பொலனறுவை வெலிகந்த பிரதேசத்துக்குட்ப்பட்ட கள்ளிச்சவடமுனையில் அமைந்திருந்த அமைச்சர் வி.முரளிதரன் அவர்களின் அரசியல் காரியாலயம் மீது நேற்றிரவு 10.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் அரசியல் காரியாலத்தில் அரசியல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊத்துசேனையை வசிப்பிடமாக கொண்ட முத்திலிங்கம் சசிகரன் என்பவர் (வயது 20) உயிரிழந்துள்ளதுடன் இக்காரியாலத்துக்கு பொறுப்பாக இருந்த முகிலன் என்பவர் காயமடைந்து பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.