அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமையை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய முயற்சி – இழுத்தடிப்பு செய்யும் அதிகாரிகள்!

அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமையை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முயற்சித்து வரும் நிலையில், அமெரிக்க அதிகாரிகளால் இன்னும் இது தொடர்பில் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற போது எந்தவொரு நாடும் புகலிடம் வழங்கத் தவறியதையடுத்து, தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்குமாறு கோட்டாபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அமெரிக்க குடியுரிமைக்கான கோட்டாபயவின் முயற்சிகள் இன்னும் வெற்றிபெறவில்லை என்பதை அமெரிக்க தூதரகத்தின் ஆதாரம் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனாலும், தற்போது குடும்பத்துடன் டுபாயில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து அமெரிக்கா செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *