கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப்பொதுதராதர சாதாரண பரீட்சைகளின், கொழும்பு மற்றும் ஜெயவர்த்தன புர பிரதேசங்களின் பரீட்சை முடிவுகளை இன்றைய தினம் வெளியிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் புற மாவட்டங்களுக்கான முடிவுகளை வரும் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு அனுப்பவுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.