ஏழை பெண்களுக்கு ரூ.1 லட்சம் திருமண உதவி; சிரஞ்சீவி வாக்குறுதி

shiranjeevi.jpgபிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் நடிகர் சிரஞ்சீவி அந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி நகரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-ஆந்திராவில் இதுநாள் வரை தெலுங்கு தேசம்- காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.அவர்களால் ஏழைகள் வாழ்வில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட வில்லை.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளின் வறுமை ஒழிக்கப்படும்.
 
திருமணமாகாத ஏழை பெண்களுக்கு ரூ.1லட்சம் திருமண உதவித்தொகை வழங்குவோம். இத்திட்டத்திற்காக அரசு சார்பில் வங்கியில் ஒரு டெபாசிட் செய்யப்படும். அனைவருக்கும் இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கப்படும்.
 
இதேபோல் கியாஸ் சிலிண்டர் ரூ.100-க்கு வழங்கப்படும்.மேலும் ஒரு வீட்டுக்கு தேவையான சமையல் பொருட்களை ரூ.100-க்கு வழங்கப்படும். கடன் எதுவும் வாங்காமல் நிம்மதியாக வாழ இத்தகைய திட்டங்கள் செயல் படுத்தப்பபடும். இவ்வாறு அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *