பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் -வைகோ

vaiko-black-flag.jpgஇலங்கைத் தமிழர்களைக் காக்க வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

சென்னையி்ல் நடந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பாஜக தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் வைகோ பேசுகையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றார். இனப்படுகொலையைக் கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது என்பதை வலியுறுத்தியும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தமிழர்கள் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • chandran.raja
    chandran.raja

    பிராபாகரன் தற்கொலை செய்து கொண்டாலும்இரத்த ஆறு ஓடுமா?
    தமிழகமக்களே! திருமாவளவன் அரசியலில் விழிப்பாக இருங்கள். ஈழத்தமிழ் மக்களின் நிலா வீசிய காலங்களையும் வாழ்வையும் அழித்தது
    பிரபாகரனும் அவர் சிந்தனைக்கு உட்பட்ட புலிகளுமே காரணம் என்பதை மறந்து விடாதீர்கள். ஈழமக்களுக்கு ஏற்பட்ட துயரவாழ்வை திருமாவளவன் வை.கோபாலசாமி ராமதாஸ் சுப வீரபாண்டியன் மூலமாக ஏற்படுத்தி விடாதீர்கள்.

    Reply
  • padamman
    padamman

    சும்மா பிலிம் காட்டவேண்டாம் ரத்த ஆறு ஓடும் பால் ஆறு ஓடும் என்று வேறு வேலையிருந்தால் (காக்காபிடிப்பது) பார்க்கவும்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    முதலில் வைகோவை பிடித்து உள்ளே போடனும். இப்படியான பேச்சுகள் மூலம் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு தன் அரசியல் இலாபங்களை நிறைவேற்ற துடிக்கின்றார். இவரது இப்படியான வன்முறைகளைத் தூண்டும் பேச்சுகளால்த் தான் ஜெயலலிதா கூட இவரை களற்றிவிடத் தீர்மானித்து விட்டார். வைகோவின் இந்தப் பேச்சே இவருக்கு வன்னிமக்கள் எக்கேடு கெட்டாலும் பறுவாயில்லை, புலித்தலைவர் தப்ப வேண்டுமென்ற அவரின் உண்மையான நிலைப்பாட்டைக் காட்டுகின்றது. புலித்தலைவர் இருக்கும் வரை தானே வைகோவாலும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும்.

    Reply
  • thurai
    thurai

    வை.கோ சொல்வது சரியே.
    மக்களின் நலன்ஙகளில் தனக்கோ, தன்னைத்தானே ஈழ்த்தமிழர் தலைவரெனெ கூறும் பிரபாகரனிற்கோ அக்கறையிலலை. மிகமுக்கிய்ம் தன் உயிர், தன் குடும்பம், தனது சொத்துக்கள்.

    துரை

    Reply
  • thangam
    thangam

    பிரபாகரன் இல்லை என்றால் உழைப்பு இல்லையே அது தான்.

    Reply
  • பல்லி
    பல்லி

    சாமி கோபால சாமி. இது தேவையா?? இப்படிதான் கரடிபோக்கில் (கிளினொச்சி) இருந்து தமிழ்செல்வன் பேட்டி கொடுத்தார். புலியை சீண்ட நினைத்தால் கொழும்பு ரத்தாறாக ஓடுமென. ஆனால் கரடிபோக்கும் இல்லை தமிழ் செல்வனும் இல்லை. தயவு செய்து தமிழக மக்களை குழப்பி ஈழதமிழர் மாதிரி அகதியாக்க வேண்டாம். அகதியாகி நாம் படும் துன்பம் தாங்கள் அறிய வாய்ப்பில்லை. அகதியாக வசதியாகவோ அல்லது ஏழ்மையாகவோ வாழ்ந்து பாத்தால்தான் அதன் அருமை தெரியும்.

    Reply
  • மாயா
    மாயா

    வைகோ சிறை செல்லத் துணிந்துவிட்டார்.
    எல்லாம் முடிந்த பிறகு வெளியே வந்து நான் மட்டும் வெளியே இருந்திருந்தால் தம்பி பிரபாகரனை காப்பாற்றியிருப்பேன் என்று மீண்டும் கர்ஜிப்பார்….என்ன முடிவே பண்ணிட்டீங்களா என்று கேட்கிறீங்களா? புலிகளே முடிவை தெரிந்துவிட்டார்கள். தமிழீழ பிரச்சனை தொடராது. காசு அடிச்ச பிரச்சனை மட்டும் தொடரும்….அடுத்தவங்க நிம்மதியா இருக்கலாம்.

    Reply