கொழும்பிற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவை ஆரம்பமாகவிருக்கின்றது.”புதிய உதயதேவி நகரங்களுக்கிடையிலான கடுகதி சேவை” என இந்த ரயில் சேவைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
தினமும் காலை 7.45 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் இந்த ரயில் மாலை 4.30 இற்கு கொழும்பு கோட்டையை சென்றடையும் .கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 10.30 இற்கு புறப்படும் ரயில் மாலை 6.40 இற்கு மட்டக்களப்பை சென்றடையும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.இதன் பிரகாரம் முதலாவது ரயில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்படவிருக்கின்றது.
ஏறாவூர் ,வாழைச்சேனை ,வெலிக்கந்தை ,பொலன்னறுவை ,ஹிங்கராகொட ,கல்லோயா சந்தி ,கெக்கிராவை ,மாகோ சந்தி ,குருநாகல் ,பொல்காவெலை சந்தி ,வியாங்கொடை ,மற்றும் ராகமை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே குறிப்பிட்ட ரயில் நிறுத்தப்படும் என இது தொடர்பாக மட்டக்களப்பு ரயில் நிலையத்தின் பிரதம அதிபர் கூறுகின்றார்.