பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஷியா மசூதி ஒன்றின் அருகில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தப்பட்சம் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 40 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
சக்வால் நகரத்தில் இடம்பெற்ற மத வைபவத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மசூதியின் முன்பாக ஒரு சிறுவனே இந்த தாக்குதலை நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர்வாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்து அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் எதிராக கோஷமிட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார்