பிரதியமைச்சர் நிஜாமுதீனின் இணைப்பு செயலாளரின் துஷ்பிரயோகம் அம்பலம்

snijamudeen.jpgபிரதியமைச்சர் எஸ். நிஜாமுதீனின் இணைப்புச் செயலாளர் எஸ். எல். லாபீர் பிரதியமைச்சரின் பெயரைப் பயன்படுத்தியும் அமைச்சின் பெயரைப் பயன்படுத்தியும் பல்வேறு துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர்,

லாபீர் என்பவரை கடந்த 29 ஆம் திகதிமுதல் அவரது பதவியை இடைநிறுத்தி யுள்ளதாகவும் அவரது சகல துஷ்பிரயோகங்களையும் கண்டு பிடித்து சட்டத்துக்கு முன் நிறுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இரகசியப் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

மேற்படி நபர் கடந்த ஒரு வருடகாலமாக தனது தனிப்பட்ட நியமனத்தின் பேரில் அக்கரைப்பற்று பகுதிகளில் தனது அரசியல் நடவடிக்கைக்கான இணைப்புச் செயலாளராக பணியாற்றினார்.

இக்காலத்தில் எனது அமைச்சின் கடிதத் தலைப்பையும் தனியார் டிஜிட்டல் நிறுவனத்தின் உதவியுடன் எனது கையெழுத்தையும் ஸ்கான் பண்னி வேறு ஒருவருக்கு இணைப்பாளர் அடையாள அட்டையும் வழங்கியுள்ளார். அத்துடன் இவர் கிழக்கு மாகாண அமைச்சர் ரீ. நவரத்தினராஜாவின் இணைப்புச் செயலாளராகவும் அடையாள அட்டையொன்றை தயாரித்து எடுத்துள்ளதாக குறித்த டிஜட்டல் நிறுவனம் எனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

அத்துடன் எனது அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் ஊடாக 315 தாதி பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பயிலுனர்களிடமிருந்து பல்வேறு துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பயிலுனர்கள் எனக்கு அறிவித்துள்ளனர். மேலும் எனது வாகனமொன்றையும் சட்டரீதியற்ற முறையில் போலி ஒப்பந்தமொன்றை தயாரித்து தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முயற்சித்துள்ளமையும் அம்பலத்துக்கு வந்திருப்பதாகவும் பிரதியமைச்சர் கூட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *