அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தனது பிணை நிபந்தனைகளில் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார்.
இந்த வழக்கு சிட்னி டவுனிங் சென்டர் பிராந்திய நீதிமன்றத்தில் இன்று (06) எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்படி, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக வுக்கு விதிக்கப்பட்டிருந்த சமூக வலைத்தளத் தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.