கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாசிறி எம்.பி.யிடம் விசாரணை

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று திங்கட்கிழமை கொழும்பு குற்றப்பிரிவினால் சுமார் ஒருமணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

அண்மையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளரான தம்மிக கங்கனாத் திசாநாயக்க கடத்தப்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவதினத்தின்போது பிற்பகல் 4 மணியளவில் பொதுத் தொலைபேசிக் கூண்டிலிருந்து கடத்தல்குழு தம்மிக திசாநாயக்காவுடன் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும் அதனையடுத்து 10நிமிடங்கள் கழித்து அதே இலக்கத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறிஜயசேகரவுக்கும் ஒரு அழைப்பு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தே அவரிடம் குற்றத் தடுப்புப்பிரிவினர் விசாரணை நடத்தி வாக்கு மூலமொன்றைப் பெற்றுக் கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *