அவுஸ்ரேலியா வெளியிட்ட நாண்யத்திற்கு வியட்நாம் எதிர்ப்பு!

தெற்கு வியட்நாமின் மஞ்சள் கொடி அடங்கிய நாணயத்தை அவுஸ்திரேலியா வெளியிட்டதற்கு வியட்நாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இருதரப்பு உறவுகளில் நேர்மறையான போக்குகளை நிராகரிப்பதாக கூறி, நாணய அச்சிடலை நிறுத்துமாறு அவுஸ்திரேலியாவை வியட்நாம் கேட்டுக் கொண்டுள்ளது என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வியட்நாமில் இருந்து தனது படைகள் மீள பெறப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அவுஸ்திரேலிய இந்த வரையறுக்கப்பட்ட இரண்டு டொலர் நாணயத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

மூன்று பட்டைகள் கொண்ட மஞ்சள் கொடியுடன் பொருட்களை வெளியிடுவதையும், புழக்கத்தில் விடுவதையும் கடுமையாக எதிர்ப்பதாக வியட்நாமின் வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நாணயத்தின் முகப்பில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவமும், முகப்பில் UH-1H உலங்கு வானூர்தியும் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *