இன்று ஜே.வி.பி. கொழும்பில் ஆர்ப்பாட்டம்

jvp-0804.jpgமக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகக் கோஷமெழுப்பினர்.

இங்கு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:

“மேல் மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எமது கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கை உக்கிரமடைந்து எமது கட்சி ஆதரவாளர் ஒருவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு மூன்று நாட்களாகியும், பொலிஸார் ஒரு சந்தேகநபரைக் கூட இதுவரை கைது செய்யவில்லை. தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறியின் வாகனத்தில் வந்தவர்களே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அனைத்து சாட்சியங்களுடன் இதனை நாம் பொலிஸாருக்கு வழங்கியுள்ளோம்.

அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக பொலிஸார் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எமது கட்சியை அழிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கும் அரசாங்கத்திற்கு நாம் சரியான பாடம் புகட்டுவோம்”. இவ்வாறு அவர் கூறினார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *