இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சில் உடன்பாடு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதேனும் நேர்ந்தால், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று சென்னையில் நடந்த கூட்டத்தில் வைகோ பேசியிருக்கிறாரே என்று நெய்வேலி வந்த தா.பாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர், நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். வைகோ அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழகத்தில் எப்போதும் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். 50 ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் இனச்சிங்கலைத் தீர்க்கத்ததன் விளைவாக, அது இனப் படுகொலையாக அரசு பயங்கரவாதமாக மாறி இருக்கிறது. இனப் படுகொலைக்கு தீர்வு காணாமல் இந்திய அரசு ராணுவ ஆலோசனை மற்றும் போர் தளவாடங்களைக் கொடுத்து உதவுகிறது. இதனல் இந்தியாவின் பெருமையை பாழடித்து விட்டது மத்திய அரசு என்றார்.