பாதிக்கப்பட்ட யாழ். மாவட்ட அரச ஊழியர்களுக்கு முற்பணம்

sarath-amunugama.jpgயாழ்ப் பாணம் மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பெய்த கடும் மழை மற்றும் கடும்புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட யாழ். மாவட்ட அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரணையை பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சமர்ப்பித்திருந்தார். இதன்படி பாதிக்கப்பட்ட யாழ். மாவட்ட அரச ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் முற்பணமாக வழங்கப்படும். இந்தத் தொகையை அவர்கள் 10 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *