்டத் தாக்குதலுக்கு புலம்பெயர் அனுசரணையில் இயங்கும் ஊடகங்கள் தயாராகி வருகின்றன.