இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகும் ஆபத்து ஐ.நா. அதிகாரிகள் அச்சம்

un-logo.jpgஇலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின்போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படும் பயங்கர நிலை உருவாகி உள்ள தாக ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் மோதலில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண் டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையின் அனுசரணையாளராக விளங்கிய நோர்வே இரு தரப்பையும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு கேட்டுக்கொள்ளும் முயற்சியை மேற்கொள்கிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள்சபையை மையமாகக் கொண்ட செய்திச் சேவையொன்று இது தொடர்பாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலில் சிக்குண்டுள்ள மக்களைப்  பலவந்தமாக வெளியேற்ற வேண்டும் எனத் தெரிவித்த ஐ.நா. அதிகாரி, அதற்காக ஐக்கிய நாடுகள் என்ன செய்ய முயல்கிறது என்பதை விவரித்தார்.

மோதலை இடைநிறுத்தி சர்வதேச கண்காணிப்பாளர்கள் பொதுமக்களை
வெளியேற்ற உதவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இரு தரப்பும் ஏற்காத நிலையில் இரு தரப்பையும் இணங்கச் செய்வதற்கான திட்டமொன்று குறித்து அதிகாரி தெளிவுபடுத்தினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படும் அதி பயங்கரமான நிலை குறித்து நாங்கள் அச்சமடைந்துள்ளோம். நோர்வே சந்தடியற்ற விதத்தில் இரு தரப்புடனும் பேசி உடன்பாடொன்றை எட்ட முயல்கிறது எனத் தெரிவித்த அதிகாரி, எனினும் இதனை சாதிப்பதற்கு நோர்வேயிடம் போதிய தொடர்புகள் உள்ளனவா என்ற சந்தேகம் ஐக்கிய நாடுகளில் உருவாகி வருகின்றது என்றார். அமெரிக்கா தனது இராணுவத்தைப் பயன்படுத்தி மக்களை வெளியேற்ற உதவுவதற்கு முன்வந்தது. எனினும் அதுவும் நிராகரிக்கப்பட்டது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *