கொழும்பு விவேகானந்த சபையின் பொதுச் செயலாளரும், அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவரும், இந்து மாமன்ற சமய விவகாரக் குழுவின் தலைவருமான கே. இராஜ புவனேஸ்வரன் காலமானார். யாழ்ப்பாணம் சுதுமலையில் 1942ம் ஆண்டு பிறந்த இவருக்கு இறக்கும் போது வயது 67 ஆகும்.
சிறந்த சமயத் தொண்டரும், தீவிர இறைபக்தியாளருமான சிவஞானச் செல்வர் இராஜ புவனேஸ்வரன், இலங்கை வங்கியில் சிரேஷ்ட முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், இந்நாட்டில் சைவசமய வளர்ச்சிக்காக உழைத்த சிவத்தொண்டராவார். இவர் சிவத்தொண்டர் அணி ஊடாக நாடு முழுவதும் தீவிர பணிகளில் ஈடுபட்டு வந்தார்.