யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மாணவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் வெவ்வேறு இடங்களில் இன்று (16.06) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
![](https://www.thesamnet.co.uk//wp-content/uploads/2023/06/354222361_632731025571733_729050802893856689_n-214x250.jpg)
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் நற்குணராசா குகதீஷ் (வயது 22) பல்கலைக்கழக மாணவர் விடுதியில் அவர் தங்கியிருந்த அறையின் கழிப்பறையிலிருந்து இன்று (16.06) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சி வரணி பகுதியை சேர்ந்த இவர் வரணி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை (16.06) சடலமாக மீட்கப்பட்
![](https://www.thesamnet.co.uk//wp-content/uploads/2023/06/23-648c329e5afe6-250x167.jpeg)
டுள்ளார். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியின் பழைய மாணவன். அத்தோடு ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தின் ஆண்களுக்கான பழுதூக்கல் அணியின் உபதலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.