சிறுவன் ஒருவன் போன்று பந்து வீசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியிருந்தது. இதனை அவதானித்த லசித் மாலிங்க இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு தனது முகநூல் பதிவொன்றில் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், குறித்த சிறுவன் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
![May be an image of 1 person, child, smiling and tree](https://scontent.fcmb2-2.fna.fbcdn.net/v/t39.30808-6/352328098_708555064372055_5309439653698243683_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=f2KaK9d9BfgAX-m2glM&_nc_ht=scontent.fcmb2-2.fna&oh=00_AfAJ-iBBHY7zK4waOwhjzLhA1dru9erqw_ojz5IVfuWgSg&oe=64837CF2)
வீரவில பகுதியை சேர்ந்த தரம் ஐந்தில் கல்வி கற்கும் தினித் என்ற சிறுவனே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இருப்பினும், லசித் மாலிங்க தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ளமையினால் இலங்கைக்கு வருகை தந்த உடன், குறித்த சிறுவனை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், சிறுவனின் திறமையை பாராட்டி சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளரிடம் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுத்தரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.