பொறியியல் மாணவர்கள் இருவர் தற்கொலை – பொறுப்புக் கூறவேண்டியது யார்?

தமிழ் சமூகத்தில் இடம்பெறும் தற்கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய இடத்தில் பலர் உள்ளனர். அதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு பெரும் பங்குண்டு. ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடப்பதோ வேறு. 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் துறைத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் ஒருவர் துணைவேந்தர் முன்னிலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு, அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளது. ஆனாலும் அது தன் சமூகப் பொறுப்பிலிருந்து விடுபட முடியாது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் வருடாந்தம் ஒரு மாணவராவது தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையுள்ளது.

 

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவனான மன்னாரைச் சேர்ந்த கியூமன் மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையில் தூக்கிட்டு உயிர் மாய்த்திருந்தார்.

 

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில் தூக்கிட்டு உயிர் மாய்த்திருந்தார்.

 

இது தொடர்பான மேலதிகமான தகவல்களை அறிய கீழுள்ள தேசம் திரை Link ஐ Click செய்யவும்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *