8 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு 156 ஆண்டுகள் சிறை !

அமெரிக்காவில் 8 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த நபரொருவருக்கு 156 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – இண்டியானா மாகாணத்தை சேர்ந்த டாரெல் குட்லோ என்பவர் 8 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொள்ளை மற்றும் வளர்ப்பு நாயை கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், இவ்வாறு மொத்தம் 57 குற்ற வழக்குகள் இவர் மீது பதிவாகியுள்ளது.

இந்த வழக்குகள் இண்டியானா மாகாண நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இதில் டாரெல் குட்லோ மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளது.

இதையடுத்து டாரெல் குட்லோவுக்கு 156½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *