பரிசுத்த வாரத்தில் பாடசாலைகளில் தவக்கால வழிபாடுகளை மேற் கொள்ள கல்வியமைச்சு அங்கீகாரமளித்துள்ளது. கத்தோலிக்க மாணவர்கள் 15 பேர் இருப்பார்களானால் அங்கு இவ் வழிபாடுகளை முன்னெடுக்கலாம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க மக்கள் அனுஷ்டிக்கும் தவக்காலத்தின் பரிசுத்த வாரம் இன்று குருத்தோலை ஞாயிறோடு ஆரம்பமாகிறது. இதனையொட்டி மேற்படி அங்கீகாரத்தை கல்வியமைச்சின் செயலாளர் எம். எம். என். டீ. பண்டார வழங்கியுள்ளார்.
கல்வியமைச்சின் கத்தோலிக்க சமய ஆலோசனைச் சபையின் அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இணங்கவே இவ் வங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2009/08 ஆம் இலக்கமுடைய சுற்று நிருபத்தினையும் இது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.